என் மலர்
செய்திகள்

கந்தர்வக்கோட்டை அருகே கார் மோதி விவசாயி பலி
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது40). விவசாயியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இன்று காலை பன்னீர் செல்வம் தனது மகனை கந்தர்வக்கோட்டை உள்ள அரசு பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நாவல் ஏரி அருகே மோட்டார் சைக்கிள் பெட்ரோல் காலியானதால் நின்றது. இதனால்சாலையின் ஒரத்தில் பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது திருச்சியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக பன்னீர் செல்வம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பன்னீர் செல்வம் தன் மகன் கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கந்தவர்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






