search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி பலி"

    • தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, தளி செயலாளர் திவாகர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • நாராணயப்பாவின் உடலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கடந்த சில தினங்களாக கரடிகல், சூளகுண்டா பகுதியில், ஒற்றை யானை ஒன்று உணவு தண்ணீர் தேடி கிராம பகுதியில் சுற்றி வந்துள்ளது.

    இதை கண்ட விவசாயிகள் யானையை விரட்ட வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சூளகுண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணப்பா (71), அருகில் உள்ள தனது நிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால், இரவு வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை, அருகில் உள்ள விவசாய நிலத்தில் நாராயணப்பா யானை மிதித்து இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் அறிவழகன் தலைமையில் வனத்துறையினர், தளி எஸ்.ஐ சந்துரு மற்றும் போலீசார் உடலை மீட்க சென்றனர்.

    அப்போது கிராம மக்கள், அவரது உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, தளி செயலாளர் திவாகர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கிராம பகுதியில் யானைகள் புகாதவாறு ரோப்வயர் பென்ஸ் அமைக்க வேண்டும், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வனப்பகுதியை ஒட்டியுள்ள புதர்களை அகற்றி சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் சமரசத்தை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.

    பின்னர், நாராணயப்பாவின் உடலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், நாராயணப்பா குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து, வனத்துறை சார்பில், நாராயணப்பா குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    • சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர்.
    • சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 34). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குபேந்திரன்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்றார்.

    முசிறி, துறையூர் சாலையில் நான்காவது மைல் அருகே சீனிவாசன் என்பவரது வீடு அருகே வந்தபோது துறையூரில் இருந்து குளித்தலை ரெயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி விரைந்து சென்று சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்து சிலம்பரசனின் மனைவி கலா (27) கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    வீட்டுக்கு சென்ற பின்னர் துக்கம் தாளாமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். திடீரென்று அவர் ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அக்கம்பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை பிணமாக மீட்டனர். பின்பு கலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு அயித்தாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் சுக்கம்பட்டியை அடுத்த கோனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 42). விவசாயி. இவருக்கு ஏற்காடு அடிவாரத்தில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகிறார். இதனால் மாதையன் தினமும் காலையில் தோட்டத்திற்கு செல்வது வழக்கம்.

    வழக்கம்போல் இன்று காலை 7 மணிக்கு அவர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது கால்நடைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு குடத்தை எடுத்துக்கொண்டு அங்குள்ள வாழை தோட்டத்தில் உள்ள கிணறு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த காட்டெருமை மாதையனை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் தொடை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து காட்டெருமையை விரட்டி விட்டு படுகாயம் அடைந்த மாதையனை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அதன் ஊழியர்கள் பரிசோதித்து பார்த்து மாதையன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீராணம் போலீசுக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், சேர்வராயன் வனச்சரகர் பழனிவேல் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே காட்டெருமை முட்டி பலியான மாதையன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நிவாரணம் தொகை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. பலியான மாதையனுக்கு சரஸ்வதி (40) என்ற மனைவியும் புவனேஸ்வரன் (13), நவனேஸ்வரன் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    • அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்த போது பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி பலியானார்.
    • விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.

    டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் அந்த மாநில எல்லையான கனவுரி நகரில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய போது அரியானா போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது விவசாயி சுப்கரன் சிங் பலியானார். இதையொட்டி அரியானா போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார். மேலும் விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

    • கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனி மாவட்டத்துக்கு தற்போது மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டியதால் இன்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக வராக நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட வராகநதிக்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கரையோரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி அருகே உள்ள தெப்பம்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நிலக்கடலை விவசாயம் செய்துள்ளார். நேற்று இரவு தனது தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது வேலப்பர் கோவிலை அடுத்துள்ள கூட்டாற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதில் முருகன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து ராஜதானி போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இரவு நேரமானதால் முருகனை மீட்க முடியவில்லை. இன்று காலை தடுப்பணையில் முருகன் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.
    • சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை, நவ.8-

    சென்னிமலை அருகே உள்ள தட்டாங்காட்டு புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். (வயது 79). விவசாயி. இவர் தன்னுடைய வீட்டில் இருந்து அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்றார்.

