என் மலர்
விளையாட்டு
- சுப்மன் கில் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
- பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 24 ரன்னிலும் சுப்மன் கில் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கோலி 23 ரன்னிலும் ஷ்ரேயாஸ் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.
118 ரங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் - ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 27 ரன்னில் ஜடேஜா அவுட்டாக பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.
- டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன் 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
- தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளார்.
மொத்தம் ரூ.8½ கோடி பரிசுத் தொகைக்கான இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஷி யூ கி (சீனா), குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), ஒலிம்பிக் சாம்பியனான அன் சே யங் (தென்கொரியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), வாங் ஜி யி (சீனா), பி.வி.சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், 4 முறை பேட்மிண்டன் உலக சாம்பியனான டென்மார்க் வீரர் அண்டர்ஸ் அண்டன்சன், டெல்லி காற்று மாசுவின் காரணமாக 2026 இந்திய ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தொடரில் இருந்து விலகியதற்கு அபராதமாக 5000 டாலர்கள் செலுத்தியுள்ளதாகவும் "இது ஒரு பேட்மிண்டன் போட்டி நடத்துவதற்கு தகுதியான இடம் அல்ல" எனவும் தனது இன்ஸ்டாகிராமில் அண்டர்ஸ் அண்டன்சன் பதிவிட்டுள்ளார்.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி 93 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி 302 ரன்கள் குவித்தார்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி (785 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இருந்து ரோகித் 2 இடங்கள் சறுக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார். நியூசில்ந்து வீரர் டேரில் மிட்செல் (784 புள்ளிகள்) 2 இடம் பிடித்துள்ளார். இப்ராஹிம் சத்ரன் 4-வது இடத்திலும் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.
- இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது
- இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கவுள்ளது.
இந்த போட்டியில் காயம் காரணமாகி விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- தொடக்க நாளில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
- ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது
19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 1988-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது.
இதுவரை 15 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது.
16-வது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 2 நாடுகள் இணைந்து நடத்துகிறது.இந்தப் போட்டி நாளை (15- ந் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறு கிறது.
இதில்16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள நாடுகள் விவரம்:-
ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜப்பான் (ஏ பிரிவு), இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா (பி பிரிவு), இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து (சி பிரிவு), தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா (டி பிரிவு).
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளில் 3 ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது.
நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் - தான் சானியா அணிகள் மோதுகின்றன.
- அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது.
- இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7- ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விளையாடும் அணிகளில் ஒன்றான அமெரிக்கா இன்னும் வீரர்களை தேர்வு செய்யவில்லை.
இதற்கிடையே அந்த அணியில் உள்ள பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 4 வீரர்களுக்கு இந்தியா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மோஷின், எஹ்சான் அதில் ஆகிய 4 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசா நிராகரிக்கப்பட்ட தகவலை அலிகான் காெணாலி செய்தியில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எங்களால் டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும். அமெரிக்காவை தவிர இங்கிலாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம், கனடா, நெதர்லாந்து ஆகிய நாடு களிலும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, தாய்லாந்தின் ஒர்னிச்சா சோங்சதாபோர்ன்–பார்ன் சுகிதா சுவாச் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற நேர் செட்டில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இதேபோல், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-ஹரிகரன் அம்ச கருணன் ஜோடி 21-15, 21-18 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஓங் யீ சின்-டியோ ஈ யி ஜோடியை வெளியேற்றியது.
- வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
அகமதாபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடந்தது .இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சுப்மன் கில் தலைமை யிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகி யுள்ளார். அவருக்கு பதிலாக பதோனி தேர்வு பெற்றுள்ளார்.
சீனியர் வீரரான விராட் கோலி பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். சர்வதேச போட் டியில் விராட் கோலி தொடர்ந்து 5 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து முத்திரை பதித்தார். இன்றைய ஆட்டத்திலும் விராட் கோலி மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதேபோல ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும்.
ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 121 போட்டிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 63ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி கைவிடப்பட்டது.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஜனவரி 18 முதல் மெல்போர்னில் நடக்க உள்ளது.
- ஆஸ்திரேலிய ஓபனில் ரோஜர் பெடரர் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சிட்னி:
நடப்பு ஆண்டில் டென்னிஸ் போட்டியின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வரும் 18-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடக்க உள்ளது.
இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்ட் டபுள்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். இதில் டாப் 100 வீரர்களில் 99 ஆண்கள் மற்றும் 98 பெண்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் கண்காட்சி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் விளையாடுகிறார்.
ஆஸ்திரேலிய ஓபனில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர், இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்ததுடன், கடந்த 2022-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
- ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
- ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.
லண்டன்:
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
அதன்படி, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 12,050 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 11,500 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 5,105 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4,780 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.
இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி 4,105 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 5ம் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் 6வது இடத்தில் தொடர்கிறார். கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அலிஸியாமே 2 நிலை சரிந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக் ஆகியோர் 8,9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளனர்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்கள் எடுத்து வென்றது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.
கனிகா அஜா 35 ரன்னும், பெத் மூனி 33 ரன்னும் எடுத்தனர். ஜார்ஜியா வேரம் 43 ரன்னும், பார்தி புல்மாலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அமன்ஜோத் கவுர் அதிரடியாக ஆடி 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
4வது விக்கெட்டுக்கு ஹர்மன்பிரீத் கவுருடன் நிகோலா கேரி இணைந்து பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், மும்பை அணி 19.3 ஓவரில் 193 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஹர்மன்பிரீத் கவுர் 71 ரன்னும், நிகோலா கேரி 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பிவி சிந்து உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான ஆயுஷ் ஷெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






