என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
    • நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    சமூக வலைதள தடை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தால் கடந்த செப்டம்பர் 9 ஆம் நீதி நேபாள் பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் நேற்று இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.

    அதேவேளை நேபாள பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி சுசிலா கார்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் " நேபாளத்தில் திருமதி சுசிலா கார்கி தலைமையில் ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    நெருங்கிய அண்டை நாடு மற்றும் நீண்டகால வளர்ச்சி கூட்டாளியாக, இந்தியா நமது இரு மக்கள் மற்றும் நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்" என்று தெரிவித்திருந்தது.   

    • டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
    • சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார்.

    த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார்.

    இந்நிலையில் மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விஜயை காண விமான நிலையத்தில் அதிகாலை முதல் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    கட்டுக்கடங்காத கூட்டம் வந்த காரணத்தினால் உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் தடுப்பு வேலி மற்றும் கயிறு கட்டி அவர்களை கட்டுப்படுத்தினர்

    தடுப்புகளை தாண்டி விமான நிலைய வளாகத்துக்குள் தொண்டர்கள் நுழைந்தனர். விஜய், பிரசார பஸ்ஸில் ஏறி புறப்பட்டதும் அவரை ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பின் தொடர்ந்தனர்.

    மேலும் தொண்டர்கள் சூழ்ந்த காரணத்தினால் பிரசார வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    மேலும் காவல்துறை நிபந்தனைகளை மீறி அவரது பிரசார வாகனத்தை தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றனர்.

    • கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும்.
    • டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும்.

    கியா நிறுவனம் வயர்லெஸ் போன் மிரரிங் அடாப்டர் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 344 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது வயர்லெஸ் போன் மிரரிங் கொண்ட அனைத்து கியா மாடல்களிலும் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை கியா டீலர்ஷிப்கள் மற்றும் சேவை மையங்களில் வாங்கி பொருத்தலாம்.



    பல்வேறு கியா மாடல்களில் இது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சமாகும். ஏனெனில் அதன் டாப் எண்ட் மாடல்களில் கூட வயர்லெஸ் கனெக்டிவிட்டி வழங்காத சில நிறுவனங்களில் கியா ஒன்றாகும். கியா நிறுவனம் ஏற்கனவே அதன் முழுமையான கார்களின் டாப் எண்ட் மற்றும் மிட் ரேஞ்ச் மாடல்களில் வயர்லெஸ் சார்ஜர்களை வழங்குகிறது.

    வயர்டு போன் மிரரிங் கொண்ட அனைத்து மாடல்களுக்கும் ஹூண்டாய் இதை வழங்கத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு இந்த ஆப்ஷன் வருகிறது.

    • சில பகுதிகளில் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

    ரஷியாவின் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் இன்று காலை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     7.4 ரிக்டர் அளவில், 39.5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் இருந்ததாக பதவு செய்துள்ளது.

    கம்சட்காவில் சில பகுதிகளில் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    கம்சட்காவுக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஜப்பானுக்கு இதுவரை எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

    கடந்த ஜூலை மாதத்தில் இதே பகுதியில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஜப்பான், அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளான ஹவாய், சிலி, கோஸ்டாரிகா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கம்சட்கா தீபகற்பம் மிகத் தீவிர நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு 1952-ல் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், இதுவரை பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். 

    • புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    அந்த வகையில் கடந்த செவ்வாய்கிழமை இதுவரை இல்லாத உச்சமாக சவரன் ரூ.81,200-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் நேற்று சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 81,920-க்கு என்று புதிய உச்சத்தில் விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,220-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 143 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,920

    11-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200

    08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-09-2025- ஒரு கிராம் ரூ.142

    11-09-2025- ஒரு கிராம் ரூ.140

    10-09-2025- ஒரு கிராம் ரூ.140

    09-09-2025- ஒரு கிராம் ரூ.140

    08-09-2025- ஒரு கிராம் ரூ.140

    • 2026 கவாசகி நிஞ்ஜா ZX-10R மாடலில் உள்ள எஞ்சின் 193.1bhp பவர் மற்றும் 112Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது.
    • பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 330mm டிஸ்க்குகள், பின்புறம் ஒற்றை 220mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி நிறுவனம் 2026 நிஞ்ஜா ZX-10R பைக்கை ரூ. 19.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது ரூ. 18.50 லட்சம் விலை கொண்ட 2025 மாடலை விட ரூ. 99,000 அதிகமாகும். விந்தையாக, இந்த மோட்டார்சைக்கிள் அதன் சக்தி மற்றும் டார்க் உள்ளிட்டவைகளில் லேசான சரிவை சந்தித்துள்ளது.

    சமீபத்திய மாடலோடு சேர்த்து, 2025 நிஞ்ஜா ZX-10R மாடலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பழைய மாடலின் இருப்பை அகற்றுவதற்கான கவாசகியின் உத்தியாக புதிய மாடலின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. புதிய மாடலை அதிக விலைக்கு பட்டியலிடுவது நிச்சயமாக 10R ஐ வாங்குபவர்களை பழைய மாடலைத் தேர்வுசெய்யவும், சிறிது பணத்தை மிச்சப்படுத்தவும் ஊக்குவிக்கும்.

    மேலும், பழைய மாடலின் சற்று அதிக பவர் மற்றும் டார்க் 2026 மாடலை விட அதைத் தேர்வுசெய்ய மற்றொரு காரணமாகும். அதனுடன் சேர்த்து, 2025 மாடலில் ரூ. 1.50 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தெளிவாக மிகவும் நியாயமான மற்றும் சிறந்த தேர்வாக அமைகிறது. தள்ளுபடி சலுகை செப்டம்பர் 30ஆம் தேதியோ அல்லது ஸ்டாக் இருக்கும் வரையிலோ செல்லுபடியாகும்.



    2026 கவாசகி நிஞ்ஜா ZX-10R மாடலில் உள்ள எஞ்சின் 193.1bhp பவர் மற்றும் 112Nm டார்க் திறன் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலின் எஞ்சினை விட 7bhp மற்றும் 2.9Nm குறைவு ஆகும். இவை தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

    அம்சங்களின் பட்டியலில் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி கொண்ட TFT கன்சோல், பல ரைடு மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ், குரூயிஸ் கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், எஞ்சின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும். பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரட்டை 330mm டிஸ்க்குகள், பின்புறம் ஒற்றை 220mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

    இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார். மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் குறித்து விஜய் பேச வாய்ப்பு உள்ளது.

    திருச்சியில் பேசும்போது அந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அவர் பட்டியலிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    இந்நிலையில் 5 வருடங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்களை உயிருடன் உருகச் செய்யும் மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தை சீனா பயன்படுத்தியதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சி செனட்டர் பில் ஹாகெர்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    டென்னசி மாகாண செனட்டர் பில் ஹாகெர்டி பேசுகையில், "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்புகளும் அவநம்பிக்கையும் உள்ளன.

    சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இந்தியாவும் ஒரு சர்ச்சைக்குரிய எல்லையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன, அப்போது சீனா இந்திய வீரர்களை உருக்க ஒரு மின்காந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியது" என்று தெரிவித்தார்.

    பெயரை குறிப்பிடவில்லை எனினும், இது 2020 இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். 

    • இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
    • பாராட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

    இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.

    இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.

    இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பாராட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் எம்.பி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர். திரையுலக பிரபலங்கள் விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவை வாழ்த்தி உரையாற்ற உள்ளனர்.

    இளையராஜா பொன்விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • காசா போருக்கு தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
    • முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதை இந்தியா தவிர்த்து வந்தது.

    அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் மட்டுமே எதிராகவும் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகின.

    இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்து வந்த இந்தியா, இந்த நியூயார்க் தீர்மானத்தில், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக மாற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

    பல தசாப்தங்களாக, இந்தியா இரு நாடுகள் தீர்வை ஆதரித்து பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க எப்போதும் முயற்சித்து வருகிறது.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வந்தது.

    இந்நிலையில் தற்போது பாலஸ்தீன சுதந்திரத்திற்கு வாக்களித்து இஸ்ரேலை இந்தியா அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    நியூயார்க் பிரகடனம் சொல்வது என்ன?

    பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு-நாடு தீர்வை செயல்படுத்துதல் குறித்த நியூயார்க் பிரகடனம்' என்ற தலைப்பிலான இந்த முன்மொழிவு, பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்டது.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், இரு நாடுகள் பார்முலாவின் மூலம் மட்டுமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியமாகும் என்று நியூயார்க் பிரகடனம் கூறுகிறது.

    அதேநேரம், இந்தப் பிரகடனம், அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களை கண்டிக்கிறது.

    ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து, காசாவில் அதிகாரத்தைக் கைவிட்டு, அதன் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரகடனம் கோருகிறது.

    2023 முதல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 64,750 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பகுதியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளே என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. மேலும் இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் கடந்த மாதங்களில் நூற்றுக்காணோர் உயிரிழந்துள்ளனர். 

    • இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது.
    • ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன்.

    நியூயார்க்:

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமை காட்டியுள்ளார். இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

    செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன். இது எளிதான காரியம் அல்ல. அது மிகப்பெரிய விஷயம். அது இந்தியாவுடன் விரிசலையும் ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் அதை செய்தேன். நிறைய செய்துவிட்டேன்' எனக்கூறினார்.

    இந்த பேட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.

    ×