search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிரட்டல்
    X
    மிரட்டல்

    வடமதுரை அருகே மனைவியை தாக்கி மிரட்டிய கணவர்

    வடமதுரை அருகே பணம் கேட்டு மனைவியை தாக்கி மிரட்டிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே குளத்தூர் பாடியூர் புதூரை சேர்ந்தவர் பழனிமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கன்னியம்மாள் (38). இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கின்றனர்.

    மேலும் விவாகரத்து கேட்டு கன்னியம்மாள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இலவச ஆடுகள் பெற அரசு உதவித்தொகையை பெறுவதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கன்னியம்மாள் மற்றும் அவரது உறவினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கன்னியம்மாளை மறித்துதாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வடமதுரை போலீசில்புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×