என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு திருமண விருந்து.
- கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் மொய் எழுதி விட்டு சென்றனர்.
சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வழங்குவதற்காக சேதுபதி பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 1 லட்சம் பக்தர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் உணவு சமைக்கப்பட்டது.நேற்று இரவு மாப்பிள்ளை விருந்து நடந்தது.
திருக்கல்யாணம் முடிந்ததும் இன்று காலை மற்றும் மதியம் கல்யாண விருந்து நடந்தது. இந்த விருந்தில் கல்கண்டு சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெண்பொங்கல், தயிர் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், பச்சடி, வடை ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டனர். திருக்கல்யாண விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் திருமண மொய் எழுதி விட்டு சென்றனர்.
10 டன் எடையில் வண்ண மலர்கள்
மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக திருமணம் நடைபெற்ற திருக்கல்யாண மண்டபம் மற்றும் சுவாமிகள் எழுந்தருளும் பழைய திருமண மண்டபம் நறுமண மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரூ.30 லட்சம் செலவில் மொத்தம் 10 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊட்டி மற்றும் பெங்களூருரில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திருக்கல்யாணத்திற்காக பிரத்யேகமாக வரழைக்கப்பட்டிருந்த அரியவகை மலர்களும் இடம் பெற்றிருந்தன.
ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம்
சுவாமி திருக்கல்யாணத்தை காண சித்திரை வீதிகள் முழுவதும் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் அங்கேயே அமர்ந்து எல்.இ.டி. திரையில் ஒளி பரபரப்பப்பட்ட திருக்கல்யாணத்தை பார்த்தனர். திருக்கல்யா ணத்தை காண வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாத பை மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது.
5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. 11 சூப்பிரண்டுகள், 17 கூடுதல் சூப்பிரண்டுகள், 35 டி.எஸ்.பி.க்கள், 96 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மதுரை மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்பட மொத்தம் 5 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்த சித்திரை வீதிகளில் 30 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் அசம்பாவி தங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.
மேலும் மதுரை மாநகரில் பல இடங்களில் தயார் நிலையில் ஆம்புலன்சு வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இவை தவிர சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. அதற்காக ஏராளமான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருக்கல் யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு வசதியாக 70 குடி நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.
சுகாதாரத்துறை சார்பில் 22 துப்புரவு மேற்பார்வையாளர்கள் தலைமையில் 2 ஆயிரம் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
- சாந்தகுமார் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
- உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.
பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
- இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா மாநில தலைவரும், பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
அவருக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள் சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.
இந்த பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இப்பணியில் அனைத்து நிலைகளிலும் வாக்கா ளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழி வகை உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி தேர்தல் ஆணையத்தால் பொது மக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
எளியமுறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள ஏதுவாக தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும், 1950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலைரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.
- கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
களியக்காவிளை:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.
இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து பறவை காய்ச்சலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தொற்று கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவு வரை வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது.
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் பரவலாம் என்பதால், இதனை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் படந்தா லுமூடு சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழி முட்டை மற்றும் கோழி தீவணங்களுடன் வரும் வாகனங்களை கண்காணித்து அவற்றை கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்களை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
- தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
- வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;
சென்னை:
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;
தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;
தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள்!
தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்;
— M.K.Stalin (@mkstalin) April 21, 2024
தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்;
வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்;
பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்;
தற்போது… pic.twitter.com/o0JU8oEaYE
- வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
- விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.
சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராம த்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.
அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.
சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.
மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
- திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
- பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.
சென்னை:
முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி தமிழகத்தில் தேர்தல் முடிந்ததால் கேரளாவில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
தலைநகரான திருவனந்தபுரத்தில் தமிழர்கள், மலையாளிகள், வேறு மாநிலத்தவர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள்.
எனவே விஜயதரணி தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் பேசி வாக்கு சேகரிக்கிறார். ஏற்கனவே விஜயதரணி எம்.எல்.ஏ.வாக இருந்த விளவங்கோடு தொகுதியை அடுத்து திருவனந்தபுரம் இருப்பதால் தமிழ், மலையாளம் கலந்து பேசும் மக்கள் பெருமளவு அவர்கள் மத்தியில் இரு மொழிகளையும் கலந்து பேசுகிறார்.
