search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் போராட்டம்"

    • ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூ.கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகேயுள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் கொளஞ்சியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தல் முடிந்தவுடன் சரி செய்வதாக பொதுமக்களிடம் அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆகியும், குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கையை ஊராட்சி தலைவர் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று காலை 7 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் கொளஞ்சி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டியதாகவும், சாலையில் இருந்த காலிக்குடங்களை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருநாவலூர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஊராட்சி செயலாளரையும் அங்கு வரவழைத்தனர். 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை யு.எஸ்.எஸ்., காலனி பகுதிக்கு உடுமலை-தாராபுரம் சாலையிலிருந்து 2 இணைப்பு சாலைகள் பிரிவு செல்கிறது. இந்த சாலைகளை மையமாகக்கொண்டு அரசு டாஸ்மாக் கடை மற்றும் 2 தனியார் மதுபான விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வருகின்ற போதை ஆசாமிகள் அந்தப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான விற்பனை கூடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தனியார் மதுபான கூடத்திற்கு வந்த ஆசாமி போதையில் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அசுத்தம் செய்ய முற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் மதுபான விற்பனை கூட மேலாளரை அணுகி விவரத்தை கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது தனியார் மதுபான விற்பனை கூடத்தில் பணிபுரியும் நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மதுபான கூடம் முன்பு குவிந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண்களை மதுபான கூட ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பதாகை, நாற்காலி, தண்ணீர் கேன், மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்கள்.

    அத்துடன் அரசு டாஸ்மாக் கடை மற்றும் தனியார் மதுபான கூடங்களை அகற்றக்கோரி உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வருகை தந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வள்ளலார் சர்வதேச மையத்தை ஞானசபை பெருவெளியில் அமைக்க கூடாதென்றும், இதனால் பூச நடசத்திர நாளில் நடைபெறும் ஜோதி தரிசனம் பாதிக்கும்.
    • கடந்த சில தினங்களுக்கு முன்பாக சர்வதேச மையம் அமைக்க ஞானசபை வெளியில் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் ஞானசபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கடந்த மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இந்த மையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, வள்ளலாரை பின்தொடரும் சன்மார்க்க சங்கத்தினர், அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    வள்ளலார் சர்வதேச மையத்தை ஞானசபை பெருவெளியில் அமைக்க கூடாதென்றும், இதனால் பூச நடசத்திர நாளில் நடைபெறும் ஜோதி தரிசனம் பாதிக்கும். எனவே, சர்வதேச மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், இவர்களுக்கு ஆதரவாக பா.ம.க.வும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    அடிக்கல் நாட்டு விழாவினை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக சர்வதேச மையம் அமைக்க ஞானசபை வெளியில் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும், சன்மார்க்க சங்கத்தினரும் கடந்த 8-ந் தேதி, குழிக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த போலீசார், அருகிலிருந்த தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணியின் கண்டனத்தை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வடலூர் தெய்வத்தமிழ் பேரவை மற்றும் சன்மார்க்க சங்கத்தினர், மற்றும் சன்மார்க்க ஆர்வலர்கள் இணைந்து ஞானசபை பெருவெளியில் சர்வதேச அமைக்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து வடலூர் 4 முனை ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அங்கு வந்த வடலூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார், 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் வடலூர் நகரப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    வடலூர் ஞானசபை வெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
    • வள்ளலார் சர்வதேச கட்டுமானப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்களும், சன்மார்க்க சங்கத்தினர்கள், பா.ம.க.வினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நேற்று பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்கக்கூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில் இன்றும் கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டும்போது பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வள்ளலார் சர்வதேச கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போராட்டத்தால் கட்டுமான பணிகள் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது.

    • வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது.
    • பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளாலாரின் சத்திய ஞான சபையும், தருமச்சாலையும் உள்ளது. இங்கு மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் 6 திரை நீக்கி ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு திட்டம் தீட்டி, ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அந்தப் பகுதியைச் சேர்ந்த பார்வதிபுரம் கிராம மக்களும், சன்மார்க்க சங்கத்தினர்கள், பா.ம.க.வினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    சத்திய ஞான சபை உள்ள பெருவெளியில் சர்வதேச அமைப்பதை கைவிட்டு, வேறு இடத்தில் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது. மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் பார்வதிபுரம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இன்று காலை இறங்கினர். வள்ளலார் சர்வதேச மையத்தை இங்கு அமைக்ககூடாது, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொது மக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    • கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கிறோம் புறக்கணிக்கிறோம் என்று சுவரொட்டிகளையும் ஒட்டி உள்ளனர்.
    • தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை யாரும் இப்பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கி பட்டியில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் 97 குடும்பத்தினருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பட்டாவை தனிநபர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து இப்பகுதி மக்கள் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தாங்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி தங்கள் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றியும், கையில் கருப்புக்கொடி ஏந்தியவாறு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கிறோம் புறக்கணிக்கிறோம் என்று சுவரொட்டிகளையும் ஒட்டி உள்ளனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத வரை யாரும் இப்பகுதிக்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் கோடாங்கிபட்டியும் இணைந்துள்ளது.

    • அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மறுத்து வருகின்றனர்.
    • நடவடிக்கை எடுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியை சேர்ந்த அலமேலுபுரத்திற்கு உட்பட்ட கோட்டமேடு, அசோக்நகர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

    தேவையான குடிநீர் பைப், சாக்கடை கால்வாய் பராமரிப்பு, ரோடு வசதி, தெருவிளக்கு ஆகியவை அமைத்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். மேலும், அவர்கள் நடவடிக்கை எடுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர்.

    இதுகுறித்து 3-வது வார்டு கவுன்சிலர், பேரூராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர மறுத்து வருகின்றனர்.

    முறையான நடவடிக்கை எடுக்கும் வரை வீடுகளில் கருப்பு கொடியேற்றி வைப்போம் என்றும், வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.
    • சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 37) வேன் டிரைவர்.

    இவருக்கு மீனா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். முருகன் கடந்த 8-ந் தேதி சிவராத்திரி அன்று அச்சம்பட்டி கிராமத்தில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தில் வேன் மோதிய சம்பவத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது அங்கு வந்த போலீசார் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாக இருந்ததாக கூறி முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர் வேனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முருகன் மர்மமான முறையில் இறந்துள்ளார். தொடர்ந்து அவரது உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். உயிர் இழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 6-வது நாளாக அவரின் உடலை வாங்க மறுத்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் சங்கரன்கோவில் தேரடி திடலில் இன்று ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, குன்னத்தூர் அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.

    இந்த கடையினால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் மதுகுடித்து விட்டு சிலர் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதால், வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதாலும், பெண்கள் தனியாக நடந்து கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாலும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி அதிகாரிகளிடம் குற்றம்சாட்டி வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிகிறது.

    இந்த நிலையில் சென்னானூர் கிராமத்தில் பூமி பூஜைக்காக கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமார் வந்தார்.

    அப்போது , குன்னத்தூர்-ஆதாலியூர் என்ற இடத்தில் பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எம்.பி. வந்த காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் எம்.பி.யிடம் இந்த பகுதியில் செயல்பட்டு வரும் மதுபான கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறினர்.

    அதன்பின்னர் தங்களது கோரிக்கை மனுவை எம்.பி.யிடம் பொதுமக்கள் கொடுத்தனர். உடனடியாக மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதாக டாக்டர் செல்லகுமார் எம்.பி. கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 25 ஊராட்சிகள், பேரூராட்சிகளுடன் இணைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும்போது வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட பணிகள் பாதிக்கப்படும். எனவே ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைக்க கூடாது என்று கூறினார்கள்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டது. ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமைச்சரை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியிருந்தார். இருப்பினும் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் லீபுரம், கோவளம், பஞ்சலிங்கபுரம், சாமிதோப்பு, கரும்பாட்டூர், குலசேகரபுரம், நல்லூர், ராமபுரம், இரவிப்புதூர் உள்பட 10 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயக்குமாரி லீன், ஸ்டெனி சேவியர், சிந்து செந்தில், தங்கமலர் சிவபெருமான், தேவி, சுடலையாண்டி நிலா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
    • மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்புரம் பகுதியில் 100 குடும்பங்கள் 4 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களின் பல கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் அபகரிப்பு முயற்சி செய்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில், ஆவுடையார்புரம் பகுதியில் மது போதையில் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர்.

    அப்போது தூத்துக்குடி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை செயலாளர் வக்கீல் செல்வகுமார் கூறுகையில், இப்பகுதியில் 3 நபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர்.

    அதை பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களின் வீட்டை அந்த 3 பேரும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளோம் என்றார்.

    இதுகுறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன.
    • 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி அருகே காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 26 சக்கரங்கள் கொண்ட 13 கனரக லாரிகள் வந்தன. இந்த லாரிகளால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீரென லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில்,

    தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மூலனூர், கன்னி வாடி மற்றும் குடிமங்கலம் ,கோவிந்தாபுரம், சத்திரம், குண்டடம், மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவிலான காற்றாடிகள் அமைக்கப்பட்டு வந்தது.

    இப்பொழுது ஒரு காற்றாடி ரூ.8 கோடி முதல் 12 கோடி வரை பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது . ஆலைகளில் அமைக்கப்படும் காற்றாடி இறக்கைகள் மற்றும் உபகரணங்கள் 200 அடி நீளமுள்ள லாரிகளில் ஏற்றி வருகின்றனர்.

    தாராபுரத்தில் இருந்து பகவான் கோவில் , பொன்னிவாடி செல்லும் சாலையானது 7 மீட்டர் கொண்ட சாலை ஆகும் .இதில் 6 மீட்டர் அகலமுள்ள லாரிகள் வருகின்றன. அதுவும் இந்த லாரிகளானது ஒவ்வொரு லாரியாக வராமல் தொடர்ச்சியாக 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவில் மட்டும் லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மூலனூர் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×