என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயிலில் கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கைது
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே அசாம் மாநிலம் கவுகாத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லக்கூடிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சேலம் ரெயில்வே உட்கோட்ட சிறப்பு பிரிவு போலிசார் அடங்கிய தனிப்படையினர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டதில் பொது பெட்டியில் உடமைகள் வைக்கும் பகுதியில் இருந்த பேக்கில் சோதனை செய்ததில் அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து குறித்து விசாரித்ததில் அந்த பெட்டியில் பயணம் செய்த அசாம் மாநிலம் போர்லெங்கிரி பகுதியை சேர்ந்த கைருல் இஸ்லாம் (வயது 34) என்பவர் கவுகாத்தி பகுதியில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் பகுதிக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்