3 முறை தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்ததாகவும் கட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்றும் எனவே பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.
- ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
- 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே கூ.கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அருகேயுள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து தலைவர் கொளஞ்சியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். தேர்தல் முடிந்தவுடன் சரி செய்வதாக பொதுமக்களிடம் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிந்து 2 நாட்கள் ஆகியும், குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கையை ஊராட்சி தலைவர் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு நெடுஞ்சாலையில் காலிக் குடங்களுடன் இன்று காலை 7 மணிக்கு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்து ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் கொளஞ்சி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டியதாகவும், சாலையில் இருந்த காலிக்குடங்களை எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இருந்த போதும் பொதுமக்கள் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற திருநாவலூர் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஊராட்சி செயலாளரையும் அங்கு வரவழைத்தனர். 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதாகவும், ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாகவும் போலீசார் உறுதி கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது.
- திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34 தொகுதிகளில் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.
சென்னையில் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளில் வடசென்னையில் 60.13 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் இங்கு 64.23 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 4 சதவீதம் அளவுக்கு அங்கு வாக்குகள் குறைந்துள்ளன. தென் சென்னையில் 54.27 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
இதில் தென் சென்னையில் 3 சதவீத ஓட்டுகளும், மத்திய சென்னையில் 5 சதவீத ஓட்டுகளும் கடந்த தேர்தலைவிட குறைவாக பதிவாகியுள்ளன. திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் 68.31 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
கடந்த தேர்தலில் இங்கு 72.33 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 71.55 சதவீத ஓட்டுகளும் ஸ்ரீபெரும்புதூரில் 60.21 சதவீத ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் 4 சதவீதம் அளவுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சதவீத வாக்குகளும் குறைந்துள்ளன.
அரக்கோணத்தில் கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் அளவுக்கு குறைந்து 74.08 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கிருஷ்ணகிரி தொகுதியில் 71.31 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாகும்.
தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு 2019-ம் ஆண்டு தேர்தலிலும் 82.33 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. இருப்பினும் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அளவுக்கு குறைவாகவே அங்கு வாக்கு பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை தொகுதியில் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 73.88 சதவீதமும், ஆரணியில் 3 சதவீத வாக்குகள் குறைந்து 75.65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. நாமக்கல் தொகுதியில் 78.16 சதவீத வாக்குகளும், ஈரோட்டில் 70.45 சதவீத வாக்குகளும், திருப்பூரில் 70.58 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது.
இந்த 3 தொகுதிகளிலும் 3 சதவீதம் அளவுக்கு குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளன. நீலகிரி தொகுதியில் கடந்த தேர்தலில் 73.99 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
பொள்ளாச்சி தொகுதியில் கடந்த தேர்தலைவிட ஒரு சதவீத வாக்கு குறைந்து 70.70-ஆக பதிவாகியுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் 75.24 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 70.99 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன.
இது 5 சதவீதம் குறைவாகும். கரூர் தொகுதியில் ஒரு சதவீதம் குறைந்து 78.61-ஆக பதிவாகியுள்ளது. திருச்சியில் 2 சதவீத வாக்குகள் குறைந்து 67.45 ஆகவும், பெரம்பலூரில் 77.37 ஆகவும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. கடலூரில் 76.48 ஆக இருந்த வாக்கு சதவீதம் 4 சதவீதம் குறைந்து 72.28 ஆக பதிவாகி இருக்கிறது.
சிதம்பரம், மயிலாடுதுறையில் தொகுதிகளில் 2 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. சிதம்பரத்தில் 75.32 சதவீதமும் மயிலாடுதுறையில் 70.06 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.
நாகப்பட்டினத்தில் கடந்த தேர்தலில் 76.88 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் தற்போது 5 சதவீதம் குறைந்து 71.55 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சையில் 2 சதவீதம் குறைந்து 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சிவகங்கை தொகுதியில் கடந்த தேர்தலில் 69.87 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது அது 5 சதவீதம் குறைந்து 63.94 ஆக பதிவாகி உள்ளது.
