என் மலர்
இந்தியா
- வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மீதி உள்ள 122 இடங்களுக்கு 2-ம் கட்டமாக வருகிற 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாட்டின் மிகவும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் பீகாரும் ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில் பீகார் அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் கண்டிருக்கிறார்கள்.
லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோர் பீகாரை பின்னோக்கி இழுத்து சென்றனர். ஆனால் இன்று அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்று இளைஞர்கள் கூறி வருகின்றனர்.
இதுவே முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று அவர்கள் கூறுவார்கள். கங்கை நதியின் கீழ் 4 பாலங்களை கட்டினோம். இன்னும் 10 பாலங்கள் கட்டுமானத்தில் இருக்கின்றன. இது சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை.
கடந்த ஆட்சியில் விவாதங்கள், கொள்ளை, கொலை, வழிப்பறி பற்றியதாக இருந்தது. ஆனால் இன்று விவாதங்கள் முன்னேற்றம் பற்றி மாறியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.
நாங்கள் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் செல்வதை பல முறை தெளிவுப்படுத்தினோம். அவரே முதலமைச்சர் ஆவார். வெற்றிக்கு பிறகு அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுவோம். எங்கள் பலத்தை பற்றி நினைக்காமல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதே பா.ஜ.க.,-வின் கொள்கை.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2 கோடிக்கும் அதிகமான வேலை கொடுக்க வேண்டுமானால் பி, சி, டி பிரிவுகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
அதற்கு சராசரியாக ரூ.39 ஆயிரம் சம்பளம் என நிர்ணயித்து கொண்டாலும் மொத்தம் ரூ.12.85 லட்சம் கோடி தேவை. இது பீகாரின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகமாகும். சாத்தியமில்லாத இந்த வாக்குறுதியை தேஜஸ்விக்கு ராகுலும், லாலுவுதான் அளித்திருப்பார்கள்.
புலம்பெயர்வு குறைய பீகாரிலேயே சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டு ராஜ்ஜியம் திரும்பும். எனவே மக்கள் வாக்களிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
- இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
அப்போது அவர் கிரேனில் சிக்கிக் கொண்டதால் ஆத்திரத்தில் ஆப்ரேட்டரை அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார்.
- கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் பி.ஆர்.கவாயின் பரிந்துரையை ஏற்று சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
வரும் நவம்பர் 24ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்கிறார்.
இந்நிலையில் நீதிபதி சூர்யகாந்தின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, சூர்யகாந்த் மற்றும் அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.17 கோடி என தெரியவந்துள்ளது.
நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.
- டெல்லியில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
- பழைய ரயில் நிலையம் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும்
டெல்லியின் பெயரை மாற்றக் கோரி சாந்தினி சவுக் பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரி வருகிறது.
இந்நிலையில் பிரவீன் கண்டேல்வால் தனது கடிதத்தில் டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என மாற்ற வேண்டும் என வலியுத்தியுள்ளார்.
மேலும் டெல்லியில் உள்ள பழைய ரயில் நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்றும் டெல்லியில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்றுவதன் மூலம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தர்மத்தை எதிர்கால சந்ததியினருக்கு கடத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பீகார் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் ஒன்றாகும்.
- தேஜஸ்வி யாதவ் 2 கோடிக்கும் அதிகமான வேலை தருவதாகக் கூறுகிறார். அது பீகார் பட்ஜெட்டை வைத்துப் பார்த்தால் சாத்தியமில்லாத வாக்குறுதி.
பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் நிதீஷ் குமார்தான் தங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர், "பீகார் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் ஒன்றாகும். கடந்த 20 ஆண்டுகளில் பீகாரின் வளர்ச்சிக்கு நாங்கள் அடித்தளம் அமைத்தோம்.
நிதீஷ் குமார் ஆட்சியின்கீழ் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டதாக மக்கள் சொல்கிறார்கள். கங்கை நதியின் மீது நான்கு பாலங்களைக் கட்டினோம், இன்னும் பத்து பாலங்கள் கட்டுமானத்தில் இருக்கின்றன. இது சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை.
நாங்கள் பீகாரில் நிதீஷ் குமார் தலைமையில் செல்வதை பலமுறை தெளிவுபடுத்தினோம். என்டிஏ வெற்றி பெறும், அவரே முதலமைச்சர் ஆவார். வெற்றிக்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டப்படி நாங்கள் செல்வோம்.
பீகார் தேர்தலில் என்டிஏ 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எங்கள் பலத்தைப் பற்றி நினைக்காமல், கூட்டணிப் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதே பாஜகவின் கொள்கை.
