search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை கைது"

    • கடந்த 30-ந்தேதி மாரிச்செல்வம், கார்த்திகாவை கோவில்பட்டிக்கு அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார்.
    • மேலும் கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரும், தூத்துக்குடி திரு.வி.க. நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவும் (20) காதலித்தனர். இவர்களின் காதலுக்கு கார்த்திகாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 30-ந்தேதி மாரிச்செல்வம், கார்த்திகாவை கோவில்பட்டிக்கு அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம், தனது உறவினர்கள் மூலம் தம்பதியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    2 நாட்கள் அங்கேயே இருந்த காதல் தம்பதி நேற்று முன்தினம் மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு சென்றனர்.

    இதையறிந்து முத்துராமலிங்கம் தூண்டுதலின்பேரில், அவருடைய உறவினர்களான தூத்துக்குடி கே.வி.கே.நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (23), தூத்துக்குடி சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி (27) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல், மாரிச்செல்வத்தின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

    இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துராமலிங்கம், இசக்கிராஜா, ராஜபாண்டி மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கைதான முத்துராமலிங்கம் கூறியதாவது:-

    என்னுடைய மகள் கார்த்திகாவும், மாரிச்செல்வமும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் மாரிச்செல்வத்தின் குடும்பத்தினர் எனது வீட்டுக்கு பெண் கேட்டு வந்தனர்.

    அப்போது 6 மாதம் கழிக்கட்டும், பிறகு பார்த்து கொள்வோம் என்று கூறினேன். ஆனால் அதற்குள் மாரிச்செல்வம் எனது மகள் கார்த்திகாவை அழைத்து சென்று பதிவு திருமணம் செய்தார். இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. எனது அனுமதி இல்லாமலும், எனது பேச்சை மீறியும் திருமணம் செய்ததால், எனது உறவினர்கள் மூலம் அவர்களை கொலை செய்ய நினைத்தேன். அதன்படி மாரிச்செல்வத்தின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த 2 பேரையும் வெட்டி கொலை செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தி பின்னரே கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவன் தவிர மற்றவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டான்.

    • மாரிச்செல்வத்தின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம்(வயது 24).

    இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அதற்கு கார்த்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 30-ந்தேதி அவர்கள் 2 பேரும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் காதல் தம்பதி 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். தகவல் அறிந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேர் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஊரக துணை சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோரும் அங்கு வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    மாரிச்செல்வத்தின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவரது தந்தை முத்துராமலிங்கம் பெண் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மாரிச்செல்வம் கடந்த 30-ந்தேதி கார்த்திகாவை கோவில்பட்டி அழைத்து சென்று திருமணம் செய்தார். புதுமண தம்பதி கோவில்பட்டியில் 3 நாட்கள் தங்கியிருந்த நிலையில் நேற்று காலை முத்துராமலிங்கம் வசிக்கும் அதே திரு.வி.க. நகரில் உள்ள மாரிச்செல்வம் உறவினர் வீட்டுக்கு 2 பேரும் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றதை பார்த்து முத்துராமலிங்கம் ஆத்திரம் அடைந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது உறவினர்களின் மகன்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தூண்டுதலின்பேரில் 6 வாலிபர்கள் சேர்ந்து நேற்று இரவு முருகேசன் நகரில் உள்ள வசந்தகுமார் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மாரிச்செல்வமும், கார்த்திகாவும் தனியாக இருந்துள்ளனர். உடனே அவர்களை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது என்றனர்.

    இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்ட கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் மற்றும் கொலையில் தொடர்புடைய 2 வாலிபர்களை தனிப்படையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி முருகேசன் நகர், திரு.வி.க. நகர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவத்தன்று ஜெகதீசன் தனது மகன் ஜெயசீலனிடம் தகராறு தொடர்பாக கூறினார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.சம்பவத்தன்று ஜெகதீசன் தனது மகன் ஜெயசீலனிடம் தகராறு தொடர்பாக கூறினார். தொடர்ந்து தந்தை, மகன் என 2 பேரும் மூர்த்தியிடம் சென்று கேட்டனர்.அப்போது இவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மூர்த்தி, ஜெகதீசன் ஆகியோர் காயமடைந்தனர்.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஜெகதீசன், ஜெயசீலன் ஆகியோர் மீதும், ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் மூர்த்தி மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயசீலன் போலீசாக பணிபுரிந்து வருவதும், தற்போது அவர் விடுமுறையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    • கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார்.
    • போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு கவனா(20) உள்பட 2 மகள்கள் உள்ளனர்.

    கவனா தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தார். மஞ்சுநாத்தின் 2-வது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். எனினும் தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி 2-வது மகள் தனது காதலனுடன் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் அவரை, போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விவகாரத்தில் தங்கைக்கு கவனா உதவி செய்திருக்கலாம் என்று மஞ்சுநாத் சந்தேகித்தார். மேலும் அவர் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே மூத்த மகள் கவனா தான் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே உனது தங்கை வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து ஓடியுள்ளார். எனவே நீயும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை காதலிப்பதை நிறுத்தி விடு கவனாவிடம் தந்தை மஞ்சுநாத் கூறினார்.

