search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gandharvakottai"

    கந்தர்வக்கோட்டை அருகே காருக்கு வழி விட சாலையை விட்டு டிராக்டர் இறங்கியதால் திடீரென தலை குப்பற கவிழ்ந்தது. இதில் டிரைவர் பலியானார்.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கணபதிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகன் ராகவேந்திரா (வயது 35), டிராக்டர் ஓட்டி வருகிறார்.

    நேற்று கணபதிபுரத்தில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு டிராக்டரில் வந்து விட்டு பின்னர் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது பெருச்சிவன்னியம்பட்டி அருகே சென்ற போது எதிரே கார் வந்துள்ளது.

    காருக்கு வழி விட சாலையை விட்டு டிராக்டரை இறக்கியுள்ளார். திடீரென டிராக்டர் தலை குப்பற கவிழ்ந்தது. இதில் சிக்கிய ராகவேந்திரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங் குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சங் குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வீராச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை அரசியல் விளக்கவுரையாற்றினார். அவரிடம் கிளையின் சார்பில் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.25ஆயிரம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் ரத்தினவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணி, சித்திரைவேல், பன்னீர் செல்வம், இளையராஜா, சங்கிலிமுத்து, மில்லர், நாராயணசாமி, கிளைச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். பொதுக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ×