search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அலை ஓய தொடங்கி விட்டது- திருநாவுக்கரசர்
    X

    மோடி அலை ஓய தொடங்கி விட்டது- திருநாவுக்கரசர்

    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடி அலை ஓய தொடங்கிவிட்டது என்றும் ராகுல் அலை வீச தொடங்கி இருப்பதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #5StateElection
    சென்னை:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறாததும், காங்கிரஸ் அடைந்துள்ள எழுச்சியும் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது.

    பெரும்பாலான எதிர் கட்சிகள் ஒன்றுகூடி மோடியை வீழ்த்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வெற்றி காங்கிரசுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது.

    மோடிக்கு மாற்று ராகுல் தான். பா.ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ் தான் என்பதும் உறுதியாகி இருக்கிறது. மோடி அரசும், மாநில பா.ஜனதா அரசுகளும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதன் விளைவாக ஏற்பட்ட கோபம், ஏமாற்றம், வருத்தம் தான் பா.ஜனதாவை வீழ்த்தி இருக்கிறது.

    வட மாநிலங்களில் மத்திய பிரதேசம்தான் இந்துத்துவாவுக்கு வலிமையான இடம். ஆர்.எஸ்.எஸ்.சின் கருவறை அந்த மாநிலம் தான். அங்கேயே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சாதாரணமானதல்ல. மோடிக்கு மக்கள் சரியான அடி கொடுத்து இருக்கிறார்கள். மோடி அலை ஓய தொடங்கிவிட்டது. ராகுல் அலை வீச தொடங்கி இருக்கிறது.


    ராகுல்காந்தியின் கடினமான உழைப்புக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து இருக்கிறார்கள். இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினார். முன்னாள் எம்.பி. விசுவநாதன், சிரஞ்சீவி, இதயத்துல்லா, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #5StateElection
    Next Story
    ×