என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிடவும், உத்தரவிடவும் கவர்னருக்கு உரிமை இல்லை: நாராயணசாமி
Byமாலை மலர்20 Nov 2017 5:28 AM GMT (Updated: 20 Nov 2017 5:28 AM GMT)
தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு உரிமை இல்லை என்று ஸ்ரீரங்கத்தில் புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.
திருச்சி:
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அதன் உபகோவிலான காட்டழகிய சிங்க பெருமாள் கோவிலுக்கு சென்று, லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுடெல்லியை போன்றது அல்ல. புதுடெல்லி தலைநகராக இருப்பதால் நிதி, நிலம், நிர்வாகம் ஆகியவற்றில் தலையிட துணை நிலை கவர்னருக்கு உரிமை உண்டு. புதுச்சேரியை பொறுத்த வரை சட்டமன்றத்துக்கு உரிமை உண்டு.
தமிழ்நாட்டில் நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு உரிமை இல்லை. எனவே ஆய்வு செய்வதற்கோ? உத்தரவு போடுவதற்கோ? தமிழ்நாட்டில் கவர்னருக்கு உரிமை இல்லை.
கவர்னர் முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்திக்கலாம். ஆனால் நிர்வாக ரீதியாக சந்திக்க அதிகாரம் இல்லை. கோப்புகள் அமைச்சரவை மூலமாக அனுப்பப்படும்போது, அதை கவர்னர் முதல்முறை நிராகரிக்கும் பட்சத்தில், இரண்டாம் முறையாக அமைச்சரவை மீண்டும் பரிந்துரைத்து அனுப்பினால் அதில் கவர்னர் கையெழுத்திட வேண்டியது அவசியம்.
புதுச்சேரியில் கடந்த 1½ ஆண்டு காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறது. எனவே புதுச்சேரியில் கவர்னர் பார்வையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை கருத்தில் கொண்டு, கிரண்பேடி செயல்பட வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்களின் விருப்பமும், புதுச்சேரி முதல்- மந்திரியான எனது விருப்பமும் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்பது தான். வருகிற 2019-ம் ஆண்டில் ராகுல் காந்தி பிரதமராவதற்கு வேண்டியவற்றை செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அதன் உபகோவிலான காட்டழகிய சிங்க பெருமாள் கோவிலுக்கு சென்று, லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுடெல்லியை போன்றது அல்ல. புதுடெல்லி தலைநகராக இருப்பதால் நிதி, நிலம், நிர்வாகம் ஆகியவற்றில் தலையிட துணை நிலை கவர்னருக்கு உரிமை உண்டு. புதுச்சேரியை பொறுத்த வரை சட்டமன்றத்துக்கு உரிமை உண்டு.
தமிழ்நாட்டில் நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு உரிமை இல்லை. எனவே ஆய்வு செய்வதற்கோ? உத்தரவு போடுவதற்கோ? தமிழ்நாட்டில் கவர்னருக்கு உரிமை இல்லை.
கவர்னர் முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்திக்கலாம். ஆனால் நிர்வாக ரீதியாக சந்திக்க அதிகாரம் இல்லை. கோப்புகள் அமைச்சரவை மூலமாக அனுப்பப்படும்போது, அதை கவர்னர் முதல்முறை நிராகரிக்கும் பட்சத்தில், இரண்டாம் முறையாக அமைச்சரவை மீண்டும் பரிந்துரைத்து அனுப்பினால் அதில் கவர்னர் கையெழுத்திட வேண்டியது அவசியம்.
புதுச்சேரியில் கடந்த 1½ ஆண்டு காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறது. எனவே புதுச்சேரியில் கவர்னர் பார்வையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை கருத்தில் கொண்டு, கிரண்பேடி செயல்பட வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்களின் விருப்பமும், புதுச்சேரி முதல்- மந்திரியான எனது விருப்பமும் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்பது தான். வருகிற 2019-ம் ஆண்டில் ராகுல் காந்தி பிரதமராவதற்கு வேண்டியவற்றை செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X