என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நொய்யல் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர் கொலையா? - போலீசார் விசாரணை
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை-பரமத்தி செல்லும் பிரிவு சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள காட்டு பகுதியில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நடந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனே பொது மக்கள் இது குறித்து வேட்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பூபதிக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூக்கில் பிணமாகதொங்கியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் தூக்கில் தொங்கிய இடத்தின் அருகே விஷபாட்டில் கிடந்தது. அவர் விஷம் குடித்து விட்டு தூக்கில் தொங்கினாரா அல்லது வேறு யாரும் அவருக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டார்களா? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்