search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் இருந்து  தவறி விழுந்து விவசாயி பலி
    X

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

    • செல்வராஜ் (வயது 50). விவசாயியான இவர், கடந்த 26-ந் தேதி நாமக்கல் அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஏத்தாபாளையம் தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). விவசாயியான இவர், கடந்த 26-ந் தேதி நாமக்கல் அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் காயமடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×