search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமான வரி"

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
    • மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இவர், 1988-ம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் (ஐ.ஆர்.எஸ்.) சேர்ந்தார். குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறையில் சென்னை புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட இவர், தற்போது பதவி உயர்வு பெற்று முதன்மை தலைமை ஆணையர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உள்ளார்.

    • பட்டியலில் உள்ளவர்களில் விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை என ஆய்வு செய்யப்படுகிறது.
    • முன்னுதாரணமான இந்த திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் தமிழக  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருமான வரி தாக்கல் செய்பவர்கள் குறித்த தகவல் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால், அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல சேவைகளை பெறுவதில், யாருக்கு எந்த சூழல் இருக்கிறது என்று கண்டறிந்து அரசு திட்டங்களை சரிபார்க்கலாம் என பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக இந்த துறையுடன் இணைந்து பணிசெய்து இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுமார் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    அந்த தகவல் பல திட்டங்களுக்கு, குறிப்பாக மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயனாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் டிஎன்இஜிஏ என்ற நிறுவனத்தில்தான் அந்த தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆய்வு அந்த பட்டியலில் உள்ளவர்களின் குடும்ப சூழ்நிலையை கண்டறிந்து, விதிமுறைக்கு யார் உட்பட்டவர்கள், யார் இல்லை, என ஆராய்ச்சி செய்கிறோம். எனவே தமிழ்நாடு வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக என் துறை சார்பாக மத்திய நிதி மந்திரி, நிதித்துறை செயலர் மற்றும் சிபிடிடி தலைவரை சந்தித்து முன்மாதிரியான சேவைக்கு நன்றி கூறினேன்.

    அதன் பலன்களை பகிர்ந்துகொள்கிறோம், இந்த முன்னுதாரணமான திட்டத்தை பல மாநிலங்களுக்கு பயன்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறினேன். அதற்கு சிறப்பாக செயல்படுத்துவதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தொடர்ந்து என்ன தேவையோ கேளுங்கள், முடிந்த அளவுக்கு செய்துகொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.

    இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

    • வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்தப்பட்டனர்.
    • இதனால் வருமான வரி தாக்கல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய வருமான வரித்துறை இன்று வெளியிட்டு டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

    2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாள் ஜூலை 31-ந்தேதி ஆகும்.

    இன்று மாலை 6.30 மணி வரை சுமார் 6 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமானோர் தாக்கல் செய்துள்ளார்கள்.

    இன்று மட்டும் சுமார் 26 லட்சத்துக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

    வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    • வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்த விரும்புகிறேன்.
    • ஜி.எஸ்.டி. வளர்ச்சி விகிதம் 12 சதவீதமாக உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய வருவாய் செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2022-23 மதிப்பீட்டு ஆண்டு வருமான வரி தாக்கலுக்கு கடைசி நாளான கடந்த ஆண்டு ஜூலை 31-ந்தேதி வரை 5.83 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த ஆண்டு அதைவிட அதிகமானோர் தாக்கல் செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

    வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதற்காக வரி செலுத்துவோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    வருமான வரி தாக்கலுக்காக கடைசி வரை காத்திருக்க வேண்டாம் எனவும், காலக்கெடு நீட்டிக்கப்படும் என நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்த விரும்புகிறோம். காலக்கெடு நீட்டிப்புக்கான யோசனை எதுவும் அரசிடம் இல்லை.

    எனவே வருமான வரி தாக்கலை விரைவாக செய்து முடியுங்கள் என அறிவுறுத்த விரும்புகிறேன். ஏனெனில் இதற்கான காலக்கெடுவான ஜூலை 31-ந்தேதி வேகமாக வருகிறது.

    வரி திரட்டல் இலக்கைப் பொறுத்தவரை, வளர்ச்சி விகிதமான 10.5 சதவீதத்துக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

    ஜி.எஸ்.டி. வளர்ச்சி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. எனினும், விகிதக்குறைப்பு காரணமாக உற்பத்தி வரியில் வளர்ச்சி விகிதம் 12 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

    2023-24-க்கான மத்திய பட்ஜெட்டின் படி, நடப்பு நிதியாண்டில் மொத்த வரி வருவாய் ரூ.33.61 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.

    இதில் கார்பரேட் மற்றும் தனிநபர் வருமான வரியை விட, 10.5 சதவீதம் அதிகமாக அதாவது ரூ.18.23 லட்சம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    அதேநேரம் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் சுங்க வரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.2.10 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.33 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின.

