search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் கொலை"

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை கீழ ஈரால் அருகே உள்ள எத்திலப்பன் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பிரபாகரன் (வயது 28). 108 ஆம்புலன்ஸ் டிரைவர்.

    இவருக்கும் கயத்தாறு வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த தாவீது என்ற குருசாமி மகள் லாவண்யாவுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு லாவண்யா தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று முன்தினம் கயத்தாறில் கோவில் கொடை விழா நடைபெற்றுள்ளது.இதற்காக பிரபாகரன் மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    இதனால் அவருக்கும் அவரது மாமனார் குரு சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த குருசாமி மற்றும் அவரது மகன்கள் மாரியப்பன்(30), சோலையப்பன்(28) ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரபாகரனை சரமாரியாக அடித்து தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிரபாகரன் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ் பெக்டர் தமிழ்செல்வன் ஆகியோர் குருசாமி மற்றும் அவரது மகன்கள் மாரியப்பன், சோலையப்பன் ஆகியோரை கைது செய்த னர்.

    • மாரிமுத்துவுடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சுங்கான் கடையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்தவர் மாரிமுத்து (வயது 33).

    விருதுநகரைச் சேர்ந்த இவர், இங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

    அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் மது குடித்ததில் கீழே விழுந்ததாகவும் அதனால் தான் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக மாரிமுத்து உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் தாக்குதலில் தான் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கருதினர். அதன்அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் மாரிமுத்துவுடன் வேலை பார்த்த சாத்தான்குளத்தை சேர்ந்த சாலமோன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர், பின்னர் தான் தாக்கியதில் தான் மாரிமுத்து கீழே விழுந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை கைது செய்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நானும் மாரிமுத்துவும் மது அருந்தியபோது அவர் என்னிடம் ரூ.200 கடன் வாங்கினார். நீண்ட நாட்களாகியும் அதனை அவர் திருப்பித் தரவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று மது அருந்தும் போதும் கடனை கேட்டேன். இதுதொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான், மாரி முத்துவை கீழே தள்ளிவிட்டேன். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து போலீசார் சாலமோனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் சமீர் (வயது 34), மீன்பிடி தொழிலாளி.இவரது மனைவி ஜெனிபா ஆல்பர்ட் (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெனிபாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிக் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.கணவன் சமீர் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் சமயத்தில் ஜெனிபாவும் ஆசிக்கும் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். கள்ளக்காதல் விவகாரம் சமீருக்கு தெரிய வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெனிபா மங்குழி பகுதியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். ஜெனிபாவுடன் ஒரு குழந்தையும் சமீருடன் ஒரு குழந்தையும் வசித்து வந்தனர்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து சமீர் மனைவி ஜெனிபாவை பார்க்க அவருக்கு தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஆசிக் ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சமீர் அவரை அந்த பகுதியில் கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் ஆசிக் மயங்கி விழுந்தார். இதையடுத்து சமீரும் அவரது மனைவி ஜெனிபாவும் மயங்கி விழுந்த ஆசிக்கை மோட்டார் சைக்கிள் மூலமாக தூக்கி சென்று கேரள எல்லை பகுதியான அம்பிளி கோணம் பகுதியில் வீசி சென்றனர்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிக்கை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெழியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    கைதான ஜெனிபா, சமீர்

    கைதான ஜெனிபா, சமீர்

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சமீர், ஜெனிபா இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிக்கை அடித்து கொலை செய்து விட்டு நாடகம் ஆடியதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து சமீர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி யிருப்பதாவது:-

