என் மலர்
சென்னை
- வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்?
- நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முதல்வராக 30.80 சதவீதம் பேரும், டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வராக 19.97 சதவீதம் பேரும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு 17.38 சதவீதம் பேரும், டி.டி.வி. தினகரனுக்கு 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனுக்கு 14.71 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வருகிற தேர்தலில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள அரசியல் கட்சி எது என்கிற கேள்விக்கு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று 80.74 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் காலத்தில் இவரால் தான் தமிழகம் தலை சிறக்கும் என நீங்கள் நம்புகிற இளம் தலைவர் யார்? என்கிற கேள்விக்கு அண்ணாமலை முதலிடத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 2-வது இடத்தில் விஜய், 3-வது இடத்தில் உதயநிதி, 4-வது இடத்தில் சீமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவோம் என்று 17.7 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு ஓட்ட போடுவாம் என்று 17.3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிப்போம் என்று 12.20 சதவீதம் பேர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பா.ஜ.க.வுக்கு 5 சதவீதம் பேரும், காங்கிரசுக்கு 3.10 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு 4.9 சதவீதம் பேரும், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு 1.4 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 2.5 சதவீதம் பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று 6 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிற கட்சிகளுக்கு ஓட்டு போடுவோம் என 10.16 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
யாருக்கும் ஓட்டு போடப்போவது இல்லை என 6 சதவீதம் பேரும், நோட்டாவுக்கு வாக்களிக்கப் போவதாக 3.3 சதவீதம் பேரும் கூறியுள்ள நிலையில் யாருக்கு ஓட்டு போடுவது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என 8.3 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற யூகத்தின்படி நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமைந்தால் தி.மு.க. அணியை விட சிறிதளவு முன்னிலை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக 33.60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.-பா.ஜ.க., பா.ம.க. கூட்டணிக்கு 28.70 சதவீதம் பேரும் இருவேறு கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு 25.3 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 12.40 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கஞ்சா சாகுபடி 0 சதவீதமாக உள்ளது.
- எங்கேயாவது கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில் சர்வதேச யோகா தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதி ஆணையர் விஜயலட்சுமி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகள், மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்த மருத்துவ பல் கலைக்கழகம் அமைப்பதற்கு கவர்னர் ஒப்புதல் தராமல் இருந்தார். பிறகு சட்டமன்றத்தில் அந்த மசோதா திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது சட்டபூர்வமான ஆய்வுகள் நிறைவடைந்து வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக் கழகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து தயாராக உள்ளது.
சித்த பல்கலைக்கழக மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெற்று நிச்சயம் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும். போதைப்பொருள் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கஞ்சா சாகுபடி 0 சதவீதமாக உள்ளது. எங்கேயாவது கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.
கடந்த ஆண்டுகளில் பெருகி இருந்த போதை நடமாட்டம் தற்பொழுது மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இன்றைக்கு கஞ்சா பூஜ்யம் சதவிகித சாகுபடி என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி நன்கு உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்!
- மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்!
சென்னை:
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்கு இன்று திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-
தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பான வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!
அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்! என்று கூறியுள்ளார்.
- இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி.
- மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இதையொட்டி தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா சபை, நமது பாரத நாட்டின் அடையாளங்களில் ஒன்றான யோகாசனத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
யோகா பயிற்சிகள், உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நல்வாழ்வை மேம்படுத்துவதை , உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில், மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.
யோகா பயிற்சி செய்வது வழக்கமான உடற்பயிற்சியைத் தாண்டி, உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, சுவாசத்தை சீரமைப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது என, அன்றாட வாழ்வை மேம்படுத்துகிறது.
அனைவரும் யோகாசனம் செய்வோம். நமது உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
- விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என்பதை எல்லோரும் உணர வேண்டும்.
விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை, அந்த அடிப்படையில் மதுரை பா.ஜ.க. முருக மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முருக மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மதுரை மாநகரில் முருக பக்தர்கள் மாநாடு விமரிசையாக நடைபெற வாழ்த்து தெரிவித்துள்ள அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிகச்சரியாக குறிப்பிட்டதைப் போல, விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என்பதை எல்லோரும் உணர வேண்டும். எனவே, கட்சி பேதமின்றி, ஆன்மீக நோக்கத்துடன் நாளை நடைபெற இருக்கும் இம்மாநாட்டில் உலகெங்கும் இருக்கும் முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.
- வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரியும் சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை நகரம் ஆகிய இடங்களில் 103 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 5 செ.மீ, கண்ணகி நகர், மேடவாக்கம், மடிப்பாக்கம், மணலியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடல் காற்று உள் நுழைவதில் ஏற்படும் தடை மற்றும் தாமதம் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் பகல் நேரத்தில் வெப்பமான சூழலே நிலவும், கடலோர மாவட்டங்களில் பகல்நேர வெப்ப நிலை 100 டிகிரி அளவுக்கு பதிவாக வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
- வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண்.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
யோகா மனிதர்களுக்கு காலம் கொடுத்தக் கொடை. வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண். ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா கலைக்கு ஈடு இணை எதுவுமில்லை. விலையில்லா மருத்துவக் கலையான யோகாசனத்தை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்; உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம்.
- பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள்.
சென்னை:
மதுரையில் நாளை இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் பிரமாண்டமான முருகர் மாநாட்டுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு காட்சி அரங்குகளை பார்ப்பதற்கு இப்போதே ஏராளமானவர்கள் திரண்டு வருகிறார்கள். அதேநேரம் இந்த மாநாடு அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்படுகிறது. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதாக விமர்சனம் செய்து வருகின்றன.
இதுதொடர்பாக பா.ஜ.கவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-
நாளை நடைபெறும் முருகர் மாநாட்டில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பது இதை விமர்சிப்ப ர்களுக்கும் தெரியும். முதலில் கடவுளை அரசியல் கட்சிகளின் பட்டியலில் சேர்ப்பது தவறு. மேலும் இந்த முருகர் மாநாட்டை நடத்துவது பா.ஜ.க. அல்ல. இந்து முன்னணி அமைப்புதான் நடத்துகிறது.
மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம். எனவே தான் இந்த மாநாட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் .அதை வைத்து பா.ஜ.க. மீது களங்கம் கற்பிக்க முயன்றால் அதன் எதிர்வினை அவர்களுக்கு தான் பாதகமாக இருக்கும். முதலில் தி.மு.க.வினர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தட்டும்.
இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிற தி.மு.க.வை சேர்ந்த குடும்பத்தினர் தான் கோபுரங்கள் முன்பு நின்று கொண்டும் குங்குமம் திருநீறு அணிந்தும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை பார்க்கிறோம். ஆக உங்களிடம் இரண்டு முகம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் குடும்பத்தினரையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டு நாங்களும் முருகர் மாநாடு நடத்தினோம் என்று சொல்லுவது ஏன்? பொங்கல் நேரங்களில் பொங்கல் வைத்து வழிபடவும் செய்கிறார்கள்.
இப்படி கடவுள் பெயரைச் சொல்லியே இத்தனை ஆண்டுகளாக நாடகம் போட்டு வருகிறார்கள். முருகன் என்றால் அழகு. முருகன் தமிழ் கடவுள். என்று தமிழ் மக்கள் பெருமைப்படுகிறார்கள். முருகரை வணங்குவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தானே? பஞ்சாப்புக்கு சென்றால் சீக்கியர்களுக்கு பொற்கோவில் அடையாளமாக இருக்கிறது.
ஆந்திராவுக்கு சென்றால் திருப்பதி பாலாஜி அடையாளமாக இருக்கிறார். அதே போல் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறுபடை முருகன் அடையாளமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட தமிழர்களின் அடையாளத்தை கொச்சைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அரசியல் கலந்து நாசப்படுத்தவும் முயற்சிக்கிறது தி.மு.க.
பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள். முருகர் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்.
சாதியை வைத்தும் ஓட்டுக்காக மதத்தை வைத்தும் அரசியல் செய்து வரும் தி.மு.க.வினர் இப்போது தங்கள் அரசியலுக்காக மக்களின் நம்பிக்கையையும் உடைக்க பார்க்கிறார்கள். தி.மு.க.வினரின் விமர்சனம் பா.ஜ.க.வுக்கு எதிரானது அல்ல. மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது. இதை தமிழக மக்கள் உணர்வார்கள்.
கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்று திரண்டு தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்து வதிலும் பலப்படுத்துவதிலும் உங்களுக்கு என்ன பிரச்சனை?