    புதுடெல்லி :

    வருமான வரித்துறை சார்பில் ஆன்லைனில் நடந்த 'சம்வாத்' அமர்வில், சி.பி.டி.டி. என்று அழைக்கப்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-

    * வருமான வரி கணக்குகளைப் பெற்று அவற்றை சரிபார்க்கும் பணி விரைவாக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி கூடுதலாக செலுத்தி இருந்தால் அவற்றை திரும்பச்செலுத்துவதற்கான (ரீபண்ட்) அவகாசம் கடந்த 2021-22-ம் ஆண்டில் 26 நாட்களாக இருந்தது. அது 2022-23-ம் ஆண்டில் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    * வருமான வரி கணக்கு தாக்கல் செய்த நாளிலேயே அது தொடர்பான செயல்முறைகளை செய்து முடிப்பது 100 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22-ம் ஆண்டில் இது 21 சதவீதமாக இருந்தது. 2022-23 நிதி ஆண்டில் இது 42 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

    * கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதியன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 22 லட்சத்து 94 ஆயிரம் கணக்குகளின் செயல்முறைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

    * இந்த ஆண்டில் மார்ச் 31-ந் தேதி 24 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கலாகின. ரூ.2,480 கோடி கூடுதல் வரியாக வசூலாகி உள்ளது.

    * கடந்த நிதி ஆண்டின் இறுதியில் (மார்ச் 31, 2023) 4 லட்சத்துக்கும் அதிகமான முகமற்ற மதிப்பீடுகள் (ஆன்லைன் வழியான மதிப்பீடுகள்) நிறைவு அடைந்துள்ளது.

    * 2021-22 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில், முகமற்ற மதிப்பீடுகள் தொடர்பான குறைபாடுகள் 60 சதவீதம் குறைந்துள்ளது.

    * முகமற்ற மதிப்பீடுகள் வழியாக 1 லட்சத்துக்கும் அதிகமான மேல்முறையீடுகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வருமான வரி தாக்கல் செய்ததில் முறைகேடு செய்த நல்லாசிரியர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    • மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி காவல் நிலைய சரகம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் கே.ராமச்சந்திரன்(38) என்பவருக்கு கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

    இவரது சகோதரர் பஞ்சாட்சரம் என்பவர் வருமான வரி தொடர்பான நிறுவனத்தை மதுரை, ராமநாத புரம் ஆகிய இடங்க ளில் நடத்தி வருகிறார்.

    இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது அதிகமான நபர்களுக்கு குறைவாக கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்று கொடுத்துள்ளார்.

    இது சம்பந்தமாக ரூ. 2 கோடியே 84 லட்சம் திரும்ப பெற்றுக் கொடுத்ததாக வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் சி.பி.ஐ. கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து 2022ம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பிணையில் வந்துள்ளார்.

    இந்த நிலையில் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் ரூ. 12 லட்சம் வங்கி மூலம் பணம் அனுப்பி உள்ளார். மேலும் இருவருக்கும் வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை இருப்பதால் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்து மதுரை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    • தொழில் அதிபர் வீடு-அலுவலகங்களில் பல கோடி ரூபாய் ஆவணங்கள் சிக்கின
    • ஆடிட்டரின் வீடு- அலுவலகம் சோதனை

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்திலும் 20 இடங்களில் இந்த சோதனை நடந்தது. குறிப்பாக திரு வட்டாறை அடுத்த சிதறால் பகுதியை சேர்ந்த ராஜே ந்திரன் என்பவரது வீடு, திருமண மண்டபம், செங்கல் சூளை போன்றவற்றில் ஓரே நேரத்தில் சோதனை நடத்த ப்பட்டது.

    தொழில்அதிபர் ராஜேந் திரனுக்கு, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கல் குவாரிகள் உள்ளன. மேலும் இவர் குமார கோவில் முருகன் என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறார்.

    இவருக்குச் சொந்தமான லாரிகள் மூலம் தினமும் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், ஜல்லி, எம்.சாண்ட், என்.சாண்ட்போன்றவை திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்ஞம் துறை முகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சூழலில் தான் வருமான வரித்துறையினர் ராஜேந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட் டனர். மேலும் அவ ருக்கு நெருக்கமான உறவினர்களின் வீடுகள் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள அவரது விடுதி ஆகிய வற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவண ங்களை வருமான வரித்துறை யினர் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. அவற்றை தங்கள் அலுவலகம் கொண்டு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    ராஜேந்திரனின் ஆடிட்ட ரின் வீடு மற்றும் அலுவலகம் கழுவன் திட்டை பகுதியில் உள்ளது. அங்கும் வருமான வரித் துறையினர் சோதனை செய்தனர். இதில் சொத்து மற்றும் பல கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    • தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
    • மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது

    புதுடெல்லி:

    வருமான வரி விலக்கு தொடர்பான சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த சம்பளதாரர்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    இதன்மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த அறிவிப்பானது மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு இனிப்பான செய்தியாக கருதப்படுகிறது.

