என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வருமான வரி சோதனையை தவிர்க்க ஆன்லைன் டிக்கெட் திட்டம் உதவும்- கடம்பூர் ராஜூ பேட்டி
கன்னியாகுமரி:
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். இன்று காலை 6 மணிக்கு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். அவரை கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் வரவேற்றார். பகவதி அம்மன் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, புரட்சி தலைவி ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகிறது. ஏராளமான நலத்திட்டங்களை நாள்தோறும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.
தமிழகத்திற்கு கூடுதலாக 11 மருத்துவ கல்லூரிகளை அவர் பெற்றுத்தந்து உள்ளார். இதன் மூலம் அதிக மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியும். இது வரலாற்று சாதனை ஆகும்.
சேலத்தில் ரூ.1000 கோடி செலவில் கால்நடை பூங்காவுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் இந்த கால்நடை பூங்கா அமைய உள்ளது. கால்நடை தொடர்பான மருத்துவ படிப்புகள், ஆராய்ச்சிகள் போன்ற பல்வேறு வசதிகள் இதில் இடம்பெறும்.
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால் நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. விவசாயத்தை சார்ந்தே இது உள்ளது. எனவே மக்கள் நன்மைக்காக நாட்டு மாடு, நாட்டுக்கோழி போன்ற நாட்டுபுற இனங்கள் அழியாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புரட்சித்தலைவி ஜெயலலிதா மக்களுக்கு விலை இல்லா வெள்ளாடு, கறவை மாடுகள் வழங்கினார். அவர் வழியில் எடப்படி அரசு நாட்டுக்கோழி வழங்கி உள்ளார். இந்த அரசு பொதுமக்களுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கும்.
எடப்பாடியார் அரசு எண்ணற்ற தலைவர்களுக்கு அரசு விழா எடுத்து வருகிறது. அவர்களுக்கு மணிமண்டபங்களும் கட்டப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு புரட்சித்தலைவி ஆட்சியில் சிலை அமைக்கப்பட்டது. அவருக்கு மணி மண்டபம் கட்ட தோவாளையில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அங்கு மணிமண்டபம் கட்டப்படும். அதேப்போல கன்னியாகுமரியில் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபங்களை புனரமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்வது பற்றிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சினிமா படங்களின் வசூல் பற்றி தோராயமாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் வருமானவரி சோதனை போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. படங்களின் வசூல் தொடர்பாக உண்மைத் தன்மை தெரிய ஆன்லைன் டிக்கெட் விற்பனை உதவும்.
சினிமா தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு படங்களின் வசூல் பற்றிய உண்மைத்தன்மை தெரியவரும். இதன்மூலம் சினிமா துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். பொதுமக்களும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் சரியான விலையில் ஆன்லைனில் டிக்கெட் எடுக்கமுடியும்.
3-வது கட்ட ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத் தில் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி இறுதிசெய்யப்படும். இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைன் டிக்கெட் திட்டம் அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்