என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே உள்ள மண்டையூரில் காரை வழிமறித்து 100 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுகோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள மண்டையூரில் காரை வழிமறித்து 100 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊரான விராலிமலைக்கு ராஜ்குமார் என்பவர் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, அவரது காரை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல், வழிப்பறி செய்துள்ளது. கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    மதுரையில் இருந்து திருச்சி வழியாக லாரியில் 350 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    புதுக்கோட்டை:

    மதுரையில் உள்ள மத்திய போதை பொருட்கள் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசாருக்கு, சேலத்தில் இருந்து திருச்சி வழியாக திருவாரூருக்கு செல்லும் லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திருச்சியை அடுத்த துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை சுங்க சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது லாரியில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்ததும், கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையடுத்து அதனை கடத்தி வந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சின்னன் மகன் சிவா(வயது 32), சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆனந்தன்(37), நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ராஜேந்திரன்(61) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 350 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். 

    இதையடுத்து சிவா உள்பட 3 பேரையும் நேற்று புதுக்கோட்டையில் உள்ள அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் வழக்கை விசாரித்து, அவர்கள் 3 பேரையும் வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    புதுக்கோட்டை அருகே இன்று தற்காலிக டிரைவர் இயக்கிய அரசு பஸ்சும் -தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினர்.

    புதுக்கோட்டை:

    அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    ஆனால் போதிய அனுபவம் இல்லாத டிரைவர்களால் தினந்தோறும் விபத்துக்கள் நிகழ்ந்து வருகிறது. இதுவரை 3 பேர் பலியாகியும் உள்ளனர். அத்துடன் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ரெகு நாதபுரம் அருகே சென்ற போது அந்த வழியாக கறம்பக்குடியில் இருந்து தஞ்சையை நோக்கி தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் வந்தது. அதில் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இருந்தனர்.

    இந்நிலையில் எதிர்பாராத விதமாக 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதின. இதில் 2 பஸ்களின் முன் பகுதி கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கின. அதிர்ஷ்டவசமாக 2 பஸ்களிலும் இருந்த மாணவர்கள் மற்றும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பி னர். விபத்துக்குள்ளான அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

    இந்த விபத்தால் அப்ப குதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அரசு பேருந்தை தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றார். அப்போது பஸ்சை பின்னோக்கி இயக்குவதில் தற்காலிக டிரைவர் திணறினார். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வழியாக தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சந்துரு என்பவர், தான் ஓட்டி வந்த பஸ்சில் இருந்து இறங்கி அரசு பஸ் டிரைவருக்கு உதவி செய்தார். #tamilnews

    திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் மேலக் களத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற ராசமாணிக்கம் (33). விவசாயி. இவரது மனைவி ஜானகி (23). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடை பெற்றது. இந் நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடை குடும்ப தகராறு நடைபெற்று வந்துள்ளது. 

    இந்த நிலையில் கடந்த 8-ம்தேதி  ஜானகி வீட்டில் யாரும் இல்லாத போது கயிறு மூலம் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். இது குறித்து ஜானகியின் தந்தை ராசு தனது மகள் சாவில் சந்தேகம்  இருப்பதாக பொன்னம ராவதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் பொன்ன மராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகியின் உடலைக் கைப்பற்றி வலைய பட்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணம் நடைபெற்று 6 மாதமே ஆனதால் கோட்டாச்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர். இதனையடுத்து இலுப்பூர் கோட்ச்சியர் சேக் மைதீன் சம்பவ இடத்திற்கு சென்று விசாணை நடத்தினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
    விராலிமலை அருகே சாலை தடுப்பில் தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
    விராலிமலை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சிதம்பரத்துக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த பினு (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். இதில் கன்னியாகுமரி, மதுரையை சேர்ந்த சுமார் 40 பயணிகள் பயணம் செய்தனர்.