தி.மு.க.வினர் இரண்டு முகங்களோடு ஓட்டு வங்கி அரசியலுக்காக நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் ரசிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தின், பின்புற அச்சு உடைந்து இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியிருக்கின்றன. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்துள்ள நிலையில், ஓட்டுனரின் திறமையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியில் தெறிப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதே போல் தான் அரசுப் பேருந்துகளும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பேருந்து விபத்து நடக்கும் போதும் ஓர் ஓட்டுனரையோ, நடத்துனரையோ, தொழில்நுட்பப் பணியாளரையோ பணியிடைநீக்கம் செய்து விட்டு கடமையை முடித்துக் கொள்கிறது திராவிட மாடல் அரசு.
பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்; தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும். இது தான் விபத்தில்லா பயணத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் எளிதான தீர்வு! என்று கூறியுள்ளார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கி, கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் விலை அதிகரித்து மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 265-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.55-ம், கிலோவுக்கு ரூ.440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. இதனால் தங்கம் விலை ரூ.74 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,235-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,880-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
19-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,120
18-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,000
17-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,600
16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-06-2025- ஒரு கிராம் ரூ.120
19-06-2025- ஒரு கிராம் ரூ.122
18-06-2025- ஒரு கிராம் ரூ.122
17-06-2025- ஒரு கிராம் ரூ.120
16-06-2025- ஒரு கிராம் ரூ.120
- 3 ஆயிரத்து 336 சதுர அடி பரப்பளவில் உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது.
- நவீன தொழில்நுட்பம் மற்றும் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டு உள்ள வள்ளுவர் கோட்டம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
சென்னை:
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம் 1974-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது.
சுற்றுலா மையமாக திகழ்ந்து வரும் வள்ளுவர் கோட்டம், உலகத் தமிழ் அறிஞர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படும் பெருமைக்குரிய ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளுவர் கோட்டத்தின் முன்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு அவரது பிறந்தநாளின்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றபோது, வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.
அப்போது, பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்தின் தோற்றத்தை பார்த்து வேதனை அடைந்தார்.
இதைத்தொடர்ந்து, வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க உத்தரவு பிறப்பித்த மு.க.ஸ்டாலின், இந்த பணிக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்தார்.
அதன்படி, வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடந்தது. 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஆயிரத்து 548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான 'அய்யன் வள்ளுவர் கலையரங்கம்' தமிழ் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தகுந்த வகையில் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது.
கருணாநிதியின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது 'குறள் மணிமாடம்'.
100 பேர் அமரும் வசதியுடன் 'திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம்' இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
27 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், தரைத் தளத்தின் கீழ் பகுதி ஆகியவற்றில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 336 சதுர அடி பரப்பளவில் உணவகம் அமைக்கப்பட்டு உள்ளது.
உணவகத்தில் ஒரே நேரத்தில் 72 பேரும், காபி அருந்தும் பகுதியில் 24 பேரும் அமரும் வகையில் இந்தக்கூடம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் அருகே நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அமைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளுவர் சிலையை நோக்கி பார்வையாளர்கள் தடையின்றி செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய 'வேயா மாடம்' ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
திருவாரூர் தேர் வடிவில் 106 அடி உயரமுள்ள திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. இசை நீரூற்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.
நவீன தொழில்நுட்பம் மற்றும் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டு உள்ள வள்ளுவர் கோட்டம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
புதுப்பிக்கப்பட்டு உள்ள இந்த வள்ளுவர் கோட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து, இங்கு முதல் நிகழ்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்து நடத்தும் பாராட்டு விழா நடக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் 13 ஆயிரத்து 988 மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கியது உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா மாற்றுத்திறனாளிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
- ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் வழங்கப்படுகிறது.
- தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் இன்று முதல் ஜூலை 31-ந் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.
இந்த டோக்கன்கள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், ஐ.சி.எப்., தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி, பெரம்பூர், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர் ஆகிய 40 பணிமனை பஸ் நிலையங்களில் வழங்கப்படுகிறது.
இருப்பிட சான்றாக ரேஷன் அட்டை, வயது சான்றிற்காக ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்றவையும் மற்றும் 2 கலர் புகைப்படங்களும் கொடுத்து டோக்கன்களை பெற்றுகொள்ளலாம். அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளும் இதில் பயன்பெறலாம்.






