search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banana tree"

    • வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் இதுவரை பதிவாகாத 109 டிகிரி வெயில் பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான தாளவாடி மலை பகுதியில் நேற்று மதியம் தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இக்கலூர், சிக்கள்ளி, நெய்தாள புரம் திகினாரை, கும்டாபுரம், தொட்டகாஜனூர் உள்ளிட்ட கிராமங்களில் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

    சிக்கள்ளி பகுதியில் விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி அங்கு சிறு ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல் தாளவாடி அருகே பனகள்ளி கிராமத்தில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. பலத்த சூறைக்காற்று வீசியதில் பனஹள்ளி கிராம த்தில் உள்ள ஆசீப் (வயது 35), பிரகாஷ் (45), சிக்கராஜ் (48), வரதராஜ் (51), திகனாரை ஜோரகாடு சித்தராஜ் (40) என 5-க்கும் மேற்ட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே போல் பனஹள்ளியில் இருந்து பையணாபுரம் செல்லும் சாலையில் உள்ள புளியமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர்.

    சுமார் 3 மணிநேரத்திக்கு பிறகு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்து சீரானது. சேதமடைந்த வாழைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி பகுதியில் மழை பெய்த அதே நேரத்தில் ஈரோடு மாநகர பகுதி பிறப்பகுதியில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் பதிவானது.

    மாவட்டத்தில் ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்றொரு புறம் தாளவாடி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் இரு வேறுபட்ட காலநிலை மாற்றத்தால் ஒரு பகுதி மக்கள் கவலையும், இன்னொரு பகுதி மக்கள் மகிழ்ச்சியும் அடைந்தனர். 

    • பாபநாசம் அணையில் திறந்து விடப்படும் நீரானது கோடகன் கால்வாயில் வரும்போது கல்லூர் வரை மட்டுமே வந்து சேர்கிறது.
    • 70 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்ட குழு தலைவர் செல்லத்துரை தலைமையில் செயலாளர் மாயகிருஷ்ணன், பொருளாளர் முருகன் மற்றும் விவசாயிகள் ஏராள மானவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் கால்வாய்களில் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படியும், கருகிய வாழைக்கன்றுகளை கையில் ஏந்தியபடியும் வந்தனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் நெல்லை தாலுகாவுக்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கும், சுத்தமல்லி, கருங்காடு, அத்திமேடு உள்ளிட்ட ஊர்களில் உள்ள குளங்களுக்கும், தாமிரபரணி ஆற்றில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது கோடகன் கால்வாய் மூலமாக வந்து சேர்கிறது. அதன் மூலம் பாசன வசதி பெற்று நெல், வாழை உள்ளிட்டவை பயிரிட்டு வருகிறோம்.

    தற்போது பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது கோடகன் கால்வாயில் வரும்போது கல்லூர் வரை மட்டுமே வந்து சேர்கிறது. அதன் கீழ் உள்ள சுத்தமல்லி, நரசிங்கநல்லூர், கருங்காடு, அத்திமேடு உள்ளிட்ட பகுதியில் உள்ள குளங்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேர முடியாமல் போய்விடுகிறது.

    இதனால் நாங்கள் 70 ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைகள் தண்ணீர் இன்றி கருகி உள்ளது. மேலும் கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கயத்தாறு அருகே உள்ள இலந்தைகுளத்தில் தோட்டத்தில் வாழைமரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஊருக்கு தெற்கு பகுதியில் ஆதிநாராயணன் என்பவரது மகன் மாரியப்பன் மோட்டார் பம்ப்செட் கிணறு உள்ளது.

    இந்த கிணற்றில் அவரது உறவினர்கள் மாரியப்பன், அய்யாத்துரை, சங்கர், குருசாமி ஆகியோர் வாழை பயிரிட்டிருந்தனர். 

    இந்த வாழை தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை  வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த இந்த வாழை வெட்டப்பட்டதால், வாழை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனி திலீப், ஆறுமுகம், காசிலிங்கம், மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடததிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு யெ்து வாழைகளை வெட்டிய மர்ம நபர்கள் யார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    சவுக்கு மரங்களை நடுவதன் மூலம் வாழைகளை பாதுகாக்க முடியும்.

    திருப்பூர்:

    பல்லடம் வட்டார பகுதியில் தக்காளி, வெங்காயம், புடலை, அவரை உள்ளிட்ட காய்கறி பயிர்கள், தானியங்கள் மற்றும் தென்னை, வாழை ஆகியவை பயிரிடப்படுகின்றன. நோய் மற்றும் பூச்சி தாக்குதலால், காய்கறி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    அதேபோல் பலத்த காற்று, மழை ஆகியவை வாழைகளுக்கு எதிரியாக உள்ளன. சுழன்றடிக்கும் சூறை காற்றுக்கு வாழைகள் வேருடன் சாய்வது ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது. தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் நிலையில் வாழைகளை பாதுகாக்கும் வழிமுறை குறித்து தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனாபேகம் கூறியதாவது:-

    பல்லடம் வட்டார பகுதியில் நேந்திரன் வாழைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. ஓராண்டுக்குள் இவற்றை பாதுகாப்பது என்பது சவாலான காரியமாகும். காற்று, மழை ஆகியவை வாழைகளை முற்றிலும் சேதப்படுத்திவிடும்.விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வேலி அமைப்பதன் மூலம் வாழைகள் சேதம் அடைவதை தடுக்கலாம்.

    காற்றைத் தடுத்து வாழைகளை பாதுகாப்பதில் சவுக்கு மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேலி ஓரங்களில் குறிப்பிட்ட இடைவெளியுடன் இரண்டு அடுக்காக சவுக்கு மரங்களை நடுவதன் மூலம் வாழைகளை பாதுகாக்க முடியும். சவுக்கு மரங்கள் விளைநிலங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பதுடன் இவற்றால் விவசாயிகளுக்கு அதிக லாபமும் உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் அறிந்து கொள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    அற்புதப் பலன் தரும் வாழை மரத்தை வாரிசு இல்லாதவர்கள் வீட்டில் வளர்த்தால் வம்ச விருத்தி ஏற்படும். வடக்கில் வாழை குலை தள்ளினால் மிகுந்த யோகம்.
    மரம் வளர்ப்போம்!, மழை பெறுவோம்! என்ற வாக்கியத்தை அரசு நாடெங்கிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. திருமண வாழ்த்துகளில் வாழையடி வாழையாக வாழ்க! என்று தம்பதியரை வாழ்த்துவது வழக்கம்! அந்த அடிப்படையில் தன் உடல் முழுவதையுமே உடல் நலம் பேணத் தரும் வாழையின் வாழ்க்கை ஒரு தியாக வாழ்க்கை.

    அந்த வாழ்க்கையை நாமும் பின்பற்ற வேண்டும். பிறருக்காகப் பாடுபட வேண்டும். அதை நினைவுபடுத்துவதற்காகத் தான் மங்கல நிகழ்வுகளில் தோரணமாக வாழை மரத்தைக் கட்டுகிறார்கள்.

    அந்த அற்புதப் பலன் தரும் வாழை மரத்தை வாரிசு இல்லாதவர்கள் வீட்டில் வளர்த்தால் வம்ச விருத்தி ஏற்படும். வடக்கில் வாழை குலை தள்ளினால் மிகுந்த யோகம். உடனே அதற்கு பொங்கல் வைத்து வழிபடுவது செட்டிநாட்டு வழக்கமாக உள்ளது. 
    ×