    எனக்கும் ஜெனிபாவிற்கும் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் பொருட்கள் வாங்க வெளியே செல்லும் போது ஆசிக்குடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து எனக்கு தெரிய வந்தது. இதனால் எனது மனைவியை நான் கண்டித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.தொடர்ந்து ஆசிக்கை சந்தித்து வந்தார். இந்த நிலையில் எனது மனைவி ஜெனிபா என்னுடன் கோபித்துக் கொண்டு மாங்கொளியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    ஒரு குழந்தை என்னுடனும் மற்றொரு குழந்தை எனது மனைவியுடனும் இருந்தது. மனைவி ஜெனிபா உடன் இருந்த எனது குழந்தையை பார்க்க செல்ல நான் முடிவு செய்தேன். இதையடுத்து எனது மாமியார் வீட்டிற்கு சென்றேன். அப்போது ஆசிக் எனது மாமியார் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து இருந்தார். மனைவியிடம் கேட்டபோது அவர் சில நாட்களாக இங்கே தங்கி இருந்தது தெரிய வந்தது. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆசிக்கை சரமாரியாக தாக்கினேன். அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து எனது மனைவியும் அதிர்ச்சி அடைந்தார். இருவரும் மாட்டிக் கொள்வோம் எனவே அவரை சாலையில் வீசிவிட்டு விபத்து நடந்ததாக நாடகம் ஆடி விளையாடலாம் என்று எண்ணினோம். ஆசிக்கை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று சாலை ஓரத்தில் வீச முடிவு செய்தோம். இதையடுத்து நான் மோட்டார் சைக்கிளை ஓட்டினேன்.

    எனது பின்னால் ஆசிக்கை அமரவைத்து எனது மனைவி அவரை பிடித்துக் கொண்டார். ஆள் நடமாட்டம் இல்லாத அம்புளிக்கோணம் பகுதியில் வீசிவிட்டு வந்து விட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் எங்களது வீட்டிற்கு வந்திருந்தார்.
    • அக்காள் கணவரை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் விஜூ (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த சவுமியா என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஆட்ஷிக் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. விஜூ தினமும் குடித்துவிட்டு வந்து சவுமியாவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவுமியா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    அங்கு அவரது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனை அறிந்த விஜூ, குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக மனைவி சவுமியா வீட்டுக்கு சென்றார். அப்போது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றபோது சவுமியாவும் வருவதாக கூறினார்.

    அப்போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விஜூ குழந்தையை தனது சகோதரர் சிஜினுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது சவுமியா மீண்டும் கணவனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த சவுமியாவின் 15 வயது சகோதரர் திடீரென வெட்டுக் கத்தியால் விஜூவை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த விஜூவை மீட்டு சிஜின் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு விஜூ நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிஜின் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் சவுமியாவின் 15 வயது சகோதரர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது சகோதரி சவுமியாவை விஜூ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இது குறித்து எனது சகோதரி எனது குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் எங்களது வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று எங்கள் வீட்டில் வைத்து தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து வெட்டுக்கத்தியை எடுத்து விஜூவை வெட்டினேன் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்காள் கணவரை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோடாவிளை கடற்கரை பகுதியில் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திசையன்விளை:

    தூத்துக்குடி திரேஸ்புரம் தோமையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கில்டஸ் மகன் ஜஸ்டின் (வயது 22).

    இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கேட்டரிங் முடித்துள்ள இவர், கப்பல் பணிக்காக நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2 நாட்கள் பயிற்சிக்காக கடந்த 2-ந்தேதி வந்தார்.

    இந்நிலையில் அவர், நேற்று உவரி அருகே உள்ள கோடாவிளை கடற்கரை பகுதியில் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், ஜஸ்டினை அவரது நண்பரான தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியை சேர்ந்த கணேஷ்(22) என்பவரும், மற்றொரு வாலிபரும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கணேசை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    கைதான கணேஷ்

    கைதான கணேஷ்

    நானும், ஜஸ்டினும் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். சமீபத்தில் அவர் கப்பலுக்கு வேலைக்கு செல்ல ஆசைப்படுவதாக தெரிவித்தார். இதற்காக திசையன்விளையில் உள்ள மரைன் கல்லூரியில் பயிற்சிக்கு சேர்ந்தால் சான்றிதழ் கிடைக்கும். அதற்கு ரூ.3,600 செலவாகும் என்று நான் கூறியதை கேட்டு ஜஸ்டின் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து பணத்துடன் வந்த ஜஸ்டினை திசையன் விளையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தேன்.

    அங்கு நாங்கள் 2 பேரும் மது குடித்தோம். அப்போது ஜஸ்டின் என்னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனது நண்பரான மற்றொரு தூத்துக்குடி வாலிபரை போன் செய்து வர வழைத்தேன்.

