என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.
    • உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.

    இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களுக்கு அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து அரங்கேறிய இடத்தில் மீட்பு பணிகள் மற்றும் ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

    விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

    ரெயில் விபத்துக்குள்ளான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் நிறைவுபெற்றன. சேதமடைந்த ரெயில் பாதை சீரமைக்கப்பட்டு, அங்கு ரெயில் சோதனை முறையில் இயக்கப்பட்டது. விரைவில் இந்த வழித்தடத்தில் பழைய படி ரெயில்கள் செல்லும்.


    • உ.பி.யில் பயணிகள் ரெயில் இன்று திடீரென தடம் புரண்டது.
    • இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரெயில் இன்று திடீரென தடம் புரண்டது.
    • இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 ஏசி பெட்டிகள் உள்பட பல பெட்டிகள் கவிழ்ந்துள்ளது என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் தகவல் வெளியானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • பதவிக்காக உ.பி. பாஜகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
    • யோகி ஆதித்யநாத்- துணை முதல்வர் மவுரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக கேஷவ் பிரசாத் மவுரியா இருந்து வருகிறார். இவர் "அரசை விட கட்சி பெரியது" எனத் தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும், கேஷவ் பிரசாத் மவுரியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பதவிக்காக உள்கட்சி சண்டை நடைபெற்று வருவதாகவும் அகிலேஷ் யாதவ் நேற்று தெரிவித்திருந்தார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேஷவ் பிரசாத் யாதவ் "சமாஜ்வாடி கட்சியால் கம்பேக் கொடுக்க (மீண்டும் ஆட்சிக்கு வர) முடியாது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசு மற்றும் அமைப்பை பாஜக வலுவாக கொண்டுள்ளது" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் மழைக்கால சலுகை: 100 கொண்டு வாருங்கள். ஆட்சி அமைக்கவும் (Monsoon offer: Bring hundred, form government) எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான விளக்கம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் "2022 உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றது. அதிருப்தியில் உள்ள 100 பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நாங்கள் பெற்றால் அதன்பின் நாங்கள் எளிதாக ஆட்சி அமைக்க முடியும்" என விளக்கம் அளித்துள்ளார்.

    யோகி ஆதித்யநாத்தின் தலையீட்டை விரும்பாத பெரும்பாலான பாஜக எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை இழுக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் இதை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் கட்சி மேலிடம் பல மாற்றங்களை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கிடையேதான் உள்கட்சி சண்டை தலைதூக்கியுள்ளதாக கருதப்படுகிறது.

    • உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும்.
    • சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என்ற முசாபர்நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    காவல்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடை உரிமையாளரின் பெயர் என்னவாக இருந்தால் என்ன? பெயரை வைத்து நீங்கள் கண்டுபிடிக்க போகிறீர்கள்?. மாநிலத்தின் அமைதியான சூழலையும் நல்லிணக்கத்தையும் கெடுப்பதற்கான இத்தகைய உத்தரவு ஒரு சமூக குற்றம்" என்று தெரிவித்துள்ளார்.

    அதே போல், "பாஜக அரசின் இந்த உத்தரவு முட்டாள்தனமானது. சட்டத்திற்குப் புறம்பான இந்த உத்தரவு இஸ்லாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டும் நடவடிக்கையாகும்" என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன.
    • 9 வது முறை பாம்பு தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சௌரா கிராமத்தைச் சேர்நதவர் வ்யாவிகாஸ் தூபே. கடந்த 40 நாட்களில் மட்டும் 7 முறை தன்னை விஷப்பாம்புகள் கடித்துள்ளதாக அவர் தெரிவித்தது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த ஜூன் 2 ஆம் தேதி தூபேவை அவர் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது முதல் தடவை பாம்பு கடித்துள்ளது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார்.

    இதன்பிறகு ஜூன் 2 முதல் ஜூலை 7 வரையிலான காலகட்டத்தில் 6 முறை தன்னை பாம்பு கடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன என்றும் அவை தன்னை கடிக்கப்போகிறது என்று தன்னால் முன்கூட்டியே உணர முடிகிறது, 9 வது முறை தன்னை கடிக்கும்போது தான் இறந்துவிடுவேன் என்றும் கனவில் பாம்பு வந்து கூறியது என்றும் அவர் தெரிவித்தார்.