    இருப்பினும் கவனா தனது காதலை கைவிடாமல் இருந்து வந்தார். இது மஞ்சுநாத்திற்கு தெரிந்தது.

    இதுதொடர்பாக அவர் தனது மகளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மகளை கடுமையாக திட்டியதுடன், இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தார்.

    அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கவனா துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதையடுத்து மஞ்சுநாத், விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    உடனே போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் கவனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கவனா, வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் அவரை மஞ்சுநாத் கொலை செய்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகனை வீட்டில் வைத்து பூட்டி விட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்ததாகவும் அப்போது தனது மகன் இறந்து கிடந்ததாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • பிரேத பரிசோதனையில் வாலிபரை அடித்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மேற்கு பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சரத்குமார் (25) என்ற மகனும் சங்கீதா என்ற மகளும் உள்ளனர். சரத்குமார் தனியார் வாகனம் ஓட்டும் டிரைவராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆக வில்லை.

    சரத்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து சரத்குமார் தனது தந்தை மற்றும் சகோதரியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். பின்னர் சரத்குமாரை வீட்டில் வைத்து பூட்டி விட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்ததாகவும் அப்போது தனது மகன் இறந்து கிடந்ததாக வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது சரத்குமாரின் பின் தலையில் பலத்த ரத்தக்காயம் இருந்தது. அப்போது வீட்டுக்குள் அடைத்ததால் மேற்கூரை வழியாக தப்பிக்க முயன்றதாகவும், அப்போது தலையில் அடி பட்டு இறந்து விட்டார் என்றும் ஆறுமுகம் தெரிவித்தார். இருந்தபோதும் அவரது பேச்சில் போலீசாருக்கு சந்தேகம் இருந்து வந்தது.

    இதனையடுத்து சரத்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சரத்குமார் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. பின்னர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, வேறு வழியில்லாமல் தான் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குடிபோதையில் தகராறு செய்ததால் மகனையே தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவிக்கு கருக்கலைப்பு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 37). லாரி ஓட்டுநர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் மிரட்டி பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார்.

    மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்டு அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என கருதிய அவர், மகளுக்கு ராயம்புரம் கிராமத்தில் உள்ள ஒரு மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார்.

    அதனை மாணவி வாங்கி சாப்பிட்டார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் அவருக்கு ஆண் சிசு இறந்து பிறந்தது. பின்னர் அந்த சிசுவை ஒரு சாக்கு பையில் சுற்றி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மாணவிக்கு உதிரப்போக்கு நிற்காததால் வேறு வழி இல்லாமல் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவிக்கு கருக்கலைப்பு நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக பணியாளர் செல்வி அகஸ்தியர் செந்துறை கிராம நிர்வாக அலுவலர் வாழவந்தானுக்கு தகவல் கொடுத்தார்.

    அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் செந்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீட்டின் பின்புறம் புதைத்த 7 மாத சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான அவரது கொடூர தந்தை, கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்த தாயார், டாக்டர்களின் ஆலோசனை பெறாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெற்ற மகளை லாரி டிரைவர் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கி கருக்கலைப்பு செய்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒன்றும் அறியாத குழந்தை தன் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்ததை கண்ட தாய் கதறி அழுதார்.
    • போலீசார் ரமேஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஊத்தூலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நிர்மலா தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் நிர்மலா தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு வந்த ரமேஷ் வெளியே சென்று மது குடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார்.

    அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எட்டி உதைத்தார்.

    இதனால் குழந்தை தொட்டிலில் இருந்து வெளியே வந்து சுவற்றில் மோதி மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் குழந்தை துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.

    ஒன்றும் அறியாத குழந்தை தன் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்ததை கண்ட தாய் கதறி அழுதார்.

    இதனை கண்டு சிறிதும் வேதனை அடையாத ரமேஷ் தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். நிர்மலா கதறி அழும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரமேசை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் ரமேஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெற்ற குழந்தையை கல் மீது வீசி தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.

    திருவள்ளூர்:

    ஆந்திரா மாநிலம் ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(25), இவரது மனைவி அஞ்சலி(23). இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்பட மொத்தம் 4 குழந்தைகள் இருந்தனர்.

