என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். #Jallikattu
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து கடந்த ஆண்டு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறைவேற்றப்பட்டது. 



    இந்நிலையில்,  இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சியில் இன்று தொடங்கியது. போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றார். 

    ஜல்லிக்கட்டு போட்டியில் 450 காளைகளுடன் 100 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.  #Jallikattu #tamilnews
    கறம்பக்குடி அரசு இருபாலர் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து கறம்பக்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி அரசு இருபாலர் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்து கறம்பக்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்புகோவில் முக்கம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைசக்திவேல் தலைமை தாங்கினார். 

    இதில் மாநில அரசியல் தலைமை குழு உறுப்பினர் பார்வேந்தன், மாவட்ட செயலாளர் விடுதலைகனல், மாவட்ட நிர்வாகி விடுதலை வேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரபாண்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் ஒன்றிய துணைச்செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார். #tamilnews
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள வாதிரிப்பட்டி, திருவேங்கைவாசல், புல்வயல், இடையப்பட்டி, புங்கினிபட்டி, குடுமியான்மலை, பொய்கால்பட்டி, தாண்றீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

    அன்னவாசல் பகுதிகளில் கலை நுணுக்கத்துடனும், பல்வேறு வடிவங்களிலும் மண்பானைகள் தயார் செய்யப்படுவதால் இவை தமிழக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பானைகள் தவிர தண்ணீர் தொட்டிகள், மண் அடுப்புகள், சட்டிகள் உள்ளிட்டவையும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

    இருப்பினும் ஆண்டுக்கு ஆண்டு மண்பானை விற்பனை சரிந்து வருவதாக தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
    புதுக்கோட்டை அருகே கோவில் வளாகத்தில் 2பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தண்டலை கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எப்போதாவது மட்டுமே பக்தர்கள் சென்று வழிபடுவார்கள். மீதி நேரம் பூட்டியே கிடக்கும்.

    இந்நிலையில் நேற்று அந்த கோவில் வழியாக விவசாயிகள் சிலர் சென்றனர். அப்போது கோவில் வளாகத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வந்தது. இதையடுத்து கோவிலுக்கு சென்று பார்த்த போது 60 வயது மதிக்கத்தக்க 2 பேர் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள் இது குறித்து உடனடியாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கோட்டைப்பட்டினம் போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தவர்களில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் குளக்குடியை சேர்ந்த செல்லக்கண்ணு (வயது 60) என்பதும் மற்றொருவர் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைகாடு பகுதியை சேர்ந்த அடைக்கலம் (60) என்பதும் தெரியவந்தது. அவர்களது உடலில் ரத்தக்காயங்கள் இருந்தன. மேலும் உடல் பாதி அழுகிய நிலையில் இருந்தது.

    இதனால் அவர்கள் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. உடல் அருகே உருட்டு கட்டைகள் மற்றும் கற்கள் கிடந்தது. இதனால் மர்மநபர்கள் அவர்களை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்லக்கண்ணு, அடைக்கலம் இருவரும் மூங்கில் கூடை முடைந்து விற்பனை செய்து வந்த தோடு, கன்னிவலை விரித்து வைத்து உடும்பு, முயல்கள் ஆகியவற்றை பிடித்து வந்துள்ளனர். இந்த பிரச்சினையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதில் இறந்தனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அய்யனார் கோவில் அருகே ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தற்போது 2 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை அருகே இன்று தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து மனைவியை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). இவரது மனைவி சரண்யா (25). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சரண்யா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சரண்யா, அறந்தாங்கியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இன்று காலை அவர் அலுவலகத்திற்கு சென்றதும், அங்கிருந்த பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு உதயகுமார் அரிவாளுடன் வந்தார். அவரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சரண்யா அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இருப்பினும் உதயகுமார் ஆத்திரத்தில் சரண்யாவை மடக்கி பிடித்து அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் .

    இதில் சரண்யாவின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சரண்யாவை அப்பகுதி பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் உதயகுமார், சரண்யாவை வெட்டினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி உதயகுமாரை தேடி வருகின்றனர். 


     அரிவாள் வெட்டில் காயமடைந்த சரண்யாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.

    விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தொண்டைமான் நல்லூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.87,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டுக் கொட்டகை கட்டுமானப் பணியையும், ரூ.1 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் குப்பை பிரிக்கும் கூடாரம் அமைக்கும் பணியையும், மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி கட்டுமானப் பணியையும், குமாரமங்களம் ஊராட்சி, வடுகப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டட கட்டு மானப்பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மண்டையூர் ஊராட்சி, நத்தக்காடு கிராமத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.25  லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியையும், நத்தக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆண்கள் கழிப்பறை கட்டுமானப் பணியையும், மண்டையூரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காத்திருப்போர் கொட்டகை கட்டுமானப் பணியையும், ஊராட்சி மன்ற வளாகத்தில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளையும், மண்டையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டு மானப்பணியையும், சிங்கத்தா குறிச்சியில் ரூ.4  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கம் கட்டுமானப் பணியையும் என மொத்தம் ரூ.70.87 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் மரக்கன்றுகளை தினமும் நீர் ஊற்றி பராமரிக்கவும், கழிவறைகளை சுகாதாரமான முறையில் பயன்படுத்தவும், மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை முறையாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்யவும், முடிவுற்றப் பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், மேலும் நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு கட்டி முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், உதவிப்பொறியாளர்கள் சித்திரவேல்,  முத்துகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
    மதவாத பா.ஜ.க.விற்கு சரியான பாடத்தை ஆர்.கே. நகர் மக்கள் கற்றுக்கொடுத்துள்ளனர் என்று புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதவாத பா.ஜ.க.விற்கு சரியான பாடத்தை ஆர்.கே. நகர் மக்கள் கற்று கொடுத்துள்ளனர். மேலும் மத்திய அரசிற்கு அடிமைகளாக இருக்கும் அ.தி.மு.க.விற்கும் சரியான பாடத்தை அளித்துள்ளனர். மத்திய அரசிற்கு கொத்தடிமைகளாக செயல்படும் தமிழக அரசை மக்கள் விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.

    அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்து நின்ற போதிலும் அது தி.மு.க. கூட்டணிக்குத்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாக்குகள் எங்கே போனது என்பதை கூட்டணி கட்சிகள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

    ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு பணப்பட்டுவாடா ஒரு காரணம். மற்றொரு காரணம் குறித்து ஆய்வு செய்வதற்கு தி.மு.க. குழு அமைத்துள்ளது. அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பிலும் மாநிலத் துணைத்தலைவர் தாமோதரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 4 நாட்களுக்குள் அறிக்கையை அளிக்கும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு ஜெயலலிதாவிற்கு பிறகு அ.தி.மு.க. தலைமை என்பது தினகரனுக்குத்தான் என்பதை அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களும் முடிவு செய்து விட்டார்கள் என்பதையே காட்டுகிறது.

    இனி அ.தி.மு.க.வில் இருந்து பலர் விலகி தினகரன் அணிக்கு வரலாம். இதனால் ஆட்சி கவிழலாம். எத்தனை காலம் இந்த ஆட்சி இருக்கும் என்று தெரியாது.

    காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து எனது தலைமையில் ரத யாத்திரை தொடங்கி அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளோம். ஒன்றரை மாதம் நடக்கும் ரத யாத்திரையில் மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த உள்ளோம்.

    வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். கூட்டணியில் அதிக இடங்களை நிச்சயம் காங்கிரஸ் கட்சி கேட்கும். இறுதியில் கொடுக்கின்ற தொகுதிகளை பெற்றுக்கொள்வோம். ரஜினி ,கமல் மட்டுமல்ல அனைவரும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சீக்கிரம் கட்சி தொடங்கினால் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அறந்தாங்கி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அறந்தாங்கி:

    ஆவுடையார் கோவில் ஒன்றியம் பழவரசன் ஊராட்சி  உதயமாணிக்கம், கண்ணுடையான் கோட்டை, மாகானியேந்தல், இடைக்கி வயல் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    இப்பகுதிகளுக்கு உதயமாணிக்கம் பகுதிகளிலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் பழவரசன் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் அதிகாரிகள் குடிநீர் கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    இதனை கண்டித்து பழவசரன் ஊராட்சி பொதுமக்கள் நாகுடி - ஆவுடையார் பகுதி நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். 
    சாலைவிதிகளை கடைபிடிக்காமல் புதுக்கோட்டையில் விபத்துக்களில் ஆண்டுக்கு 320 பேர் இறந்துள்ளதாக கருத்தரங்கில் கலெக்டர் கணேஷ் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை,டிச.22-

    புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு குறித்த கருத்த ரங்கம் மாவட்ட கலெக் டர் கணேஷ் தலைமை யில் நடைபெற்றது.கருத்தரங்கில் கலெக்டர் பேசியதாவது:

    இந்தியாவில் வருங்கால சிறந்த குடிமகன்களை உருவாக்குவது ஆசிரியர்கள் ஆவர். எனவே சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வருங்கால ஆசிரியர்களாகிய கல்வியியல் கல்லூரி மாணவர் களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கருத்தரங்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்படும் பல்வேறு சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணம் அடிப்படை சாலை விதிகள் குறித்த விழிப்பு ணர்வு இல்லாததே ஆகும்.

