என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் திமுக போராட்டம்
Byமாலை மலர்12 Dec 2019 2:49 PM GMT (Updated: 12 Dec 2019 2:49 PM GMT)
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
சென்னை:
பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவிவருகிறது.
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ம் தேதி மாவட்டம் தோறும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க.- அ.தி.மு.க.வை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X