என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது குடிக்க பணம் கேட்டு தகராறு: வாலிபரை கொலை செய்த தந்தை கைது
Byமாலை மலர்15 Oct 2019 4:47 PM GMT (Updated: 15 Oct 2019 4:47 PM GMT)
தர்மபுரி அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் கடப்பாரையால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள தகடூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சண்முகம் (27). இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும், 5 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர். சண்முகத்துக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் பெற்றோரிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது சண்முகம், தனது தந்தை கதிர்வேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் கிடந்த கடப்பாரையை எடுத்து சண்முகத்தின் வயிற்றில் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சண்முகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி கதிர்வேலை கைது செய்தனர். தந்தையே மகனை குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X