    பின்னர் நாங்கள் 3 பேரும் கோடாவிளை கடற்கரைக்கு சென்று அங்கு வைத்தும் மது அருந்தினோம். அப்போதும், ஜஸ்டின் எங்களை அவதூறாக பேசினார். இதனால் என்னுடன் வந்த வாலிபர் ஜஸ்டினின் கழுத்தை கத்தியால் அறுத்து, மார்பிலும் குத்தினார். பின்னர் நாங்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கணேஷ் கூறியதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தப்பி யோடிய மற்றொரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சன்ஹகி பால் (வயது 32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கணருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்தார்.

    இந்த நிலையில் அவருக்கு சமூகவலைதளம் மூலம் சந்தக் தாஸ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பல மணி நேரம் பேசி காதலை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தாலி கட்டாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தனர்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் கொல்கத்தா டம் டம் மதுகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.

    சம்பவத்தன்று சந்தக்தாஸ் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க சென்றார். பின்னர் அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் சன்ஹகி பாலுக்கும் இடையில் கடும் சண்டை மூண்டது. இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சன்ஹகி பால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சந்தக் தாசை குத்தினார். ஆத்திரம் தீரும் வரை 10 தடவை அவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த சந்தக் தாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து அவர் நேராக போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தபோது அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போடுவதாக தெரிவித்தனர்.

    கொலை நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு சந்தக் தாஸ் தனது காதலி சன்ஹகி பால் மற்றும் அவரது குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் குடும்பம் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் 3 பேரும் சிரித்த முகத்துடன் இருந்தனர்.

    சன்ஹகிபால் மாடர்ன் உடை அணிந்து இருந்தார்.

    காதலனை கொன்று ஜெயிலுக்கு சென்றதால் அவரது மகனை போலீசார் தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.

    • சந்திரசேகரின் தந்தை கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.
    • வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நடுவனேரி புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காகாபாளையம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நடுவனேரி புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சந்திரசேகர் (வயது 29). தறிதொழிலாளி.

    இவருக்கும், பிரியா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது பிரியா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்த நிலையில் சந்திரசேகரின் தந்தை கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இந்த அதிர்ச்சியை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் அவர் மது குடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து மது குடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையானார். மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்தார்.

    கடந்த 25-ந்தேதி சந்திரசேகர் மது குடித்துவிட்டு வந்து போதையில் கத்தியை காட்டி அம்மாவிடம் தகராறு செய்தார். இதனால் அவரை மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து சோதனை செய்தபோது அவரது சட்டை பையில் இருந்து கத்தி மற்றும் போதை மாத்திரை ஆகியவை இருந்தது. இவற்றை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் எச்சரிக்கை செய்து, அறிவுரைகள் சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனாலும் அவர் குடி பழக்கத்தை கைவிடவில்லை. மறுநாள் (26-ந்தேதி ) மீண்டும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்தார். இதனால் அவரை குடிபழக்கத்தில் இருந்து மீட்பதற்காக இடங்கணசாலை-சின்னப்பம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மீட்பு மையத்தில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் சந்திரசேகர் அரியானூர் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சில் பலத்த காயங்களுடன் இருப்பதாக இன்று காலை உறவினர்களுக்கு போதைமீட்பு மையத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்க்கையில் ஆம்புலன்சில் கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்களுடன் சந்திரசேகர் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சந்திரசேகரின் கை, கால்கள் ஆகியவற்றை முதுகு பக்கமாக சேர்த்து வைத்து கட்டி வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த காட்சி பதிவாகி இருந்தது. இதனால் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இதனிடையே அங்கு உறவினர்கள் குவிந்தனர். இதனால் பதட்டம் நிலவியது. பாதுகாப்புக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து போலீசார் சி.சி.டி.வி. காட்சியை கைப்பற்றி போதை மறுவாழ்வு மைய ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு இங்கு என்ன நடந்தது?, அவரை கொலை செய்தவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நடுவனேரி புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.
    • சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார்.

    தேனி:

    மதுரை சம்மட்டிபுரம் ராஜ்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சுப்பிரமணி(30). தந்தை இறந்துவிட்ட நிலையில் தனது தாய் நாகஜோதியுடன் வசித்து வந்தார். சுப்பிரமணி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மகளிர் சுயஉதவிக்குழுவில் பணிபுரிந்து வந்தார்.

