என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் ஒரு தலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை மதுபாட்டிலால் குத்திய வாலிபர்
Byமாலை மலர்25 May 2017 11:11 AM GMT (Updated: 25 May 2017 11:11 AM GMT)
சேலத்தில் ஒரு தலை காதலால் கல்லூரி மாணவியை மதுபாட்டிலால் குத்திய வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம், அரியானூர் தாடிகாரன்காடு பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகள் தீபா (வயது 21). இவர் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருவதால் வழக்கம் போல் இன்று காலை தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதற்காக காலை 8 மணி அளவில் அரியானூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக நடந்து வந்தார். பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தீபாவிடம் தகராறில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து ஓங்கி தீபாவின் வயிற்றில் குத்தினார். பின்னர் அந்த வாலிபர் கண் இமைக்கும் நேரத்திற்கு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டார்.
வாலிபர் மது பாட்டிலால் குத்தியதால் தீபாவின் வயிற்றில் இருந்த ரத்தம் மளமளவெள வெளியேறியது. வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியானூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி தீபாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து நடந்த சம்பவம் குறித்து தீபாவிடம் கேட்டறிந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து கொண்டலாம்பட்டி பகுதியை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த சின்னபெருமாள் மகன் செல்வராஜ்(23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது செல்வராஜ் தான் வெள்ளி பட்டறையில் கூலி தொழில் செய்து வருவதாகவும், 2 வருடங்களாக தீபாவை காதலித்து வந்ததாகவும் இன்று காலை திருமணம் செய்வதற்காக அழைத்த போது வர மறுத்தததால் மது பாட்டிலை உடைத்து தீபாவின் வயிற்றில் குத்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
ஆனால் தீபா அவரை காதலிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், தீபாவை திருமணம் செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று காலை கல்லூரிக்கு சென்ற தீபாவை வழிமறித்து மதுபாட்டிலால் குத்தி இருக்கிறார் என்பது தெரியவந்தது.
சேலம், அரியானூர் தாடிகாரன்காடு பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகள் தீபா (வயது 21). இவர் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருவதால் வழக்கம் போல் இன்று காலை தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதற்காக காலை 8 மணி அளவில் அரியானூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக நடந்து வந்தார். பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தீபாவிடம் தகராறில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து ஓங்கி தீபாவின் வயிற்றில் குத்தினார். பின்னர் அந்த வாலிபர் கண் இமைக்கும் நேரத்திற்கு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டார்.
வாலிபர் மது பாட்டிலால் குத்தியதால் தீபாவின் வயிற்றில் இருந்த ரத்தம் மளமளவெள வெளியேறியது. வலி தாங்க முடியாமல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கதறி அழுதார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியானூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி தீபாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து நடந்த சம்பவம் குறித்து தீபாவிடம் கேட்டறிந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து கொண்டலாம்பட்டி பகுதியை அடுத்த உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த சின்னபெருமாள் மகன் செல்வராஜ்(23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது செல்வராஜ் தான் வெள்ளி பட்டறையில் கூலி தொழில் செய்து வருவதாகவும், 2 வருடங்களாக தீபாவை காதலித்து வந்ததாகவும் இன்று காலை திருமணம் செய்வதற்காக அழைத்த போது வர மறுத்தததால் மது பாட்டிலை உடைத்து தீபாவின் வயிற்றில் குத்தியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
ஆனால் தீபா அவரை காதலிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், தீபாவை திருமணம் செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று காலை கல்லூரிக்கு சென்ற தீபாவை வழிமறித்து மதுபாட்டிலால் குத்தி இருக்கிறார் என்பது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X