search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக பரவலாக பெய்த மழை
    X

    ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக பரவலாக பெய்த மழை

    • 3-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
    • கொடுமுடியில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 2 நாட்க ளாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலை யில் நேற்று 3-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதிய முதல் இரவு வரை இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    குறிப்பாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாது இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    மாவட்டத்தில் கொடு முடியில் அதிகபட்சமாக 86 மில்லி மீட்டர் அதாவது 8 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் நம்பியூரில் சுமார் மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாநகரா ட்சி பகுதியில் நேற்று மதியம் 2 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது அதன் பிறகு கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

    சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. மாநகராட்சியில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு நாச்சியப்பா வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை ஆர்.கே.வி.ரோடு, பெருந்துறை ரோடு பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு வ.உ.சி. மார்க்கெட் பகுதி சேரும், சகதிவுமாக காட்சியளிக்கிறது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதேப்போல் பெருந்துறை, வரட்டுபள்ளம், கோபி, கவுந்தப்பாடி, தாளவாடி, குண்டேரி பள்ளம், மொடக்குறிச்சி, அம்மா பேட்டை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 3 நாட்களாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஈரோடு மாவட்டத்தில் கனத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில், ஏராளமான விவசாயிகள் நேந்திரம், கதலி, மொந்தன், பூவன் உள்ளிட்ட வாழை சாகுபடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் எண்ணமங்கலம் சுற்று வட்டார பகுதியில் சூறாவளி காற்று டன் கனமழை பெய்தது. இதில், அப்பகுதி யில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த, இரண்டாயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கொடுமுடி-86.80, நம்பியூர்-48, ஈரோடு-37, பவானி-32.80, பெருந்துறை-28, வரட்டுபள்ளம்-11.40, கோபி-9.20, கவுந்தப்பாடி-4.20, தாளவாடி-3.10, குண்டேரி பள்ளம்-3.40, மொடக்கு றிச்சி-3, அம்மா பேட்டை-2.

    Next Story
    ×