search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடிக்கு சென்ற ஸ்டாலின், கமல், வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு
    X

    தூத்துக்குடிக்கு சென்ற ஸ்டாலின், கமல், வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட ஸ்டாலின், கமல், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13-பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.



    இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அங்கு சென்றதால் அவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×