    சனி ஞாயிற்றில் மட்டுமே அவரை எப்படி பாம்பு கடிக்கிறது என்று இந்த விவாகரத்தில் மருத்துவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

    இதனையடுத்து விகாஸின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக பத்தேபூர் ஆட்சியர் இந்துமதியின் உத்தரவின்பேரில் மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

    அந்த விசாரணையில், விகாஸ் தூபேவை இதுவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    முதல்முறை பாம்பு கடித்ததில் பயம் ஏற்பட்டு (Snake Phobia) தன்னை அடிக்கடி பாம்பு கடித்ததாக எண்ணி விகாஸ் தூபே அச்சப்பட்டுள்ளார்.  ஆகவே அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று IANS செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் பேசியுள்ளார்
    • எப்போது இறக்கிறார்கள் என்ற நேரம் மட்டுமே வேறுபடும்' என்று தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

     

     

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

     

    இடையில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று IANS செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த  பேட்டியில் , 'இந்த சம்பவம் எங்களை மிகவும் பாதித்துள்ளது. ஆனால் நடப்பதை யாரால் தடுக்க முடியும். பூமியில் பிறந்தவர்கள் ஒரு நாள் இறந்துதான் ஆகா வேண்டும்.எப்போது இறக்கிறார்கள் என்ற நேரம் மட்டுமே வேறுபடும்' என்று தெரிவித்துள்ளார்.

     

    மேலும்' இந்த சம்பத்தை வைத்து எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க பார்க்கிறார்கள். கூட்டத்தில் விஷத் தன்மையுள்ள திரவம் தெளிக்கப்பட்டது. அதை நேரில் கண்ட சிலர் எங்களது வக்கீலிடம் அதை உறுதி செய்து வாக்குமூலம் அளித்துள்ளனர்' என்றும் தெரிவித்துள்ளார். 

    • கேங்ஸ்டாராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அத்திக் அகமது சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
    • வேறு பெயரில் 2.377 ஹெக்டேர் நிலம் வாங்கியிருந்தது தெரியவந்ததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கேங்ஸ்டாராக இருந்து அரசியலுக்கு வந்தவர் அத்திக் அகமது. இவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அத்திக் அகமது மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கிரிமினல் செயல்கள் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தில் கோடிக்கணக்கான அளவில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார்.

    இந்த நிலையில் அத்திக் அகமது பெயரில் இருந்து 2.377 ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் 2.47 ஏக்கர்) நிலத்தை உத்தர பிரதேச அரசு கையகப்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள இந்த நிலம் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலானதாகும்.

    இது தொடர்பாக மாவட்ட அரசு வழக்கறிஞர் (கிரிமினல்) குலாப் சந்திரா அக்ராஹரி கூறுகையில் "குற்றச் செயல் மூலமாக கிடைத்த பணத்தை பயன்படுத்தி அத்திக் அகமது 2.377 ஹெக்டேர் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த நிலத்தை ஹூபலால் பெயரில் பதிவு செய்துள்ளார். தேவைப்பட்டால் இந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றலாம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை போலீசார் கடந்த நவம்பர் மாதம் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக உரிமையாளர் என்ற பெயரில் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் நிலம் அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

    • பிரதமரும், உள்துறை மந்திரியும் உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.
    • உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மாநில கவர்னரை சந்தித்துப் பேசினார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வெளியிட்ட கருத்தால் மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அம்மாநில பா.ஜ.க.வில் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திடீரென இன்று கவர்னர் மாளிகைக்குச் சென்றார். அங்கு கவர்னர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்துப் பேசினார். இருவரும் மாநில அரசியல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியானது.

    உத்தர பிரதேச மாநில அரசில் கோஷ்டி சண்டை நடந்து வருகிறது. பா.ஜ.க.வினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது.
    • பாஜக தலைவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறார்கள்.

    உத்தர பிரதேச மாநில அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது. பாஜக-வினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.

    இதற்கு அம்மாநில துணை முதல்வரான கேஷவ் பிரசாத் மவுரியா பதிலடி கொடுத்துள்ளார். "மத்தியிலும், உத்தர பிரதேசத்திலும் அரசாங்கத்தையும், அமைப்பையும் பாஜக வலுவாக கொண்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு (கம்பேக்) வர வாய்ப்பே இல்லை" என கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் "யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது. பாஜக தலைவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறார்கள். அவர்களுடைய ஊழல் பற்றி மக்களுக்கு தெரிந்துள்ளது. அவர்களுடைய பதவி விளையாட்டால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்" என கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்திருந்தார்.

    இதற்கு முன்னதாக பேசும்போது "பாஜக மற்ற கட்சிகளை பிரிக்கும் வேலையை செய்தது. தற்போது தங்களுக்குள்ளேயே அதை செய்து வருகிறது. உட்கட்சி பூசலால் புதை மணலில் மூழ்கி வருகிறது. பாஜக-வை சேர்ந்த ஒருவர் கூட மக்களை பற்றி சிந்திக்கவில்லை" எனக் கூறியிருந்தார்.

    உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரான கேஷவ் பிரசாத் மவுரியா பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசும்போது "அரசைவிட அமைப்பு (பாஜக கட்சி) பெரியது. அமைப்பை விட யாரும் பெரியவர்கள் கிடையாது" எனக் கூறினார். இதை மேற்கொள்காட்டி அகிலேஷ் யாதவ் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

    • அரசைவிட அமைப்பு (பாஜக கட்சி) பெரியது.
    • அமைப்பை விட யாரும் பெரியவர்கள் கிடையாது- உ.பி. துணை முதல்வர் மவுரியா

    உத்தர பிரதேச மாநில பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடக்கிறது. கட்சியினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதால், மக்கள் சிரமப்படுகின்றனர் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரான கேஷவ் பிரசாத் மவுரியா பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசும்போது "அரசைவிட அமைப்பு (பாஜக கட்சி) பெரியது. அமைப்பை விட யாரும் பெரியவர்கள் கிடையாது" எனப் பேசியிருந்தார்.

    பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தப்பின் மவுரியா இவ்வாறு கூறியிருப்பது முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக விமர்சித்திதுள்ளதாக பார்க்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் "யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது. பாஜக தலைவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறார்கள். அவர்களுடைய ஊழல் பற்றி மக்களுக்கு தெரிந்துள்ளது. அவர்களுடைய பதவி விளையாட்டால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்" என கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக பேசும்போது "பாஜக மற்ற கட்சிகளை பிரிக்கும் வேலையை செய்தது. தற்போது தங்களுக்குள்ளேயே அதை செய்து வருகிறது. உட்கட்சி பூசலால் புதை மணலில் மூழ்கி வருகிறது. பாஜக-வை சேர்ந்த ஒருவர் கூட மக்களை பற்றி சிந்திக்கவில்லை" என்றார்.

    சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. 2019-ல் 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 33 இடங்களில்தான் வெற்றி பெற்றது. பாஜக-வின் அதீத நம்பிக்கைதான் இந்த தோல்விக்கு காரணம் என தலைவர்கள் மத்தியில் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

    • பாம்பு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற உடலாலும், சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது.
    • நாகப்பாம்புகள் விருப்பமான இரையில் கரையான்கள் மற்றும் தவளைகள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டார்.

    உத்தரபிரதேசத்தின் ஈர நிலங்களில் புதிய வகை நாகப்பாம்பு இனம் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    அல்பினோ ஸ்பெக்டாக்கிள்ட் கோப்ரா என்று பெயரிடப்பட்ட இந்த பாம்பு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற உடலாலும், சிவப்பு நிற கண்களையும் கொண்டுள்ளது. அதன் அரிய தோற்றம் கவனத்தை ஈர்க்கிறது.

    சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிரயாக்ராஜில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி கல்வி பயிற்சி மற்றும் சூழலியல் மறுசீரமைப்பு மையத்தின் ஆராய்ச்சி மாணவர் ராகுல் நிஷாத் இதனை கண்டுபிடித்துள்ளார்.

    அவரது கண்டுபிடிப்புகள் சர்வதேச இதழான "ரெப்டைல்ஸ் அண்ட் அம்பிபியன்ஸ்" இல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நாகப்பாம்புகளில் உள்ள அல்பினிசத்தின் மரபணு நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அங்கு இயற்கை நிற நிறமியான மெலனின் இல்லை.

    பிரயாக்ராஜை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் நிஷாத் டேராடூனில் உள்ள டூன் பல்கலைக்கழகத்தில் வனவியல் படிப்பை தொடர்ந்தார், மேலும் பிரயாக்ராஜின் நைனியில் உள்ள ஷுவாட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

    இதுதொடர்பாக ராகுல் நிஷாத் கூறுகையில்,

    இந்த கண்டுபிடிப்பு பல்லுயிர் பற்றிய புரிதலை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல் ஈரநிலங்களின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

     

     

    நாகப்பாம்புகள் விருப்பமான இரையில் கரையான்கள் மற்றும் தவளைகள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டார். இது பெரும்பாலும் ஈரநிலங்கள் மற்றும் சமவெளிகள் போன்ற இரைகள் நிறைந்த பகுதிகளில் வாழ்கிறது.

    அல்பினோ ஸ்பெக்டாக்கிள்ட் கோப்ராவின் கண்டுபிடிப்பு, நாட்டில் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு முயற்சிகளின் தற்போதைய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

     

    ×