என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா தீர்மானம்"

    • காசா போருக்கு தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
    • முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதை இந்தியா தவிர்த்து வந்தது.

    அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் மட்டுமே எதிராகவும் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகின.

    இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்து வந்த இந்தியா, இந்த நியூயார்க் தீர்மானத்தில், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக மாற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

    பல தசாப்தங்களாக, இந்தியா இரு நாடுகள் தீர்வை ஆதரித்து பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க எப்போதும் முயற்சித்து வருகிறது.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வந்தது.

    இந்நிலையில் தற்போது பாலஸ்தீன சுதந்திரத்திற்கு வாக்களித்து இஸ்ரேலை இந்தியா அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    நியூயார்க் பிரகடனம் சொல்வது என்ன?

    பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு-நாடு தீர்வை செயல்படுத்துதல் குறித்த நியூயார்க் பிரகடனம்' என்ற தலைப்பிலான இந்த முன்மொழிவு, பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்டது.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், இரு நாடுகள் பார்முலாவின் மூலம் மட்டுமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியமாகும் என்று நியூயார்க் பிரகடனம் கூறுகிறது.

    அதேநேரம், இந்தப் பிரகடனம், அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களை கண்டிக்கிறது.

    ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து, காசாவில் அதிகாரத்தைக் கைவிட்டு, அதன் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரகடனம் கோருகிறது.

    2023 முதல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 64,750 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பகுதியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளே என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. மேலும் இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் கடந்த மாதங்களில் நூற்றுக்காணோர் உயிரிழந்துள்ளனர். 

    • 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, 12 நாடுகள் எதிராக வாக்களித்தன.
    • கிழக்கு ஜெருசலேம் உட்ப மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றக் கட்டுமானம், நில அபகரிப்பு போன்றவற்றை உடனடியாக நிறுத்தவும் கோரப்பட்டுள்ளது.

    காசாவில் உடனடி போர்நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யக் கோரும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை நேற்று (வியாழக்கிழமை) நிறைவேற்றியது.

    இதில் 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, 12 நாடுகள் எதிராக வாக்களித்தன (இஸ்ரேல், அமெரிக்கா உட்பட) மற்றும் இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் வாக்களிக்கவில்லை.

    தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

    *பொதுமக்கள் பட்டினி கிடக்க வைப்பது மற்றும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவது கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது.

    *ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல், உடனடியாக முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், அனைத்து எல்லை தடுப்புகளை திறக்கவும், பாலஸ்தீன பொதுமக்கள் அனைவருக்கும் உதவி உடனடியாகவும், பெரிய அளவிலும் சென்றடைவதை உறுதி செய்யவும் கோரப்பட்டுள்ளது.

    *காசா பாலஸ்தீன அரசின் ஒரு பகுதியாக, இரு-அரசு தீர்வுக்கு தீர்மானம் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.

    *பாலஸ்தீன மக்களை பலவந்தமாக இடம்பெயரச் செய்யும் மற்றும் பாலஸ்தீன நிலத்தை சட்டவிரோதமாக கைப்பற்றும் நடவடிக்கைகளை தீர்மானம் நிராகரிக்கிறது.

    *கிழக்கு ஜெருசலேம் உட்ப மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றக் கட்டுமானம், நில அபகரிப்பு போன்றவற்றை உடனடியாக நிறுத்தவும் கோரப்பட்டுள்ளது.

    *ஐ.நா. அதிகாரிகள், மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சலுகைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் பாதுகாப்பு கவுன்சிலில் போர்நிறுத்தம் குறித்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்த நிலையில், அரபு குழு மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு குழுவின் கோரிக்கையின் பேரில் நேற்று மீண்டும்  அமர்வு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

    • பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன.
    • இங்கிலாந்து பங்கேற்காத நிலையில், அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. காசா வடக்கு பகுதியைத் தொடர்ந்து தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தெற்கு காசாவிலும் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது. குறிப்பாக கான் யூனிஸ் நகரை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதில் பலர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, 24 மணி நேரத்தில் நிலம், கடல், வான்வழியாக காசாவில் 450-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன என்று தெரிவித்தது.

    காசாவில் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன. இங்கிலாந்து பங்கேற்கவில்லை. அமெரிக்கா எதிராக வாக்களித்தது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    ஹமாஸ் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாசின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என்று தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நிராகரித்தது.

     

    ராபர்ட் வுட்

    இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறும்போது, "நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை. இஸ்ரேலில் ஹமாசின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறி விட்டனர், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கிறோம். ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது ஹமாஸ் ஆட்சியை தொடர அனுமதிக்கும். இது அடுத்த போருக்கான விதைகளை மட்டுமே விதைக்கும்" எனத் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    • ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது

    உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதலை நிறுத்தி ரஷிய படைகள் அங்கிருந்து உடனே  வெளியேற வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்க மறுத்துள்ளது. நேற்று [ ஜூலை 11] ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 99 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள் வாக்களிக்க மறுத்துள்ளன.

    கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வைத்து நடைபெற்ற இந்தியா- ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவருக்கு ரஷியாவின் உயரிய விருதான ஆர்தர் ஆப் செயின்ட் ஆன்ரியூ தி அப்போஸ்தல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உக்ரைன் போருக்கு மத்தியில் மோடி ரஷிய அதிபர் புதினுடன் இணக்கம் காட்டுவது மேற்கு நாடுகளுக்கு கோபமூட்டியுள்ளது.

     

    மோடி ரஷியா சென்ற கடந்த ஜூலை 8 ஆம் தேதி அன்று உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்தனர். கீவ் நகரில் உள்ள உக்ரைனின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனை தகர்க்கப்பட்டது. இந்தியா புத்தரைத் தான் உலகத்துக்கு கொடுத்தது, யுத்தத்தை அல்ல என்று மோடி தனது பயணத்தின்போது பேசினாலும், தற்போது ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

     

    முன்னதாக 38,000 மக்கள் உயிரிழந்த இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மோடியின் ரஷியா பயணம் குறித்து விமர்சித்துள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, தற்போதைய சூழலில் எந்த போரும் தொலைவில் இல்லை. இந்தியா - அமெரிக்காவின் நட்புறவை மீண்டும் உறுதி செய்ய வேண்டி உள்ளது. அமெரிக்க உறவை நினைத்து போல்  எடுத்துக்கொள்ளக்கூடாது  என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×