    சுரேஷ் தனது குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி திருவள்ளூர் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் பெரியகுப்பத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கீழ் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சுரேசின் 2 மாத பெண் குழந்தை தொடர்ந்து அழுதது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் குழந்தைக்கு பால் கொடுக்ககோரி மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்தது. இதனால் கோபம் அடைந்த சுரேஷ் தனது 2 மாத குழந்தையை அருகில் சமையல் செய்ய வைத்திருந்த கல் மீது வீசினார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை மயங்கி சரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அஞ்சலி அலறி துடித்தபடி குழந்தையை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    கைதான சுரேசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று இரவும் அவர் அதிக போதையில் இருந்து உள்ளார். குழந்தை தொடர்ந்து அழுததாலும், குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்து மனைவி தகராறில் ஈடுபட்டதாலும் ஆத்திரம் அடைந்த அவர் குழந்தையை கல்மீது வீசி கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    பெற்ற குழந்தையை தரையில் வீசி தந்தையே கொடூரமாக கொன்ற சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கணவரை இழந்த பெண் குழிக்குள் வீசி கொலை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சந்தேகம் அடைந்த தாய் தனது குழந்தையை அரவணைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.
    • சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் தந்தையான மருத்துவ பிரதிநிதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த 29 வயது மருத்துவ பிரதிநிதிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் 2 வயது சிறுமி நீண்டநேரமாக அழுதுகொண்டே இருந்து உள்ளது. இதை பார்த்த தாய் அந்த குழந்தையிடம் பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா? என்று கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அந்த குழந்தை இல்லை என்று தலையை ஆட்டியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தாய் தனது குழந்தையை அரவணைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். இதையடுத்து அந்த தாய், குழந்தையை பரிசோதனை செய்த போது காயம் இருந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்த குழந்தை வலிதாங்க முடியாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமி மற்றும் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது தந்தையே தனது 2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் தந்தையான மருத்துவ பிரதிநிதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை நேற்று மாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். கோவையில் 2 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
    • வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தாள்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர், அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் தந்தை இறந்து விட்டார். இதனால் 29 வயது கம்பி கட்டும் தொழிலாளி சிறுமியின் தாயாரை திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து அவர், சிறுமி மற்றும் அவரது தாயார் ஆகியோருடன் வசித்து வந்தார். மேலும் சிறுமியை அவர் வளர்ப்பு தந்தைபோல் கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

    இதையடுத்து அவரது தாயார் சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரணை நடத்தினார். அப்போது வளர்ப்பு தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில், போலீசார் போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சந்திரசேகர் மணிகட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
    • ஒரு மகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மற்றொரு மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சிவானந்தனா (வயது 12), தேவனந்தனா (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

    கடந்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி மகள்கள் 2 பேரையும் குருவாயூர் பாடிச்சேரே நாடாவிற்கு அழைத்துச்சென்றார். அங்குள்ள லாட்ஜில் மகள்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர்கள் தங்கி இருந்த அறை திறக்கப்படாமல் இருந்ததால் சோதனை செய்யப்பட்டது. அப்போது சந்திரசேகர் மணிகட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரது மகள்கள் அதே அறையில் இறந்து கிடந்தனர்.

    ஒரு மகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மற்றொரு மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார். காயத்துடன் கிடந்த சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகள்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சிகிச்சையில் இருந்த சந்திரசேகரிடம் விசாரித்தபோது 2 மகள்களில் ஒருவருக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்தும், மற்றொரு மகளை தூக்கில் தொங்க விட்டும் கொன்றது தெரியவந்தது. மேலும் தனது கையை பிளேடால் அறுத்தும் தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். எதற்காக மகள்களை கொன்றார்? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
    • வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் கேமிராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கும், அவரது 40 வயது மகனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் தந்தை தனக்கு சூனியம் செய்வதாக அவரது மகன் சந்தேகப்பட்டுள்ளார். இதனை கண்டுபிடிப்பதற்காக அவர் வீட்டிலேயே தந்தைக்கு தெரியாமல் அவரை கண்காணிப்பதற்காக வீட்டில் மொபைல் கேமிரா பொருத்தி உள்ளார்.

    இந்நிலையில் அந்த கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்த மகனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த முதியவர் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வது மொபைல் கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதை பார்த்த மகன் அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீடியோவில் இருக்கும் பெண் குறித்து அவர் விசாரித்த போது தான் அது பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமி என்பதும், அந்த சிறுமியை முதியவர் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டுக்கு வரவழைத்து ஒரு அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    இதையறிந்த முதியவரின் மகன் வீடியோ காட்சிகளை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து சிறுமியின் தந்தை அதிர்ச்சியடைந்தார்.

    இந்நிலையில் சம்பவம் தொடர்பாக போலீசில் எதுவும் புகார் அளிக்க வேண்டாம் எனவும் அவர் சிறுமியை மிரட்டி உள்ளார். எனினும் சிறுமியின் தந்தை இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்னர் வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த முதியவரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் தந்தையை மிரட்டியதாக அவரின் மகனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கைதான முதியவர் சிறுமியின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் நைசாக பேசி அவரை பலாத்காரம் செய்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கைதான முதியவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல சம்பவத்தை வீடியோ பதிவு செய்து பகிர்ந்ததற்காகவும், அதனை மறைத்து வைத்து மிரட்டியதற்காகவும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வீடியோ பதிவு செய்ய பயன்படுத்திய மொபைல் கேமிராவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ×