search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3rd day"

    • 3-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
    • கொடுமுடியில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 2 நாட்க ளாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலை யில் நேற்று 3-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதிய முதல் இரவு வரை இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    குறிப்பாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாது இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    மாவட்டத்தில் கொடு முடியில் அதிகபட்சமாக 86 மில்லி மீட்டர் அதாவது 8 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் நம்பியூரில் சுமார் மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாநகரா ட்சி பகுதியில் நேற்று மதியம் 2 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது அதன் பிறகு கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

    சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. மாநகராட்சியில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு நாச்சியப்பா வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை ஆர்.கே.வி.ரோடு, பெருந்துறை ரோடு பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு வ.உ.சி. மார்க்கெட் பகுதி சேரும், சகதிவுமாக காட்சியளிக்கிறது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதேப்போல் பெருந்துறை, வரட்டுபள்ளம், கோபி, கவுந்தப்பாடி, தாளவாடி, குண்டேரி பள்ளம், மொடக்குறிச்சி, அம்மா பேட்டை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 3 நாட்களாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஈரோடு மாவட்டத்தில் கனத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில், ஏராளமான விவசாயிகள் நேந்திரம், கதலி, மொந்தன், பூவன் உள்ளிட்ட வாழை சாகுபடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் எண்ணமங்கலம் சுற்று வட்டார பகுதியில் சூறாவளி காற்று டன் கனமழை பெய்தது. இதில், அப்பகுதி யில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த, இரண்டாயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கொடுமுடி-86.80, நம்பியூர்-48, ஈரோடு-37, பவானி-32.80, பெருந்துறை-28, வரட்டுபள்ளம்-11.40, கோபி-9.20, கவுந்தப்பாடி-4.20, தாளவாடி-3.10, குண்டேரி பள்ளம்-3.40, மொடக்கு றிச்சி-3, அம்மா பேட்டை-2.

    • ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
    • வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை ஆண் காட்டு யானை வெளியேறி வரப்பள்ளம் ஆற்றங்கரையோர விவசாய தோட்ட பகுதியில் சுற்றி திரிந்தது.

    இதை தொடர்ந்து அடசபாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை என்ற சித்தேஷ்வரன் என்பவரை மிதித்து கொன்றது.

    இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு யானையை பெருமுகை வனப்பகுதி க்குள் விரட்டி அனுப்பினர்.

    அந்த காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதையடுத்து அந்த ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதனால் முதுமலை யானைகள் முகாமில் இருந்து நேற்று முன்தினம் லாரிகளில் பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகளை பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகே உள்ள உரம்பு கிணறு மாரியம்மன் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் டிரோன் கேமரா மூலமாக அந்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் கண்கா ணித்தனர். ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கும் வன கால்நடை மருத்துவ குழுவினர் மூலமாக மயக்க ஊசி செலுத்தியவுடன்,

    தயாராக இருக்கும் 2 கும்கி யானைகளை கொண்டு காட்டு யானையை லாரியில் ஏற்றி வேறு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல இருப்பதாக வனத்துறை யினர் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து அட்டகாசம் செய்யும் அந்த ஒற்றை யானையை பிடிக்க கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகளுக்கு தேவையான சோளப்பயிர் உள்ளிட்ட உணவுகளை வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் டிரோன் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாளாக அந்த ஒற்றை காட்டு யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் பெருமுகை அடுத்த சேத்துக்காட்டு புதூர், கரும்பாறை குளத்துக்காடு, சஞ்சீவிராயன் கோவில் பகுதிகளில் இன்று வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையடுத்து ஒற்றை யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதி வழியாகவும், அதையொட்டிய பகுதிகளில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

    சம்பள உயர்வு மற்றும் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திவரும் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இன்று காலை மேலும் 10 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. #jactogeo #hungerstrike
    சென்னை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்- ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது.

    இந்த கோரிக்கை உள்பட சம்பள உயர்வு மற்றும் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த சில மாதங்களாக போராடி வருகிறார்கள்.

    கடந்த மாதம் இந்த அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு தமிழக அரசு ஒரு குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை குழுவின் பரிந்துரை எதையும் அரசு வெளியிடவில்லை. இதையும் வெளியிட வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நேற்று முன்தினம் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு நிர்வாகிகள் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்தில் 50 பெண்கள் உள்பட 250 பேர் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று அவர்களது உண்ணாவிரத போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்தது. இதுபற்றி சட்டசபையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாகவும் எனவே எதிர்க்கட்சியினர் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

    என்றாலும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று எழிலகத்துக்கு சென்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அதுபோல நேற்று நள்ளிரவு காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்களும் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் இன்று (புதன் கிழமை) 3-வது நாளாக நீடித்தது.



    திங்கட்கிழமை முதல் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இதனால் நேற்று 2-வது நாள் போராட்டத்தின் போது பெரும்பாலானவர்கள் தளர்ச்சி அடைந்தனர். நேற்று மாலை பலர் உட்காரக் கூட முடியாமல் படுத்துவிட்டனர்.

    நேற்று இரவு ஒருங்கிணைப்பாளர்கள் டெய்சி, மோசஸ், நந்தகுமார் ஆகிய மூவரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை மேலும் 10 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மயக்கம் அடையும் நிலையில் தங்களை முதல்-அமைச்சர் அழைத்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்-அமைச்சர் அழைக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக இன்று காலை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள். அதில் மூத்த நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், மாயவன், முத்துசாமி, அன்பரசு ஆகியோர் மிகவும் தளர்ச்சியான நிலையில் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், மாயவன், தாஸ் மூவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது வழக்கம்தான். ஆனால் இதற்குமுன்பு போராட்டம் நடத்திய போதெல்லாம் அமைச்சர் அல்லது முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேசி போராட்டத்துக்கு தீர்வு காண்பார்கள்.

    ஆனால் இப்போதைய ஆட்சியாளர்கள் எங்களை அழைத்து பேச மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை.

    அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அரசு வருவாயில் 40 சதவீதம் சம்பளமாக கொடுக்கப்படுவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டது. நேற்று சட்டசபையில் நிதி அமைச்சர் பேசுகையில், “அரசு வருவாயில் 70 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுப்பதாக கூறியுள்ளார். இவை தவறான தகவல்கள் ஆகும்.

    சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்கிறார்கள். அரசுக்கு வருவாய் தொடர்பான புதிய தகவல்களை எங்களால் கொடுக்க முடியும். எங்களிடம் அதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன.

    எங்களிடம் உள்ள வழிமுறைகள் பற்றி அரசிடம் தெரிவிக்கவே நாங்கள் எங்களை அழைத்துப் பேசுங்கள் என்று சொல்கிறோம். அதை சொல்வதற்குகூட எங்களுக்கு வாய்ப்பு தர மறுக்கிறார்கள். எங்களை அழைத்து பேச மறுத்தால் நாங்கள் எப்படி அந்த வழிமுறைகளை தெரிவிக்க முடியும்.

    முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இந்த வழியாகதான் செல்கிறார்கள். ஆனால் உண்ணாவிரதம் இருக்கும் எங்களை அழைத்து பேச அவர்களுக்கு மனம் இல்லை. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

    இதே நிலை நீடித்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. எங்களது அடுத்தக்கட்ட போராட்டம் வேறு வடிவத்தை கொண்டு இருக்கும்.

    அத்தகைய நிலைக்கு எங்களை அரசு தள்ளக் கூடாது. தமிழக அரசு தொடர்ந்து எங்களை அவமதிக்கும் செயலை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #jactogeo #hungerstrike

    ×