நோ பார்க்கிங் விவகாரம்... தனது ஆட்டோவிற்கு தானே தீ வைத்த ஓட்டுநர் - வீடியோ

நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பு.ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
auto fire
Published on

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கிங் இடத்தில நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

இது தொடர்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர், ஒருகட்டத்தில் விரக்தியாகி தனது ஆட்டோவை தீ வைத்து எரித்தார்.

ஆட்டோ எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்டோவிற்கு தீ வைத்ததற்காக ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதே சமயம், தன்னை பழிவாங்குவதற்காக தனது ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்தனர் என்று ஆட்டோ ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com