என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் நோக்கில் மோடி அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு.
- இரையுமன் துறையிலிருந்து பூத்துறை வரை பாதயாத்திரை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்தும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்வதை கண்டித்தும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125-நாட்கள் வழங்குகிறோம் என கூறி மக்களை ஏமாற்றி வரும் பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதேபோல கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தலைமையில் நடைபயணம் நடைபெற்று வருகிறது. அதே போல இன்று 9-வது நாளாக மத்திய பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழக சட்டமன்ற குழு காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார்.
பாதயாத்திரை இரையுமன் துறையிலிருந்து இருந்து தொடங்கி பூத்துறை வரை நடைபெற்றது. பாதயாத்திரையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: "மத்திய பாஜக அரசுக்கு எதிராக 9-வது நாளாக இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தை எவ்வாறு முடக்க நினைக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது.
இந்த நடைபயணம் மூலம் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்கப்பார்கிறார்கள், முதலில் பயனாளிகளின் சம்பளத்தை குறைத்தனர். இதனை கண்டித்து இந்த தகவலை மக்களிடம் எடுத்து சென்று கொண்டிருக்கிறோம். வேலை கொடுக்காமல் இந்த திட்டத்தை முடக்கப்பார்கிறார்கள். இதனை முடக்க கூடாது என கேட்டு மக்களிடம் எடுத்து கூறி போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்," என்றார்.

அமெரிக்கா இந்திய ஒப்பந்தத்தை நீங்கள் எப்படி பார்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "தலைவர் ராகுல் காந்தி கூறியது போல் இது கட்டாயத்தினால் ஏற்படுத்தபட்ட ஒப்பந்தம், வெளியுறவுத்துறைக்கு தெரியாமல் நடைபெற்றுள்ள ஒப்ந்தம் என கூறுகிறார்கள். இது கட்டாயத்தினால் ஏற்படுத்தப்பட்டது என அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.
இதனால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பொருள்களை அவர்கள் இறக்குமதி செய்தால் பூஜ்யம் சதவிகிதமும், நாம் ஏற்றுமதி செய்தால் 18 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். மோடியை பிரதமராக நாம் பார்கும் போது, அவர் நாட்டை கைவிடுவது போன்று தெரிகிறது," என்றார்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதில் உறுதியாக உள்ளீர்களா என்ற கேள்விக்கு, "கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுதான் எங்களின் முடிவு" என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, "100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 2004-ஆண்டு அன்னை சோனியாகாந்தி அவர்களால் கொண்டுவரப்பட்டது. ஐநா சபையே முன்னுதாரணமாக வரவாற்ற திட்டம் இது, மோடி அரசு இந்த திட்டத்தை சிதைக்கும் விதத்தில் 125 நாட்கள் என கூறி 30 நாட்கள் கூட வழங்கவில்லை, சம்பளம் நவம்பர் முதல் வாரத்திற்கு பின் வழங்கப்படவில்லை, அரசு நிர்ணயத்த தொகை 330, ஆனால் வழங்குவது 220 ரூபாய், காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் நோக்கில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது," என்று அவர் தெரிவித்தார்.
பாத யாத்திரையில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஸ், இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுசெயலாளர் முகமது ஷாயித், மாநில பொது செயலாளர்கள் ஜார்ஜ் ராபின்சன், பால்ராஜ், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால்சிங், முன்சிறை வட்டார தலைவர் விஜயகுமார், மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், மீனவர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் அந்தோணி பிச்சை, முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன்கிறிஸ்டா, மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி லைலா ரவிசங்கர் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், மீனவ கிராம காங்கிரஸ் தலைவர்கள், இளைஞர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன
- சிவராத்திரி விழாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்கு பரபரப்பாகி கொண்டிருக்கிறது. தங்களின் கூட்டணியை இறுதி செய்வதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தீவிரம் காட்டி வருகின்றன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
இதனால் அந்தக் கட்சி தி.மு.க. கூட்டணிக்கு செல்லுமா? அல்லது மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையுமா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தே.மு.தி.க தொண்டர்கள் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம்பெறும் என்று மட்டும் அவர் அறிவித்து இருந்தார்.
தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் தே.மு.தி.க. இதுவரை பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பிரேமலதா ஒரே மேடையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை.
