search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    திருவள்ளூர் ஜெயிலில் கைதி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

    திருவள்ளூர் ஜெயலில் கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள சப்-ஜெயிலில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6-ந் தேதி பெருங்களத்தூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 46) என்பவரை ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக பட்டாபிராம் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் பிரபாகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் சப்-ஜெயிலில் அடைத்தனர். இன்று காலை அவர் தண்ணீர் குடிப்பதற்காக ஜெயில் வளாகத்தில் இருந்த டம்ளரை எடுத்தார்.

    அப்போது திடீரென பிரபாகரன் டம்ளரால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைநத மற்ற கைதிகள் கூச்சலிட்டனர். உடனடியாக விரைந்து வந்த ஜெயில் அதிகாரிகள் உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரபாகரன் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெயலில் கைதி கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×