என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் வேதனையான சாதனைகள்தான் நிகழ்ந்துள்ளது .
- வரி விதிப்பு என்பது வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் பா.ஜ.க., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மதுரை வருவதன் மூலம் ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல. அ.தி.மு.க., த.மா.கா., உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும்.
தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா., மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் வலுவான, பலமான கூட்டணியாக மக்களுடைய ஆதரவு பெற்ற கூட்டணியாக உள்ளது. எங்களது நோக்கம் ஆட்சி மாற்றம். இந்த முக்கிய நோக்கத்திற்கு தமிழகத்தில் உள்ள புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி, பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது த.மா.கா.வின் விருப்பம்.
கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு அரசியல் கட்சியின் தலைவர்கள்-பொறுப்பாளர்கள் பரிசு வழங்குவது வழக்கமான ஒன்றுதான். அப்படி இருக்கும்போது பெற்றோர்களே மாணவர்களை அழைத்துக் கொண்டு வரும்போது அதை வாழ்த்துவது நமது கடமையாக இருக்கிறது. அதைப்பற்றி விமர்சிப்பதோ, அரசியல் ஆக்குவதோ கூடாது.
ஐ.பி.எல்., வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது கர்நாடக காங்கிரஸ் ஆட்சியின் சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் போலீசாரின் செயல் இழந்த பணிதான் காரணம்.
அதனை தமிழகத்தில் அமைச்சர், கோவில் திருவிழாவுடன் ஒப்பிட்டால் அது மசூதி, ஆலயத்திற்கும் சேரும். தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் இப்படி திருவிழா நடந்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் என பொறுப்பில் இருக்கும் அமைச்சர் கூறுகின்றார் என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் நடைபெறும் 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் சாதனை ஒன்றும் இல்லை. வேதனையான சாதனைகள் தான் உள்ளன. மக்களுக்கு கொடுத்துள்ள எந்த ஒரு வாக்குறுதியையும் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை .எங்கு பார்த்தாலும் ஆர்ப்பா ட்டம்-போராட்டம் நடை பெற்று வருகிறது. 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலை யிலேயே உள்ளன. இந்த அரசு தொடர்ந்து செயல்ப டுவது வெட்கக்கேடான செயல்.
எந்தவிதமான ஒரு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த காவல்துறையால் முடியவில்லை . அரசின் செயல்பாடும் அதற்கு ஏற்றவாறு அமையவில்லை. வரும் 10 மாத காலங்களில் அவர்களால் இதை எந்த விதத்திலும் சரி செய்ய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு மக்கள் சென்றுள்ளனர்.
எனவே எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகின்றன. மேலும் முக்கியமாக மக்கள் மீது சுமையை அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். வரி விதிப்பு என்பது வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது . இதனை வேடிக்கை பார்க்கும் அரசாக செயல்பட்டுக் கொ ண்டிருப்பது வருந்தத்தக்கது. திருப்பூர் மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பை கள் தேங்கி கிடக்கின்றன. சாலை வசதி சரியில்லாமல் குண்டும் குழியுமாக காண ப்படுகிறது. இதனால் தொழில் வளர்ச்சிக்கான சூழ்நிலை திருப்பூரில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
- தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் காற்றாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதோடு தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை துணை இயக்குனர் சரவண பெருமாள் உத்தரவின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய தீயை அணைக்கும் பணி மதியம் 12 மணியையும் தாண்டி தொடர்ந்தது.
இந்த பயங்கர தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- மலைக்கோவிலில் உள்ள சட்டநாதர் சுவாமிக்கு புனுகு சாந்தி நடைபெற்ற வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
- அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் சட்டநாதர்சுவாமி புனுகு விபூதி, உளுந்து வடை, பயிர் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு சுக்கிர வார வழிபாடு பூஜை நடைபெறுவது வழக்கம். நள்ளிரவு வரை தொடரும் இப்பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்து கண்விழித்து சுக்ரவார வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர். சட்ட சிக்கல், சத்துருக்களின் தொல்லைகள், பில்லி சூனியம், அச்சம் ஆகியவைகள் நீங்கி ஏராளமான நன்மைகள் உடனடியாக வந்து சேரும் என்பதால் சுக்ரவார வழிபாட்டில் பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற சுக்கிர வார வழிபாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயப்பிரதீப் பங்கேற்று தரிசனம் செய்தார். பலிபீடத்திற்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் முத்து சட்டநாதர் சுவாமிக்கு நடைபெற்ற வழிபாடு, மலைக்கோவிலில் உள்ள சட்டநாதர் சுவாமிக்கு புனுகு சாந்தி நடைபெற்ற வழிபாடு ஆகியவற்றில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் சட்டநாதர்சுவாமி புனுகு விபூதி, உளுந்து வடை, பயிர் பாயசம் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.
- திருப்பூரில் உள்ள தொழில் அனைத்தும் ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார் என வெளிமாநிலங்களுக்கு போகிறது.
- நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, 15 வேலம்பாளையம், சிறுபூலுவபட்டியில் திண்ணை பிரசாரம் நடை பெற்றது.
இதில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியதாவது:-
திருப்பூர் மாநகராட்சியில் குப்பை, வரி, சொத்து வரி என தி.மு.க., அரசு எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்களுக்கு கஷ்ட காலம் தான். திருப்பூரில் உள்ள தொழில் அனைத்தும் ஒடிசா, மத்தியப்பிரதேசம், பீகார் என வெளிமாநிலங்களுக்கு போகிறது. அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மின் கட்டண சலுகை, வட்டியில்லா கடன் என ஏராளமான சலுகைகளை அந்த மாநில அரசுகள் வழங்குகின்றன.
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள பெரும்பாலான தொழில்கள் அந்த மாநிலங்களுக்கு செல்வதாக என்னிடம் பேசிய தொழிலதிபர்கள் தெரிவித்தார்கள். ஆனால் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஒவ்வொரு நாடாக சென்று அங்குள்ள தொழிலதிபர்களை எல்லாம் தமிழ்நாட்டுக்கு வாருங்கள் என அழைக்கிறார். இது ஒரு கேலிக்கூத்தாக இருக்கிறது.
எங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கி, எங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பு தாருங்கள் என மத்தியப்பிரதேச முதலமைச்சர் திருப்பூர் வந்து அழைக்கிறார். பீகார் முதலமைச்சர் கோவை வந்து அழைக்கிறார். ஆனால் நமது முதலமைச்சரோ இங்கிருக்கும் தொழிலதிபர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஒப்பந்தம் போட்டு, ஏதோ வெளிநாட்டினர் இங்கு வந்து புதிதாக தொழில் தொடங்குவது போல் நாடகம் நடத்தி வருகிறார்.
9 அமாவாசைகளில் இந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறது. விரைவில் லஞ்ச, ஊழல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுந்தரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தில் யாதவர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 58). இவருக்கு இளங்கோ (22), தமிழன் ( 21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் அடைச்சானி அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தனது நண்பர்களுடன் சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்படவே கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இளங்கோவன் தமிழனும் தங்களது வீட்டுக்கு வந்து விட்டனர். அன்று இரவில் சுந்தரம் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்ட நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுந்தரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றது.
இதில் அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு சுந்தரம் வீட்டின் கதவு மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு சுந்தரம் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து சுந்தரம் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தன்று கோவில் திருவிழாவில் தகராறு நடந்துள்ளதால் அந்த முன்விரோதத்தில் யாரேனும் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது தொடர்பாக அதில் சம்பந்தப்பட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
- பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்பி வருகிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் என பல ஊழல்கள் தி.மு.க அரசில் நடந்துள்ளது. இந்த தோல்விகளை மறைப்பதற்காகவே மத்திய அரசை குறை சொல்வதை வாடிக்கையாக முதல்வர் வைத்துள்ளார்.
ஏற்கனவே பீகார், தெலுங்கானாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித மனதும் இல்லை.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருக்கிறார்.
பிரதமர் மோடி தெளிவாக கூறி விட்டார். யாருக்கும், எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்து விட்டார். உள்துறை மந்திரி அமித்ஷாவும் இது குறித்து தெளிவுபடுத்தி விட்டார்.
ஆனால் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பது போல மக்களிடத்தில் பொய்யான திசை திருப்புதல் செயலை தமிழக முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் இதுபோன்ற விஷயங்களில் மக்களை திசை திருப்புவதை விட்டு விட்டு அரசாங்கத்தை முறையாக நடத்த வேண்டும்.
தி.மு.க அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதனை கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக மதுரை முருகன் மாநாட்டை முன்னெடுத்து உள்ளனர்.
தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாக ஆண்டு தோறும் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கடவுள் ஆன முருகன் மாநாட்டினை மதுரையில் நடத்துவது தான் சரியானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் தொண்டர்கள், நிர்வாகிகள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.
- ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கையெழுத்து போட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமணத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் தொண்டர்கள், நிர்வாகிகள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். அவர் அவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் தனது பணியை செய்வார் என்பதில் ஐயமில்லை.
மாநிலங்களவை உறுப்பினர் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் எங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. நான் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டதாலும் வைகோ கோவையில் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாலும் அங்கு செல்ல முடியவில்லை.
ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கையெழுத்து போட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்காததால் மன வேதனை இருந்தாலும் அனைத்தையும் கடந்து செல்வோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சிக்கு இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
சென்னை:
2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில், 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
இதற்காக பல மாதங்களுக்கு முன்பே தி.மு.க. வியூகம் வகுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
தி.மு.க.வில் 2 கோடி கட்சி உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் கட்சியை மேலும் வலுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற பொதுக் குழுவில் தி.மு.க.வுக்கு கூடுதலாக 2 சார்பு அணிகள் தொடங்கப்படும் என்று கூறி இருந்தார். அதை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இது மட்டுமின்றி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. முன்னெடுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் கூறி இருந்தார்.
