என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
- மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே காலையில் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சிக்கு புறப்பட்டார். மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கும் விஜய் என்ன பேச போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட பிரச்சனைகள் குறித்து விஜய் பேச வாய்ப்பு உள்ளது.
திருச்சியில் பேசும்போது அந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை அவர் பட்டியலிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் வருகையையொட்டி திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.