    மேலும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.3 லட்சம் வரை - வரி இல்லை
    • ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை- 5 சதவீத வரி (வரி தள்ளுபடி உள்ளதால் இந்த பிரிவினர் வரி செலுத்த தேவையில்லை)
    • ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை - 10 சதவீத வரி
    • ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை - 15 சதவீத வரி
    • ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20 சதவீத வரி
    • ரூ.15 லட்சத்திற்கு மேல்- 30 சதவீத வரி.
    • வருமான வரி விகிதாசாரத்தை மாற்ற வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்டது முதல் அநேகமாக எல்லாவித பொருட்கள் மீதும் அதிகபட்ச விகிதாசாரத்தில் வரி விதிக்கப்பட்டு பணக்காரர்கள் முதல் பாமரர்கள் வரை சுமை ஆகிவிட்டது. சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை.

    செலவினங்கள் மீது விதிக்கப்படும் வரியே சேவை வரி என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. வருமான வரி, வருமானம் அதிகமுடையோர்க்கு மட்டுமே விதிக்கப்படும் நிலையில் சேவை வரி என்ற செலவின வரி அனைத்து தரப்பினரிடமும் பாகுபாடின்றி வசூலிக்கப்படுகிறது.

    வருமானத்துக்கும் வரி, அதேநேரம் செலவினத்துக்கும் வரி என்ற கொள்கை நியாயமற்றது. எனவே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதனை கவனத்தில் கொண்டு வருகிற மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களை மாற்றியமைக்க முன்வர வேண்டும். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் வரிச்சுமையில் இருந்து விடுபட வேண்டும். வருமான வரி வரம்பை ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 80 ஆண்டு நிறைவடைந்த மிக மூத்த குடிமக்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும். வரிகள் சுமையானது என்ற மக்களின் எண்ணத்தை போக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியோடு நிறைவடைகிறது.
    • சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    சென்னை :

    வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வருகிற 31-ந் தேதியோடு நிறைவடைகிறது. இந்த கால கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.

    இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது.
    • இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    கொழும்பு :

    இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தனிநபர் மற்றும் கார்பரேட்டுக்கான வருமான வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    அந்தவகையில் மாத வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.12 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தாலே வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    இந்த வரி உயர்வு நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    ஆனால் இந்த வரி உயர்வு நடவடிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நியாயப்படுத்தி உள்ளார். நாட்டின் உயர்ந்த நன்மைக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    இலங்கையின் முதன்மை பட்ஜெட்டில் உபரி வருவாய் தேவை என சர்வதேச நிதியம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் இலங்கையின் வருவாயையும் 8.5 சதவீதத்தில் இருந்து 14.5 சதவீத ஜி.டி.பி.யாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    நாட்டின் பெரும்பான்மையான வரி வருவாய் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் உள்பட பெரும்பாலான குடிமக்கள் மறைமுக வரி செலுத்துவதை தவிர வேறு வழியில்லை.

    இலங்கையின் நேரடி வரி வருவாயை 20 சதவீதம் அதிகரிக்குமாறு சர்வதேச நிதியம் கூறியுள்ளது. இல்லையென்றால் சாதாரண மக்களும் வரி செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்து உள்ளது.

    எனவே ரூ.1,00,000-க்கு மேல் சம்பாதிக்கும் நபர்களுக்கு வருமான வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது குடிமக்கள் மத்தியில் ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது.

    ஆனால் இந்த வரி அமைப்பு இல்லாமல், 2026-ம் ஆண்டுக்குள் 14.5 முதல் 15 சதவீதம் ஜி.டி.பி. என்ற விரும்பிய இலக்கை அடைய முடியாது.

    இந்த வரி முறையை அரசு திரும்ப பெற்றால், சர்வதேச நிதியத்தின் உதவி கிடைக்காது. சர்வதேச நிதியத்தின் ஒப்புதல் இல்லாமல், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் நிதி ரீதியாக உதவி வரும் நாடுகளிடம் இருந்தும் உதவி கிடைக்காது. எனவே இந்த வரி உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்ந்தாலோ அல்லது மேலும் மோசமடைந்தாலோ நாட்டின் வணிகத்துறை பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    அதிகரிக்கும் பணவீக்கம், உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவற்றால் நாட்டின் வர்த்தகத்துறையினரின் வருவாய், இலாபம் மற்றும் பணப்புழக்கத்தை வெகுவாக பாதித்து இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    இந்த நிலையில் நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருப்பதாக பிரபல புத்தமத துறவி வரககோடா குணவர்தனே தேரா குற்றம் சாட்டியுள்ளார். நாட்டுக்கான தங்கள் கடமையையும் அவர்கள் புறக்கணித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தேசிய சொத்துகளை பாதுகாப்போம் என்ற வாக்குறுதியின் பேரில் வரும் அனைத்து அரசுகளும் அதற்கு மாறாக சொந்த நலன்களில் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறை கூறினார்.

    ×