    இந்த பஸ் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பக்கம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததோடு, சாரல் மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

    இதில் நிலை தடுமாறிய ஆம்னி பஸ் சாலை தடுப்பில் மோதி தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் முன்வரிசையில் அமர்ந்திருந்த மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நிர்மலா (60) இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரான இவர் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பஸ்சில் பயணம் செய்த 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் விபரம் வருமாறு:-

    மதுரை ஜோசப் (45) மதுரை, கன்னியாகுமரி சகாய அஸ்வினி (30), ரவிக்குமார் (29), லட்சுமி (28), ராணா ரீடு (36), ஆரோ மினிசா (2), காரைக்கால் கவுதம் (17), திருவனந்தபுரம் சிலுவின் (26), முட்டம் சகாயபிரதீப், ஜான், ஜார்ஜ் பென்னாட் உள்பட படுகாயம் அடைந்த 15 பேரும் மணப்பாறை மற்றும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    முன்னதாக விபத்து குறித்த தகவல் கிடைத்த தும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார், மீட்பு குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை காப்பாற்றினர்.

    தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கந்தர்வக்கோட்டை அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது40). விவசாயியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இன்று காலை பன்னீர் செல்வம் தனது மகனை கந்தர்வக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நாவல் ஏரி அருகே மோட்டார் சைக்கிள் பெட்ரோல் காலியானதால் நின்றது. இதனால்சாலையின் ஒரத்தில் பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது திருச்சியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக பன்னீர் செல்வம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பன்னீர் செல்வம் தன் மகன் கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கந்தவர்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்களின் மாவட்டக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு முடிவுகளை விளக்கி விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினார்கள். 

    கூட்டத்தில் கடந்த ஆண்டைப்போல நடப்பாண்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. சாகுபடி செய்து உள்ள விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாகி வருகிறது. இதனால், விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். 

    எனவே, தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்தியில் உள்ள மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் வேலையில் இறங்கி உள்ளது. மோடி அரசின் இத்தகைய நடவடிக்கையை கண்டிப்பதோடு, விவசாய தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு 100 நாள் வேலை திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். 

    சட்டப்படியான கூலியை உயர்த்தி, வேலை நாட்களையும் அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மனு கொடுத்து மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்துவது, மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திரளான விவசாய தொழிலாளர்களை கலந்து கொள்ள செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  #tamilnews
    புதுக்கோட்டை அருகே நகைக்காக பெண் எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது மனைவி கனகாம்பாள் (வயது 48). மாரிமுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் கனகாம்பாள் (வயது 48) மட்டும் தனியாக இருந்தார். இன்று அதிகாலை மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர்.

    பின்னர் தூங்கி கொண்டிருந்த கனகாம்பாளை கழுத்தை அறுத்துள்ளனர். இதனால் அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மேலும் ஆத்திரம் தீராத மர்மநபர்கள் அவர் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் கனகாம்பாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    காலையில் நீண்ட நேரமாகியும் கனகாம்பாள் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், டி.எஸ்.பி. தெட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கனகாம்பாள் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நகை, பணத்திற்காக கனகாம்பாள் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
    ஊதிய உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது.

    புதுக்கோட்டை:

    ஊதிய உயர்வு தொடர்பாக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை,கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று 3-வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் பெரும்பாலான பஸ்கள் இன்றும் இயக்கப் படவில்லை.

    புதுக்கோட்டை மண்டலத்தில் மொத்தம் 9 பணிமனைகள் உள்ளது. இங்கிருந்து 438 பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2800 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஸ்டிரைக் காரணமாக 90 சதவீத பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்காலிக டிரைவர்கள் - கண்டக்டர்கள் நியமிக்கப் பட்டதையடுத்து இன்று காலை 25 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. பணி மனைகளில் இருந்து மொத்தம் 80 பஸ்கள் வெளியே சென்றன.

    மற்ற பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று மாலைக்குள் இயக்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டத்தில் பணிமனைகள் உள்ளது. இதில் அரியலூர் பணிமனையில் உள்ள 96 பஸ்களில் இன்று காலை 17 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் பணிமனையில் உள்ள 98 பஸ்களில் 29 பஸ்கள் இயக்கப்பட்டன.