மதுரை தொகுதியிலும் 5 சதவீத வாக்குகள் குறைந்து உள்ளன. கடந்த தேர்தலில் 66.02 சதவீதமாக இருந்த வாக்குகள் தற்போது 61.92 சதவீதம் குறைந்துள்ளது. தேனி தொகுதியிலும் கடந்த தேர்தலைவிட 5 சதவீத வாக்குகள் குறைந்து 69.87 சதவீதம் பதிவாகியுள்ளன.
விருதுநகர் தொகுதியில் 2சதவீத வாக்குகள் குறைந்து 70.17 சதவீதமாக பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் 68.35 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 68.18 சதவீதம் ஓட்டு போட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் 69.43 ஆக இருந்த வாக்கு சதவீதம் 66.88 ஆக குறைந்துள்ளது. தென்காசியில் 71.37 ஆக இருந்த வாக்கு சதவீதம் 67.55 ஆகவும், நெல்லையில் 67.21 சதவீதமாக இருந்த வாக்குகள் 64.10 ஆகவும் குறைந்து உள்ளன. கன்னியாகுமரியில் 69.83 சதவீதமாக இருந்த வாக்குகள் 65.46 சதவீதமாக குறைந்துள்ளன.
தமிழகத்தில் 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைவிட தற்போதைய தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் 73.74 சதவீத வாக்குகளும் 2019-ம் ஆண்டு 72.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 69.46 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளன. வாக்கு சதவீதம் குறைவுக்கு கொளுத்தும் வெயில், தொடர் விடுமுறை ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போடாமல் தவிர்த்திருப்பது அரசியல் கட்சிகள் மீதான கோபத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். இது தேர்தல் முடிவின் போது எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது. மக்களின் இந்த தேர்தல் வெறுப்பு தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
குறைவான வாக்குப்பதிவுகளில் மத்திய சென்னை, மதுரை, திண்டுக்கல், நாகப்பட்டினம், தேனி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 5 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன. அதே நேரத்தில் 5 தொகுதிகளின் வாக்கு சதவீதம் சற்று அதிகரித்தும் காணப்படுகிறது. வேலூர் தொகுதியில் 71.32 சதவீதமாக இருந்த வாக்குகள் 73.42 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரத்தில் 74.56 ஆக இருந்த வாக்கு சதவீதம் 76.47 ஆகவும், கள்ளக்குறிச் சியில் 78.77 சதவீதமாக இருந்தது 79.25 ஆகவும், சேலத்தில் 77.86 ஆக இருந்த சதவீதம் 78.13 ஆகவும் கோவையில் 63.86 ஆக இருந்த வாக்கு சதவீதம் 64.81 ஆகவும் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அவினாசி:
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். இதில் விநாயகர் பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர்.

நேற்று முன்தினம் இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நடைபெற்றது.சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் `அவிநாசியப்பா', `அரோகரா', `நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.
நாளை 22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 25-ந் தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 26-ந் தேதி மகா தரிசன விழாவும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய இடங்களில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.
- 2 ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டானது.
- 7 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே பசிபிக் பெருங்கடலில் அந்நாட்டு கடற்படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அதில் தலா 4 பேர் பயணம் செய்தனர்.
டோக்கியோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோரிஷிமா தீவு அருகே திடீரென்று 2 ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டானது.இதையடுத்து சம்பவ இடத்தில் 2 ஹெலிகாப்டர்களும் கடலில் விழுந்து கிடந்தது. இரண்டு ஹெலிகாப்டர்களும் தண்ணீரில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 7 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
- தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது.
- மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் அருகே வேடம்பட்டில் மருத்துவ கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷக்காற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20 பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அடுத்த வேடம்பட்டில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 1 மணி அளவில் இப்பகுதியில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் அருகில் இருந்த வேடம்பட்டு காலனி பொதுமக்கள் இக்காற்றை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு அதிகாலை 1 மணி முதல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேடம்பட்டை சேர்ந்த அங்காளவள்ளி, ஜெயலட்சுமி, சவுமியா, மாரியம்மாள், சுசிலா, ரேணுகா, மதன், கடலூர் சுரேஷ், உள்ளிட்ட 17 பேரும், காணை அரசு மருத்துவமனையில் 13 பேர்களும் என மொத்தம் 20 பெண்கள் உள்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் வேடம்பட்டு கிராமத்தில் பதட்டம் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பிரச்சனை தொடர்பாக வேடம்பட்டு காலனி மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






