search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே பரேலியில் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து - பதற்றம்
    X

    ரே பரேலியில் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து - பதற்றம்

    உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இன்று பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இன்று பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தீ விபத்து ஏற்பட்டது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், ரே பரேலி நகரில் இன்று பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அம்மாநில பா.ஜ.க. தலைவர் மகேந்தர்நாத் பாண்டே ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

    கூட்ட மேடையில் மகேந்தர்நாத் பாண்டே பேசிக் கொண்டிருந்தபோது மேடையின் ஒரு பகுதியில் மின்சார கசிவால் புகையும் தீப்பொறியும் கிளம்பியது. காற்றின் வேகத்தில் மேடையின் பின்புறம் இருந்த அலங்கார துணியில் தீபிடித்தது.

    இதனால் மேடையின் மீதிருந்த தலைவர்கள் மற்றும் கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.

    சிறிது நேர முயற்சிக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதனால், சில நிமிடங்கள் வரை அங்கு பரபரப்பு நிலவியது. #BJP
    Next Story
    ×