இந்த நிலையில் மீண்டும் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்குள் கூட்டணி வடிவத்தை இறுதி செய்ய அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது தே.மு.தி.க.வை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கு கோவையில் நேற்று நடந்த சிவராத்திரி விழா தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியினர் கூறி வருகிறார்கள்.
நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய இணை மந்திரி எல்.முருகன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். முக்கியமாக இந்த விழாவில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கலந்து கொண்டார்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் முன் வரிசையில் அருகருகே அமர்ந்து இருந்தனர்.
முன்வரிசையில் இருந்த முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது எஸ்.பி.வேலுமணி, பிரேமலதாவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
இருவரும் அருகருகே அமர்ந்து சிவராத்திரி விழாவை பார்த்தனர். அவ்வப்போது இருவரும் பேசிக் கொண்டனர். அந்த சமயம் கூட்டணி தொடர்பாகவும் அவர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பானது அ.தி.மு.க. பா.ஜ.க. தேமு.தி.க. கூட்டணிக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றும் பிரேமலதா விஜயகாந்த் கோவையில் தான் தங்கி உள்ளார். அவருடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என தெரிகிறது.
மேலும் கோவையில் தங்கி இருக்கும் பிரேமலதா விஜயகாந்த்தை கோவை மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினரை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மகா சிவராத்திரி விழாவில் ஆண்டுதோறும் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பார். நேற்று பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தினருடன் சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். இந்த சந்திப்பு இயல்பாக நடந்தது. இதற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தபடி தொண்டர்கள் மக்கள் விரும்பும் கூட்டணியை நிச்சயம் அமைப்பார்.
- திமுக கூட்டணியில் தான் பிளவு இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இல்லை.
- திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்து வருகிறார்.
த.வெ.க தலைவர் விஜயை அநாகரிகமாக விமர்சித்தது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு பந்தல்கால் நடப்பட்ட பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. நான் யார் மனதும் புண்படக்கூடாது என நினைப்பவன்.
திமுக கூட்டணியில் தான் பிளவு இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இல்லை.
திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி கொடுத்து வருகிறார்.
திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. எங்கள் அண்ணன் இபிஎஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது.
இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும். முதலில் விஜய் கட்சிக்கு கொள்கை இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த கொள்கைகளை தெளிவாக காட்டட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொள்வர். அவ்வகையில் இந்தாண்டு நடிகைகள் தமன்னா,ஸ்ரீநிதி, சாரா அர்ஜுன் ஆகியோர் கலந்து சிவனை மனமுருகி வேண்டினர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டது.
- யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் காலியில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இன்று காலை தெரிவித்தது.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள், காகிதத்திலான பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்றும் யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஒன் செயலி வழக்கம்போல் செயல்படுவதாக MTC விளக்கம் அளித்துள்ளது. தங்கள் பயணங்களுக்கான டிக்கெட்டை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
- 4-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஏற்ற இறக்கமாக விற்பனையாகிறது. சென்னையில் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு பவுன் தங்கம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.20 ஆயிரம் குறைந்து ஏற்ற இறக்கமாக விற்பனையாகி வருகிறது.
கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600 ஆக குறைந்தது. 3-ந்தேதி ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160 ஆகவும், 4-ந்தேதி ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200 ஆகவும் அதிகரித்தது. 5-ந்தேதி ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560 ஆகவும், 6-ந்தேதி ரூ.1 லட்சத்து 14 ஆயிரமாகவும் குறைந்தது.
கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 360 ஆகவும், 9-ந்தேதி ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200 ஆகவும் அதிகரித்தது. 10-ந்தேதி ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 640 ஆக குறைந்தது. 11-ந்தேதி ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 320 ஆக அதிகரித்தது. 12-ந்தேதி ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800 ஆகவும், 13-ந்தேதி ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200 ஆகவும் குறைந்தது.
கடந்த 14-ந்தேதி தங்கம் விலை அதிகரித்து பவுன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 480-க்கு விற்கப்பட்டது. நேற்றும் அதே விலையே நீடித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கு விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 560-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14 ஆயிரத்து 440-க்கு விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று 4-வது நாளாக மாற்றம் இல்லை. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள்.
- இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது.
சென்னை:
மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள், காகிதத்திலான பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்றும் யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும், 'சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகளின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
- 2 விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.
