search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க வேண்டும்- கனிமொழி வலியுறுத்தல்
    X

    பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க வேண்டும்- கனிமொழி வலியுறுத்தல்

    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி வலியுறுத்தியுள்ளார். #pollachiissue #kanimozhi

    தூத்துக்குடி:

    தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், வன்முறை சம்பவத்தை அரசும், போலீசும் மூடி மறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அது பெரிய அச்சத்தை உருவாக்கி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

    ஆனால் அரசாணையில் கூட பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அரசு வெளியிட்டுள்ளது. போலீசும் தொடர்ந்து பெயரை வெளியிட்டு வருகிறது. இது இனிமேல் யாரும் புகார் கொடுக்க கூடாது என்பதற்காக, அவர்களை அச்சுறுத்தவே செய்யக் கூடியதாக தோன்றுகிறது.

    7 ஆண்டுகளாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற சூழலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் எந்த பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. தற்போது வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

    இதுவரை விசாரணையில் தாமதம் செய்து போலீசும், அரசும் யாரை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தாண்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக கோர்ட்டு ஏற்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இருப்பதால் அவர்கள் பிரதமரை ‘டாடி’ என்று அழைக்கக்கூடிய நிலைக்கு சென்று உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கடம்பூர் அருகே ஓணமாக்குளத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசிய தாவது:-

    தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தின் எந்த உரிமைகளை இழந்தாலும், ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு செயல்படும் அ.தி.மு.க. அரசு, தமிழ் விரோதிகளான பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து விட்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமல் பா.ஜ.க. அரசு அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குகிறது.

    அந்த கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை நடத்தும் தொழில் அதிபர்களை விட்டு விட்டு, சில ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் வாங்கிய மாணவர்களை கடனை திருப்பி செலுத்துமாறு பா.ஜ.க. அரசு மிரட்டுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்று மத்தியில் தி.மு.க. அங்கம்பெறும் ஆட்சியும் அமையும். அப்போது மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார். #pollachiissue #kanimozhi

    Next Story
    ×