இதை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்களும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர்.
கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளதால் கழக ஆட்சியின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் தொடர்ந்து எடுத்து சொல்ல வேண்டும். இதில் ஒவ்வொருவரின் உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். நாம் ஏற்கனவே கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்திருந்தாலும் அதுபோதாது. இன்னும் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கடந்த ஓராண்டுக்கு முன்பு தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை திறம்பட செய்து முடித்தது போல் இந்த முறையும் வீடு வீடாக சென்று கழகத்துக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அந்த பணிகளை இப்போதே தொடங்குங்கள்.
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
- மதுரை தி.மு.க. பொதுக்குழுவில் மன்னராட்சிக்கு வழி வகுக்க உதயநிதிக்கு துணை நிற்போம் என்று தீர்மானம் போட்டார்கள்.
- தமிழகத்தில் மன்னராட்சியை ஒழித்து எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி வளர செய்வோம்.
மதுரை:
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகவும் அநியாயமான ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியை வழிநடத்தும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், நியாயமான தொகுதி மறுவரை குறித்து பேசுகிறார். தி.மு.க. அரசின் தோல்விகளையும், மோசடிகளையும் மறைப்பதற்காக இதுபோன்ற கவனத்தை சிதறடித்து விஷயங்களை பயன்படுத்துவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அது தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை, மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் எடப்பாடியார் தெரிவித்து உள்ளார். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் நிலை வந்தால் அதை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என்று எடப்பாடியார் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். அதே போல அடிமை அமைச்சர் ரகுபதி தொடர்ந்து வார்த்தைகளால் வாந்தி எடுத்து வைத்ததையெல்லாம் மக்கள் பொருட்படுத்த தயாராக இல்லை.
மதுரை தி.மு.க. பொதுக்குழுவில் மன்னராட்சிக்கு வழி வகுக்க உதயநிதிக்கு துணை நிற்போம் என்று தீர்மானம் போட்டார்கள். அதில் திருப்தி அடையாத உதயநிதி ஸ்டாலின், தனக்கு துணைபொதுச்செயலாளர் பதவியை கேட்டு அழுத்தம் கொடுத்ததாக பத்திரிகையில் செய்தி வருகிறது. இதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காகத்தான் இல்லாத பிரச்சனையை பூதாகரமாக்கி கானல் நீர் போல் காட்சிப்படுத்த நினைக்கிறார். நம்மை சூழ்ந்து இருக்கின்ற இந்த ஆபத்தை மீட்டு எடுக்கக்கூடிய ஒரே சக்தி எடப்பாடியார் தான். தமிழகத்தில் மன்னராட்சியை ஒழித்து எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி வளர செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வட இந்தியாவில் விநாயகர், ராமர் என்ற பெயரில் அரசியல் நடத்துகிறது.
- மதவாத கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை 2026-ம் ஆண்டு தேர்தல் உறுதிப்படுத்தும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலம் விட்டு மாநிலங்களில் பா.ஜ.க. மதவாத அரசியலை வடிவமைத்து மாற்றி கையில் எடுக்கிறது. வட இந்தியாவில் விநாயகர், ராமர் என்ற பெயரில் அரசியல் நடத்துகிறது. மேற்கு வங்காளத்தில் துர்கா, காளியை கையில் எடுக்கிறது. தமிழகத்தில் முருகக் கடவுளை கையில் எடுக்கிறார்கள். இது அவர்களின் அரசியல் யுத்திகளில் ஒன்று.
பிற மாநில மக்கள் மயங்குவது போல தமிழக மக்கள் ஒருபோதும் இவர்களின் மதவாத அரசியலுக்கு மயங்க மாட்டார்கள். முருகனும் மயங்க மாட்டார். தமிழ்க் கடவுள் முருகன் இவர்களை விரட்டியடிப்பார். மதவாத கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதை 2026-ம் ஆண்டு தேர்தல் உறுதிப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலைவாழ் மாணவர் பரத் பொது சட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
- தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் மலைக்கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத் பொது சட்ட நுழைவுத்தேர்வில் (CLAT) வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
பச்சைமலை பகுதியில் CLAT தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை பரத் படைத்துள்ளார்.
CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் பரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உள்ளம் உவகையில் நிறைகிறது.
தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறை துணை நின்று அவரை வழிநடத்தும் என்று தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் முன்னர் ஒரு மாதிரி பேசினார்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* தமிழகத்தில் சிறப்பாக நடக்கும் தி.மு.க. ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் கேவலமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார்.
* தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை கேலிக்கூத்தானது.
* பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
* பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார்.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் முன்னர் ஒரு மாதிரி பேசினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த பின்னர் வேறு மாதிரி பேசுகிறார் என்றார்.
இதனிடையே, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு, மோடி 8 முறை வந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை, ஷா என்ன செய்ய முடியும்? என்று கூறினார்.