    அப்போது சென்னிமலை-காங்கேயம் மெயின் ரோட்டை அவர் கடந்த பொழுது ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்த கவின் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுப்பிரமணியத்தின் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவருக்கு ஜானகி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.
    • ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி :

    ஆரல்வாய்மொழி வெள்ளமடம் அருகே வேம்பத்தூர் காலனி செல்லப்பன் (வயது 70), விவசாயி. சம்பவத்தன்று இவர் வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெள்ள மடம் தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் செல்லப்பன் தூக்கி வீசப் பட்டார். அக்கம்பக்கத்தி னர் அவரை மீட்டு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிசிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பரிதாப மாக இறந்தார். அவருக்கு ஜானகி என்ற மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முருகன் உயிரிழந்து கிடந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மேலகரம் அருகே உள்ள பாறைகுளம் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 56). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் பயிர்கள் பயிரிட்டிருந்தார். அதனை அடிக்கடி காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்தது.

    இதனால் காட்டு பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற முருகன் தனது தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளார். நேற்று மாலையில் தனது தோட்டத்திற்கு சென்ற முருகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது காட்டுப்பன்றிகளுக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முருகன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்த விவசாயி முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மலைத்தேனீக்கள் அந்த வழியாக சென்றவர்களை அவ்வப்போது தீண்டி அச்சுறுத்தி வந்தது.
    • மலை தேனீக்கள் தீண்டியதில் விவசாயி ஒருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன் புதூர் பகுதி சேர்ந்தவர் ராமசாமி (வயது 63). விவசாயி. இவரது தோட்டம் செல்வநகர் பகுதியில் உள்ளது. அவரது தோட்டத்தின் அருகே இருந்த தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    இந்நிலையில் மலைத்தேனீக்கள் அந்த வழியாக சென்றவர்களை அவ்வப்போது தீண்டி அச்சுறுத்தி வந்தது. ராமசாமி நேற்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் பறந்து சுற்றி திரிந்த மலை தேனீக்கள் ராமசாமியை தீண்டியது.

    இதில் வலி தாங்க முடியாமல் ராமசாமி அருகில் இருந்த கிணற்று தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் நீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கி இருந்து விட்டு மூச்சு தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் கிணற்றுக்கு மேலே வந்தபோது அங்கு சுற்றி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலை தேனீக்கள் ராமசாமியை சுற்றி மீண்டும் கொட்டியது.

    இதில் ராமசாமி மயக்கம் அடைந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் ராமசாமியை வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செல்வ நகர் பகுதியில் தென்னை மரத்தில் கூடு கட்டி உள்ள ஆயிரக்கணக்கான மலை தேனீக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மலை தேனீக்கள் தீண்டியதில் விவசாயி ஒருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
    • அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறச்சலூர்:

    அறச்சலூர் அருகே உள்ள பச்சாகுட்டையை சேர்ந்தவர் ராமசாமி (55). விவசாயி.

    இவர் தனது ஊரான பச்சாக்குட்டையில் இருந்து பள்ளியூத்து செல்லும் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு மண்கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

    இந்த சம்பவத்தில் ராமசாமிக்கு பலத்த அடிபட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் மச்சேந்திரன் (வயது54).

    சம்பவத்தன்று தனது தோட்டத்தில் வாழை இலை அறுக்க சென்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தடிக்கல் அடுத்துள்ள கோவிந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முனிராஜ் (34). இவர் தனது விவசாய தோட்டத்தில் நிலக்கடலை செடி பயிர்செய்திருந்தார். கடலை தோட்டத்திற்கு காட்டுப்பன்றிகள் வராமல் தடுப்பதற்காக திருட்டுதனமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் இரவு அதே கிராமத்தை சேர்ந்த இவரது உறவினர் மஞ்சுநாத் (35) என்பவரை அழைத்து கொண்டு முனிராஜ் தனது நிலக்கடலை தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.

    தோட்டத்தில் சிறுது நேரம் இருந்துவிட்டு மின்வேலிக்கு மின்சார இணைப்பு கொடுத்துவிட்டு அருகில் இருக்கும் மற்றொரு தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு மஞ்சுநாத்தை அருகில் உள்ள குடிசையில் தூங்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நேற்று சுமார் 7 மணி அளவில் மஞ்சுநாத் குடிசையிலிருந்து எழுந்த வந்து பார்த்தபோது மின்வயர்களில் சிக்கி முனிராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

    இது குறித்து மஞ்சுநாத் உடனே கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். இறந்த முனிராஜிக்கு அம்சா (30) என்ற மனைவியும், கோமதி (11) என்ற மகளும் ஹேமந்த் (8) என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×