ராமேசுவரம்:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மீன்வளத்துறையிடம் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு புறப்பட்டனர். இதில் கீழகாசாகுடி மேடு பகுதியை சேர்ந்த பிரதாப், கிளிஞ்சல் மேடு ஜெகன் ஆகியோருக்கு சொந்தமான படகில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலை பாக்ஜலசந்தி அருகே இந்திய எல்லையை ஒட்டியுள்ள நெடுந்தீவு பகுதியில் காரைக்கால் மீனவர்கள் வலைகளை விரித்து மீன்பிடி பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களிடம் சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதியில்லை.
எனவே இங்கிருந்து உடனடியாக செல்லுங்கள் என எச்சரித்தனர். இதையடுத்து அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் அவசர அவசரமாக கரைக்கு புறப்பட்டனர். அப்போது பிரதாப், ஜெகன் ஆகியோரது படகுகளில் வந்து மீன்பிடித்த 25 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்படித்தனர்.
பின்னர் 25 பேரும் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இன்று பிற்பகல் கைதான மீனவர்கள் 25 பேரும் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி வந்ததாக கூறி காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 25 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மீனவர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
- அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.
- சிவனை தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
சென்னை:
மகா சிவராத்திரி தினத்தன்று அனைத்து சிவன் கோவில்களிலும் 4 கால சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
பக்தர்கள் காலையில் நீராடிய பிறகு விரதம் மேற்கொள்வார்கள். விரத காலத்தில் சிவபெருமான் நாமத்தை இடைவிடாமல் உச்சரித்து வருவதுடன் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். பழங்கள், இனிப்புகள், பால் போன்ற நைவேத்யங்களை சிவபெருமானுக்கு பக்தியுடன் படைத்து வழிபடுவார்கள்.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், புரசை கங்காதீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். அனைவரும் சிவபெருமானை தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பால், தயிர், பழங்கள், தேன், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு புனிதப் பொருள்களைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றன.
ஒவ்வொரு கால பூஜை முடிந்ததும் தீபாராதனை காட்டப்பட்டது. பிரசாதங்களும் விநியோகம் செய்யப்பட்டது.
நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை 4 கால பூஜையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தீபாராதனைகளின் போது பக்தர்கள் உற்சாகத்துடன் ஓம் நமசிவாய கோஷம் எழுப்பினர்.
இதேபோல், இந்தியா முழுவதிலும் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரபலமான கோவில்களிலும் சிவராத்திரி வழிபாடுகள் விமர்சையாக நடந்தன.
- விளாத்திகுளம் அருகே பைக் மீது சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதியது.
- இந்த விபத்தில் பைக்கில் சென்ற குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுற்றுலா வேன் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் ஒரே பைக்கில் சென்ற 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் மீது வேன் மோதியதில் 5 பேர் பலியானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
- முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.
ஈரோடு மாவட்டம் அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயாளர் இபிஎஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, பரப்புரை வாகனத்தில் வருகை தந்த இபிஎஸ்-க்கு வழிநெடுகிலும் திரண்டு நின்ற மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பாஜகவின் களை கழக் அதிமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.
காங்கிரசுக்கு திமுக கட்சி அடிமை. அதிமுக தன்மானம் உள்ள கட்சி.
முதலமைச்சரின் தனிநபர் விமர்சனத்திற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன்.
அதிமுக ஆட்சி காலத்தின் விவசாயம் செழித்து இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் குறைகள் என சுட்டிக்காட்ட முடியுமா?
ஜெயலலிதாவின் மறைவுக்குபின் பல பிரச்சனைகளை அதிமுக சந்தித்தது. தொண்டர்களின் ஆதரவால கட்சியை காப்பாற்றினோம்.
சட்டமன்றத்தில் நான் பெரும்பான்மையை நிரூபித்தபின் சட்டையை கிழித்துகொண்டு வீதியில் சென்றார் மு.க.ஸ்டாலின்.
சட்டமன்றத்தில்நான் பெரும்பான்மை நிரூபித்ததை முதலமைச்சரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியேடு சீர்கெட்டு விட்டது. தமிழ்நாட்டில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலர்களுக் பாதுகாப்பு இல்லை.
ஸ்டாலின் நாட்டு மக்களை பற்றி சிந்திக்க மாட்டார். அவரது வீட்டு மக்களை பற்றி மட்டும்தான் சிந்திப்பார்.
நிர்வாக திறமையின்மை காரணமாக அரசு காலி பணியிட்கள் அப்படியே இருக்கிறது.
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வரி உயர்வு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