தேஜஸ்வி யாதவ் 2 கோடிக்கும் அதிகமான வேலை தருவதாகக் கூறுகிறார். அது பீகார் பட்ஜெட்டை வைத்துப் பார்த்தால் சாத்தியமில்லாத வாக்குறுதி. புலம்பெயர்வு குறைய, பீகாரிலேயே சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.
மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டு ராஜ்ஜியம் திரும்பும். எனவே, பீகார் மக்கள் வாக்களிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- கர்நாடக அரசு தனது வருமானத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
- வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள்.
நேற்று நவம்பர் 1 கர்நாடகா மாநிலம் உருவாகி 70 ஆண்டுகள் நிறைவை ஒட்டி நடந்த விழாவில் அம்மாநில முதல்வர் சித்தராமையா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு அதிக மானியங்களை ஒதுக்கும் பாஜக அரசு மற்ற இந்திய மொழிகளை புறக்கணிக்கிறது.
மொழியைப் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை
கர்நாடக அரசு தனது வருமானத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்குகிறது. ஆனால் அதில் ஒரு சிறிய பங்கை மட்டுமே மத்திய அரசு திரும்பி தருகிறது.
இந்தியை திணிக்கும் மத்திய அரசு, கன்னடத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.
ஆங்கிலமும் இந்தியும் குழந்தைகளின் திறமைகளைப் பலவீனப்படுத்தும். பள்ளிகளில் பிள்ளைகளுக்கு தாய்மொழியில் கற்பிக்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது. என்று தெரிவித்தார்.
- 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
- அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகாவில் தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பேட்டபுரா பகுதியை சேர்ந்தவர் அபியா பானு (25 வயது). இவரது கணவர் சயது முசவீர் பெங்களூரில் உள்ள ஒரு மாலில் பணிபுரிகிறார்.
இவர்களுக்கு 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
மூத்த மகள் பாத்திமா பிறந்த நிலையில் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் பானு மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் கணவன்-மனைவி இடையேயும் இதுதொடர்பாக சச்சரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தாய் பானு, அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.
மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஒடிசாவில் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் மூன்று பேரால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஒடிசாவின் சுபர்ணபூர் மாவட்டத்தில் ஷோரூமில் பணிபுரியும் அந்த பெண் கடந்த வியாழக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து சென்ற முகமூடி அணிந்த மூவர் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் இளம்பெண் மீது மயக்க மருந்து தெளித்துள்ளது. அப்பெண் மயங்கியதும் கடத்திச் சென்று மூவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
சுயநினைவுக்கு திரும்பிய அப்பெண் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய காவல்துறை, இரண்டு சந்தேக நபர்களை வெள்ளிக்கிழமை காலையில் பிடித்துள்ளது.
மூன்றாவது நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
- பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டநெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் அறிவித்துள்ளார்.
முன்னதாக கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
- இதய நோயக்கு இலவச அறுவை சிகிச்சை பெற்ற சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
- கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மோடி அன்புடன் விசாரித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 'சத்தீஸ்கர் ரஜத் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நவ ராய்ப்பூரில் அடல் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில், வாழ்க்கை பரிசு என்ற திட்டத்தின் கீழ் பிறவியிலிருந்து உள்ள இதய நோயக்கு இலவச அறுவை சிகிச்சை பெற்ற சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அவர்களிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மோடி அன்புடன் விசாரித்தார். அவருடன் பேசிய குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அளித்து அவர்களுக்கு மறுபிறவி அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பிரதமர் மனதார பாராட்டினார்.
- இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது இறத்தல் வந்தது.
- 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இன்று காலை 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது.
விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது ஐதராபாத் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் இந்தத் தாக்குதல் 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்றும், ஐஎஸ்ஐ இந்த தாக்குதலைத் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உஷாரான விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவிக்கவே விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டு சோதனை நடந்தது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவரவே விமானம் மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றது.
ஆகஸ்ட் 2, 1984 அன்று சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும்.
- மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-
பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும். மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. பீகார் மக்கள், மாநிலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துபவர்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்துவார்கள். உ.பி. மக்கள் அவாத்தில் பாஜகவை தோற்கடித்தனர். அதேபோல் பீகார் மக்கள் மகாத்தில் அவர்களை தோற்கடிப்பார்கள்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்தன. இதனால் பாஜக-வால் தனிப்பெரும்பான்மை றெ முடியாமல் போனது. 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது.






