என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமித்ஷா வருகை கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும்- ஜி.கே. வாசன்
- 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் வேதனையான சாதனைகள்தான் நிகழ்ந்துள்ளது .
- வரி விதிப்பு என்பது வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் பா.ஜ.க., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா மதுரை வருவதன் மூலம் ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பது பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல. அ.தி.மு.க., த.மா.கா., உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும்.
தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா., மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் வலுவான, பலமான கூட்டணியாக மக்களுடைய ஆதரவு பெற்ற கூட்டணியாக உள்ளது. எங்களது நோக்கம் ஆட்சி மாற்றம். இந்த முக்கிய நோக்கத்திற்கு தமிழகத்தில் உள்ள புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி, பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது த.மா.கா.வின் விருப்பம்.
கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு அரசியல் கட்சியின் தலைவர்கள்-பொறுப்பாளர்கள் பரிசு வழங்குவது வழக்கமான ஒன்றுதான். அப்படி இருக்கும்போது பெற்றோர்களே மாணவர்களை அழைத்துக் கொண்டு வரும்போது அதை வாழ்த்துவது நமது கடமையாக இருக்கிறது. அதைப்பற்றி விமர்சிப்பதோ, அரசியல் ஆக்குவதோ கூடாது.
ஐ.பி.எல்., வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது கர்நாடக காங்கிரஸ் ஆட்சியின் சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் போலீசாரின் செயல் இழந்த பணிதான் காரணம்.
அதனை தமிழகத்தில் அமைச்சர், கோவில் திருவிழாவுடன் ஒப்பிட்டால் அது மசூதி, ஆலயத்திற்கும் சேரும். தமிழகத்தில் வழிபாட்டு தலங்களில் இப்படி திருவிழா நடந்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் என பொறுப்பில் இருக்கும் அமைச்சர் கூறுகின்றார் என்றால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் நடைபெறும் 4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் சாதனை ஒன்றும் இல்லை. வேதனையான சாதனைகள் தான் உள்ளன. மக்களுக்கு கொடுத்துள்ள எந்த ஒரு வாக்குறுதியையும் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை .எங்கு பார்த்தாலும் ஆர்ப்பா ட்டம்-போராட்டம் நடை பெற்று வருகிறது. 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலை யிலேயே உள்ளன. இந்த அரசு தொடர்ந்து செயல்ப டுவது வெட்கக்கேடான செயல்.
எந்தவிதமான ஒரு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த காவல்துறையால் முடியவில்லை . அரசின் செயல்பாடும் அதற்கு ஏற்றவாறு அமையவில்லை. வரும் 10 மாத காலங்களில் அவர்களால் இதை எந்த விதத்திலும் சரி செய்ய முடியாது என்ற அவநம்பிக்கைக்கு மக்கள் சென்றுள்ளனர்.
எனவே எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகின்றன. மேலும் முக்கியமாக மக்கள் மீது சுமையை அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். வரி விதிப்பு என்பது வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது . இதனை வேடிக்கை பார்க்கும் அரசாக செயல்பட்டுக் கொ ண்டிருப்பது வருந்தத்தக்கது. திருப்பூர் மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பை கள் தேங்கி கிடக்கின்றன. சாலை வசதி சரியில்லாமல் குண்டும் குழியுமாக காண ப்படுகிறது. இதனால் தொழில் வளர்ச்சிக்கான சூழ்நிலை திருப்பூரில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