    கன்னிசேர்வை பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுவந்தார். மகளிர்சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கப்படும் கடனுதவியை வசூல் செய்து நிறுவனத்தில் கட்டி வந்தார். அப்போது தேனி அல்லிநகரம் குறிஞ்சிநகரை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சத்யா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். மேலும் கடந்த 5.5.2023-ம் தேதி சுப்பிரமணியை குறிஞ்சிநகரில் வைத்து கடுமையாக தாக்கி அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.

    இதனால் அவமானம் தாங்காமல் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்தார். சில நாட்கள் கழித்து தான் இனிமேல் சத்யாவுடன் பழக மாட்டேன் என்றும், தனது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து அன்னஞ்சி பைபாஸ் பகுதியில் கடுமையாக தாக்கி சென்றுவிட்டனர்.

    பலத்த காயமடைந்த சுப்பிரமணி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு வீட்டிற்கு சென்றபோது மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் சின்னமனூர் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தேனி அல்லிநகரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சுப்பிரமணியின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததும், அவர் அடித்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.

    இதனையடுத்து 6 மாதத்திற்கு பின்பு கள்ளக்காதலி சத்யா மற்றும் அவரது கணவர் ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • முன்விரோத தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 22). இவர் சென்னையில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்.

    இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இது தொடர்பான முன்விரோத தகராறில் முரளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

    அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலையாளி களை பிடிக்க வாணி யம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் முரளி கொலை செய்த வழக்கில், பெண்ணின் அண்ணன் சந்தோஷ் (25) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா (24), அஜித் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். வாலிபர் கொலை செய்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் முரளி கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காடீஸ் என்கிற காட்வின் மோசஸ்(32), முரளி காதலித்த பெண்ணின் தம்பி ஏழுமலை (24) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டரிடம் பெற்றோர் மனு
    • போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவே ரிப்பாக்கம் அருகே இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்து, கோரிக்கையை மனுவாக அளிக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து கொலை செய்யப்பட்ட அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனின் தாய் செல்வி (வயது 52) என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார்.

    அந்த மனுவில், எனது மகன் இளவரசன் (28), லாரி டிரைவர். இவரை கடந்த 7-ந் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். தொடர்ந்து, கடந்த 15- ம் தேதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் எனது மகனை ஆற்காடு தாலுகா பெருங்கல் மேடு பாலாற்று பகுதியில் கொலை செய்து புதைத்ததாக லோகேஷ் (28), வாசுதேவன் (27), அருண்குமார் (33), பூவரசன் (24) ஆகிய 4 பேரை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய வேண்டும். என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் முரளி (வயது 22), கூலி தொழிலாளி.

    இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், முரளியை எச்சரிக்கை செய்தனர்.

    இருப்பினும் முரளி அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேச வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் அண்ணன் சந்தோஷ், முரளியை பலமுறை கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முரளி இன்று காலை தும்பேரிக்கு வந்தார்.

    இதனைப் பார்த்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த முரளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை கைது செய்தனர்.
    • போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 40). இவர் பைனான்ஸ் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவரது சகோதரர் சிவசங்கர் (44). ராதா கிருஷ்ணனிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தவர் திண்டல் மேடு பகுதியை சேர்ந்தவர் சர்தார் (44).

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான வில்லரசம்பட்டியில் உள்ள தோட்டத்தில் சர்தார் மற்றும் அவரது மகன் சபீர் மற்றும் நண்பர்கள் சிலர் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிவசங்கர், சர்தாரிடம் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    சிவசங்கருடன் இருந்த ஈரோடு காரப்பாறையை சேர்ந்த ராஜேஷ் மகன் சந்தோஷ் பாண்டி (35) என்பவர் சர்தார் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி விட்டுள்ளார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த சர்தார் மகன் சபீர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது அங்கு வந்த ராதாகிருஷ்ணனை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி உள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகராறு முடிந்த பிறகு சந்தோஷ்பாண்டி தனது மோட்டார் சைக்கிளில் பழையபாளையம் அருகே சென்ற போது சர்தார், அவரது மகன் சபீர் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் வழிமறித்து, சந்தோஷ் பாண்டியை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சந்தோஷ் பாண்டி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்தோஷ் பாண்டி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

    மேலும் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருக்கும் சபீர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உயிரிழந்த சந்தோஷ்பாண்டியின் பிரேத பரிசோதனை இன்று பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×