    அரியலூர் பணிமனையில் தினமும் ரூ.8 லட்சம் வசூல் ஆகும். ஆனால் நேற்று ரூ. 1.75 மட்டுமே வசூலானது. ஜெயங்கொண்டம் பணிமனையில் தினமும் 9 லட்சம் வசூல் ஆகும் ஆனால் நேற்று ரூ.4.5 லட்சம் மட்டுமே வசூலானது.

    கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் 3 பணி மனைகள் மற்றும் குளித்தலை, அரவக்குறிச்சியில் என மொத்தம் 5 பணிமனைகள் உள்ளது. இந்த பணி மனைகளில் இருந்து 240 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 7 மணி நிலவரப்படி 130 பஸ்கள் இயக்கப்பட்டன. 9 மணி ஆகியதும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன. 

    பெரம்பலூர் துறை மங்கலம் பணி மனையில் மொத்தம் 105 பஸ்கள் உள்ள நிலையில் இன்று காலை 15 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

    பஸ்கள் இயக்கப்படாததன் காரணமாக புதுக்கோட்டை உள்பட 4 மாவட்டங்களிலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். #tamilnews

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் மூதாட்டி மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பயணியர் நிழல் குடையில் அமர்த்திருந்த பொன் புதுப்பட்டி  சேர்ந்த அழகம்மை (வயது 71) மூதாட்டி திடிரென விழுந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார். 

    இது குறித்து பொன்னமராவதி காவல் நிலையதிற்க்கு தகவல் கொடுக்கபட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி மூதாட்டியின் உறவினர் வள்ளியப்பனிடம் ஒப்படைத்தனர். #tamilnews         
    இரவு நேரத்தில் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கியை அடுத்த ஆணைகட்டிக்கொல்லையில் மகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்  உண்டியல் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த வைகாசி விசாகத் திருவிழாவின் போது உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணி கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டு, உண்டியல் மீண்டும் பூட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலின் பூசாரி தட்சிணாமூர்த்தி என்பவர் கோவிலை பூட்டியுள்ளார். கோவிலின் அருகே குடியிருக்கும் அவர், இரவு 10.30 மணியளவில் மீண்டும் ஒருமுறை கோவிலை சுற்றி பார்த்து விட்டு வீட்டிற்கு சென்று தூங்கினார்.

    அவர் நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து கோவிலில் போடப்பட்டிருந்த விளக்குகளை அணைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. மேலும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் கொள்ளை போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து நாகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது உண்டியலில் இருந்து சுமார் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    கந்தர்வக்கோட்டையில் 5-1-2018 வெள்ளிக்கிழமை இரவு 65 கிலோ எடை பிரிவிற்கான மாபெரும் கபடிப் போட்டி நடைபெறுகிறது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டையில் 5-1-2018 வெள்ளிக்கிழமை இரவு  65 கிலோ எடை பிரிவிற்கான மாபெரும் கபடிப் போட்டி நடை பெறுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்த பரிசுத்தொகை ரூ.1லட்சமும், சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வெள்ளை முனியன் கோவிலில் திடலில் வருகிற வெள்ளிக்கிழமை இரவு 65 கிலோ எடை பிரிவிற்கான செல்லப்பா-முரளி நினைவு கபடிப்போட்டியை கந்தர்வக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் மன்னர் மன்னன் தொடங்கி வைக்கிறார். இறுதி ஆட்டத்தை திரைப்பட நடிகரும் புதுக்கோட்டை ஐஐ.பி.எச்.எஸ். கல்லூரி தாளாளருமான முருகானந்தம் தொடங்கி வைக்கிறார்.

    போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 20,001ம்,மொத்த பரிசுத் தொகையாக 1,00,000-ம் மற்றும் 30,000 மதிப்புள்ள சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது. அணி நுழைவுக்கட்டணம் ரூ.300 ஆகும். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். #tamilnews
    ×