search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா கடத்தல்"

    • ஏசி பெட்டியில் கஞ்சா ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    ரெயில்களில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கஞ்சா கடத்தி வரும் நபர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் டாட்டா நகர்-எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து இன்று காலை சேலம் வந்த அந்த ரெயிலில் சேலம் போதை தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் உதவியுடன் சோதனை செய்தனர்.

    அப்போது ஏசி பெட்டியில் கஞ்சா ஆயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதிப்பு ரூ.2 கோடியாகும். இதை ஏ.சி பெட்டியில் பணிபுரியும் உதவி பணியாளர் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் செட்டி (31) என்பதும், ஏ.சி பெட்டியில் பெட்ஷீட், தலையணை வழங்கும் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

    இவர் கஞ்சா ஆயில் பந்தை கேரளாவிற்கு கடத்தி செல்ல இருந்தார். இவருக்கு இதை யார் வழங்கினார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசாரை கண்டதும் காரில் இருந்த 5 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது.
    • பிடிபட்ட 5 பேர் கும்பலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து காணப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரிக்கு அடிக்கடி புகார்கள் வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவண குமார் மேற்பார்வையில் பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து பாண்டி, தலைமை காவலர் சேகர், ஆனந்த், அல்டஸ் பிவின் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் பேட்டை கண்டியப்பேரி குளத்து கரை பகுதியில் சிலர் சந்தேகப்படும்படியாக நிற்பதாகவும், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் அடிக்கடி சென்று வருவதாகவும் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மீண்டும் வந்த அதே காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    உடனே போலீசாரை கண்டதும் காரில் இருந்த 5 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது. ஆனால் போலீசார் அந்த கும்பலை மடக்கிப்பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் வந்த காரை சோதனை செய்த போது அதில் 2 மூட்டைகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது ஏராளமான பண்டல்களில் சுமார் 25 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட 5 பேர் கும்பலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த கும்பல் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை வடக்கு காலனி தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பேச்சிமுத்து (வயது 27), தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கொம்பையா என்பவரது மகன் மதன் செல்வம் (22), தச்சநல்லூர் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த துரை என்பவரது மகன் முருகன் (20), அதே பகுதியை சேர்ந்த இசக்கி என்பவரது மகன் இசக்கி ராஜா (23), பேட்டை கண்டியபேரியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் அஜித்குமார் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? எங்கு சப்ளை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர்? இதுவரை யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Untitled-3: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி பகுதியில் ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சிவா மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அரசு கல்லூரி அருகே ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி பகுதியில் ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சிவா மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அரசு கல்லூரி அருகே ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே விருப்பாச்சி நகரை சேர்ந்த சதீஷ் என்கிற கந்தசாமி (30), ஜெக்கேரியை சேர்ந்த முருகேசன் (46), ராசிபுரம் கத்தநாச்சம்பட்டியை சேர்ந்த தினேஷ் (29), அண்ணாநகர் காலனியை சேர்ந்த கார்த்தி (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஓசூர் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 50 கிலோ எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்பு கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, ராசிபுரம் டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் கூறுகையில், கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 83 வழக்குகள் பதிவு செய்து 114 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 124 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக 19 குற்றவாளிகளின் வங்கி கணக்கில் உள்ள ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 666 முடக்கப்பட்டு உள்ளது. அவர்களது சொத்துக்கள் முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • காரில் ஏராளமான சாக்கு மூட்டைகளில், கஞ்சா இருப்பது தெரியவந்தது.
    • கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை பெரியசாமி புரம் பகுதியில் சூரங்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மதுரையில் இருந்து வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் சென்றது. அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் வேம்பார் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி தலைமையிலான போலிசார் அந்த காரை துரத்தி சென்று சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

    அப்போது காரில் ஏராளமான சாக்கு மூட்டைகளில், கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்த சென்னை கீழ்கட்டளையை சேர்ந்த தர்மேந்திரன், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த சிவராஜ் ஆகிய 2 பேரை பிடித்து சூரங்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் மதுரையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அதனை அவர்கள் படகு மூலமாக இலங்கைக்கு கொண்டு செல்ல இருப்பதும், சாக்கு மூட்டைகளில் மொத்தம் 540 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

    இக்கடத்தல் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைப் பொருள் வழக்குகளில் தொடர்புடைய 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர்.
    • போதைப் பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களில் 7 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    சென்னை:

    மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களாக நடத்திய வேட்டையில் 6 பெண்கள் உட்பட மொத்தம் 248 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    783 கிலோ கஞ்சா, 10 கிராம் கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

    போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 11 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர். போதைப் பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களில் 7 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    • அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வணிக ரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார்.
    • போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல.

    மதுரை:

    சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டில் வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 213 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன், அவரது சகோதரர் ரவி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தற்போது குபேந்திரன் தனக்கு ஜாமின் அளிக்கும் படி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இல்லை. காவல்துறையினர் பெய்யான வழக்கில் கைது செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வணிக ரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார். போலீசார் உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து உள்ளனர். எனவே அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கொடிய பாதிப்பையே ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், மனுதாரருக்கு ஜாமின் அளிக்க முடியாது என்று உத்தரவிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
    • போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டு தேனி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுவதுடன் அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கடத்திச்செல்லப்படுகிறது.

    இதனைதடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரிகளிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    மேலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு எஸ்.பி தனிப்படை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ஆண்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள்தேவி தலைமையிலான போலீசார் மறவபட்டி செல்லும் மெயின்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மணியகாரன்பட்டி கிழக்குதெருவை சேர்ந்த முருகன்(54), அதே ஊரை சேர்ந்த செல்லபாண்டி(35), அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் ஒரு ஆட்டோவில் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த 4.200 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து வீட்டில் ஏதேனும் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினர்.

    அப்போது வீட்டிற்குள் 12 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், 31 ஆன்ட்ராய்டு செல்போன்கள், 2 சாதா வகை செல்போன்கள், 2 டேப்லட் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையில் வைத்திருந்த ரூ.42 ஆயிரம் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    இந்த வாகனங்களை கஞ்சா வியாபாரிகள் அடகில் வாங்கி வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் இந்த வாகனங்கள் அனைத்தும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் ஒரு லாரியில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    கைதான 3 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் தயார் படுத்தி வருகின்றனர்.

    • சந்தேகக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன.
    • கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    தமிழக -ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன. அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது. லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    • காட்பாடியில் 2 பேர் கைது
    • போலீசார் வாகன தணிக்கையில் சிக்கினர்

    வேலூர்:

    ஆந்திராவில இருந்து ரெயில் மற்றும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், அவர்கள் ஒரு சில நேரங்களில் தப்பிச் செல்கின்றனர்.

    அதன்படி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக -ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டி யான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன. அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது.

    லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்ட லங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    • ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
    • 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    வேலூர்:

    ஆந்திராவில இருந்து ரெயில் மற்றும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், அவர்கள் ஒரு சில நேரங்களில் தப்பிச் செல்கின்றனர்.

    அதன்படி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகிக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன.

    அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது. லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 1 கிலோ எடை கொண்ட பொட்டலங்கள் சிக்கியது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீசார் அம்மூரில் இருந்து ரெட்டியூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அம்மூர் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (21), அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (24) என்பதும், அவர்கள் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
    • கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா நாயக் (34) பிதம்பரநாயக் (28) என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×