    புதுக்கோட்டை மாவட்ட த்தில் வருடத்திற்கு சராசரி யாக சுமார் 320 நபர்கள் சாலை விபத்து களினால் இறக்கிறார் கள். தமிழக த்தில் ஆண்டிற்கு சராசரி யாக 16,500 நபர்கள் சாலை விபத்துகளால் இறக்கி றார்கள். சாலை விபத்து களில் வாகன பழுது காரணமாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவே விபத்து ஏற்படுகிறது.இவ்வாறு ஏற்படும் விபத்துகளிலும் உயிரிழப்பு மிகக் குறைவு. மீதமுள்ள விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு கவனமின்மை, அலட்சியம், சாலை விதிகளை மதிக்கா மல் இருத்தல் போன்ற காரணங்க ளினால் ஏற்படு கிறது. இருசக்கர வாகனங் களினால் அதிக விபத்து ஏற்படு கிறது.

    முக்கிய சாலைகளில் வாகன ங்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும். துணை சாலையில் இருந்து முக்கிய சாலைக்கு செல்லும் பொழுது வாகனத்தின் வேகத்தினை 0 வேகத்திற்கு கொண்டு வந்து வாகனத்தை நிறுத்தி சாலையின் இரு புறமும் பார்த்து செல்ல வேண்டும்.இத்தகைய விபத்து களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 150 நபர்கள் இறந்துள்ளனர். வேகத்தடை, சிக்கனல் உள்ளிட்ட சாலை விதிகளை மதிக்க வேண்டும். வாகன ஓட்டிகள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    வாகன ஓட்டிகள் விபத்து தமக்கு ஏற்படாது என்ற எண்ணத்தை தவிர்த்து, சாலை விதிகளை கடைப் பிடிக்காமல் கவனமின்மை யாக இருந்தால் தமக்கும் விபத்து ஏற்படும் என்பதை உணரவேண்டும். இத்தகைய விழிப்புணர்வின் மூலம் விபத்தை தடுக்கலாம். எனவே பொது மக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    அறந்தாங்கியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி களப்பக்காடு சிலோன் காலணியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது24). கூலி தொழிலாளி. இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் அவர் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனிமையில் குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த மாரியப்பன், கடந்த 20-ந் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கறம்பக்குடி அரசு பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 800 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே முன்விராதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் 2 தரப்பினரை சேர்ந்தவர்களும், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை வரவழைத்தனர். இதையடுத்து இந்த மோதல், கோஷ்டி மோதலாக மாறியது. இதில் 2 தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் முன்னாள் மாணவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோஷ்டி மோதல் தொடர்பாக 3 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அரசுப்பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
    புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு குறைவான அளவிலே கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் கரும்பு விலை உயரும் சூழல் உள்ளது.
    அறந்தாங்கி:

    பொங்கல் பண்டிகை என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது தித் திக்கும் செங்கரும்புதான். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை எதிர் பார்த்து கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக  போதிய பருவ மழை பெய்யாததாலும், கடும் வறட்சி நிலவியதாலும் தண்ணீர் இல்லாமல் கரும்பு விவசாயத்தை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனர்.  இதனால் கரும்பு விலையும் கடுமையாக உயர்ந்தது. 
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் கரும்பு பயிரிடப்படுவது  வழக்கம். போதிய  தண்ணீர்  இல்லாததாலும், உரிய விலை கிடைக்காததாலும், தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்காமல் இருப்பதாலும் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் போதிய ஆர்வம் காட்டவில்லை.

    இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைந்த அள வில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் மட்டும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை கரும்பு சாகுபடி  செய்யப்பட்டாலும் பொங்கல் பண்டிகையின் போது தான் அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

    புதுகை  மாவட்டத்தில், ஆலங்குடி, கறம்பக்குடி, அறந் தாங்கி,  அரசர்குளம், பொன்னமராவதி,  திருமயம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செங்கரும்புகள் செழித்து வளர்ந்துள்ளது. தற்போது சில பகுதிகளில் கரும்பு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    பல்வேறு  ஊர்களில் இருந்து  வியாபாரிகள் விவசாயிகளிடம்   இருந்து நேரடியாக, வயலுக்கே வந்து கரும்புகளை   கொள்முதல் செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, தமிழக அரசு வழங்கும் விலையில்லா பொங்கல் பொருட்களுடன் கரும்பு துண்டும் வினியோகம் செய்யப்படுகிறது. அதற்காக, கூட்டுறவு துறை அதிகாரிகள் கரும்புகளை நேரடியாக, கொள்முதல் செய்து  வருகின்றனர். இதனால் கரும்பு விவசாயிகளுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்தது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு குறைவான அளவிலே கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் கரும்பு விலை உயரும் சூழல் உள்ளது. கடும் வறட்சியால் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு கரும்பு பயிராவது இனிக்க வைக்குமா என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
    ×