என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும்- மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்23 July 2019 7:55 AM GMT (Updated: 23 July 2019 7:55 AM GMT)
பல மடங்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும் என்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூருக்கு சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான குழந்தைகள் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அங்கு மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
ரூ.82 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட தாமரை குளத்தை திறந்து வைத்தார். உடற்பயிற்சி கூடங்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி அங்கு பயிற்சியிலும் ஈடுபட்டார். தையல் எந்திரம், மீன்பாடி வண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தொகுதி மக்களுக்கு வழங்கினார். மரக்கன்றுகளையும் நட்டார்.
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: வேலூர் தொகுதி பிரசாரத்துக்கு எப்போது செல்கிறீர்கள்?
கேள்வி: வேலூர் தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: ஏற்கனவே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்ததோ எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்ததோ அதைவிட பல மடங்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூருக்கு சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான குழந்தைகள் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அங்கு மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
ரூ.82 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட தாமரை குளத்தை திறந்து வைத்தார். உடற்பயிற்சி கூடங்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி அங்கு பயிற்சியிலும் ஈடுபட்டார். தையல் எந்திரம், மீன்பாடி வண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தொகுதி மக்களுக்கு வழங்கினார். மரக்கன்றுகளையும் நட்டார்.
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: வேலூர் தொகுதி பிரசாரத்துக்கு எப்போது செல்கிறீர்கள்?
பதில்: நீங்கள் அங்கு வாருங்கள். நான் என்ன பேசுகிறேன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
கேள்வி: வேலூர் தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: ஏற்கனவே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்ததோ எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்ததோ அதைவிட பல மடங்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X