என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது.
- ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தம் அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கப்படவிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருப்பது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வசூலிக்கப்படும் மின் கட்டணத்தின் பெரும் பகுதி அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்படவிருந்தது தடுக்கப்பட்டிருப்பதும், அதற்காக பங்காற்றியதும் மகிழ்ச்சியளிக்கிறது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தம் வழங்குவதற்கான நடைமுறையில் தொடக்கத்திலிருந்தே ஏராளமான குளறுபடிகள் நிகழ்ந்து வந்தன. ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரப்பட்டன. அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஸ்மார்ட் மீட்டர்களின் விலைகள் எவ்வளவு குறைந்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது எந்த வகையில் நியாயம்? இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை யார் ஏற்பார்கள்? என்று கடந்த 6-ஆம் தேதி வினா எழுப்பியிருந்தேன்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒரு மீட்டருக்கான மொத்த செலவு ரூ.6169 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களின் விலை ரூ.4,000 என்ற அளவுக்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் நிலையில், தமிழக அரசால் வழங்கப்படும் முன்பணம் தவிர, அதானி குழுமத்திற்கு அதிகபட்சமாக ரூ.15,000 வீதம் 80 லட்சம் மீட்டர்களுக்கு வழங்கப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் எத்தனை ஆயிரம் கோடி தாரை வார்க்கப்படுகிறது என்பதை எளிதாக கணக்கிட்டுக் கொள்ள முடியும் என்று வினா எழுப்பிய நான், அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது. அவ்வாறு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டால், மக்களின் பணம் அதானி குழுமத்திற்கு பதிலாக இன்னொரு நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதற்குத் தான் வழிவகுக்கும். எனவே, அந்த முடிவை கைவிட்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.
அதேபோல், அதானி குழும நிறுவனம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்காக வழங்கப்படும் கட்டணமான யூனிட்டுக்கு ரூ.2.61 என்பது மிகவும் அதிகம் என்பதாலும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாலும் அதற்கான ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
- குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் கோவை போலீசார் ஈடுபட்டனர்.

சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று கடந்த மே மாதம் 4-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவருடன் இருந்த ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகிய இருவரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சுமார் 18 மணி நேர விசாரணை நடந்த நிலையில், நள்ளிரவு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் பெண் போலீசாரை தாக்க முயன்றது, அவதூறாகப் பேசியது, தலா 100 கிராம் வீதம் நான்கு பாக்கெட்டுகளில் 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது ஆகிய புகார்களில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் போலீசாரை அவதூறாக பேசியது உள்ளிட்ட பல புகார்களில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. அவர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சென்னையில் இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

பின்னர் அவர் ஜாமின் கேட்டு அதே கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் தீர்ப்பை நீதிபதி செங்கமலச்செல்வன் கடந்த 24-ந்தேதி பிறப்பித்தார். அப்போது நீதிபதி, 15 நாட்களுக்கு சென்னை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
நாளை 2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. இப்போதிலிருந்தே புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. பெரிய பெரிய ஓட்டல், ரிச்சார்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டின் போது ஒருவர் ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புத்தாண்டின்போது ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இளைஞர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். சிலர் கேட்கலை வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வாகன ஓட்டிகள் மது அருந்துவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.
இதை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போலீஸ் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்திலுள்ள மாநில மாவட்ட சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 80 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட முழுவதும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கிண்டல் செய்வது, அவர்களுக்கு தொந்தரவு செய்வது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறும்போது,
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தாலோ, புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை பாயும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்றார்.
- பெருமாள் அவ்வப்போது மது அருந்தி விட்டு தகராறு செய்வதால், பலர் அச்சமடைந்து அவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
- சிறுமிகளின் பெற்றோரிடம் ஹெல்ப்லைன் சூப்பர்வைசர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பெருமாள் (வயது40) டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில், தருமபுரி அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த, சிறுமிகளின் பெற்றோர் நேற்று அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.
அதில், பெருமாள், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்தனர். மேலும், சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கும் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து, அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா நேற்று பெருமாளை கைது செய்து விசாரித்தனர்.
மேலும், பெருமாள் மீது கடந்த ஓராண்டிற்கு முன், பெண் ஒருவரை அத்துமீறி பாலியல் தொல்லை செய்ததாக, புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெருமாள் அவ்வப்போது மது அருந்தி விட்டு தகராறு செய்வதால், பலர் அச்சமடைந்து அவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இதில், 3 சிறுமிகள் பாதிப்பு குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் புகார் அளிக்க வரலாம் என்பதால், அதியமான்கோட்டை மற்றும் நல்லம்பள்ளி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமிகளின் பெற்றோரிடம் ஹெல்ப்லைன் சூப்பர்வைசர் ஜோதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பாலியல் தொல்லை குறித்த சம்பவங்கள் தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
- படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
ஏற்காடு:
தமிழகத்தின் முக்கிய கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் ஏற்காடு களைகட்டியுள்ளது. புத்தாண்டையொட்டி ஏற்காட்டில் உள்ள முக்கிய நட்சத்திர தங்கும் விடுதிகளில் இன்று இரவு சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.
இதற்காக நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பாட்டு, கும்மாளம் என அனைத்து நிகழ்ச்சிக்கும் தயாராக உள்ளன. இந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 வரை வசூலிக்கப்படுகிறது. இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன.
ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
ஏற்காட்டில் தற்போது மூடு பனியுடன், கடும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரையும் பொருட்படுத்தாமல் புத்தாண்டை கொண்டாட ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
- ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம்.
- மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
சென்னை:
2025 ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு பிறக்கிறது. இதையொட்டி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாதனைகளை உச்சி முகர்ந்து அங்கீகரிக்கிறோம் எனக் கூறும் விதமாகத்தான் 2024 பாராளுமன்றத் தேர்தலில் "நாற்பதுக்கு நாற்பது" என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றி மகுடம் சூட்டினர் நம் மக்கள். விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து-இந்நாட்டின் பெருமையை நிலைநாட்ட, தமிழ்நாடு மக்கள் அளித்த வெற்றிக்குரிய 2024-ம் ஆண்டு-மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது.
சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும், வெற்றி பெறவுமான நம்பிக்கையினையும் உத்வேகத்தினையும் அளித்தது 2024-ம் ஆண்டு!
புத்தாண்டாகிய 2025-ல் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும்! தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்! அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்!
ஓயாது உழைப்போம்! பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைப்போம்! என இந்நாளில் சபதமேற்போம்.
மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு, புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும், மலர்ச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதுபோல திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசர் எம்.பி., விஜய் வசந்த் எம்.பி., சரத்குமார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் டாக்டர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் டாக்டர் ஆ.மணி அரசன், நமதுரிமை காக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன், டாக்டர் பால்தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதற்கு கண்டனம்.
- குமரி கண்ணாடி பாலம் திட்டம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி அதிர்ச்சி தருகிறது.
* அண்ணா பல்கலைகழக விவாரத்தில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
* ஞானசேகரனுடன் பேசிய அந்த சார் யார்? மாணவி அளித்த புகாரில் தான் இன்னொருவர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
* இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி தப்பித்து விடக்கூடாது.
* காவல்துறை ஆணையருடன் முரண்பட்டு உயர்கல்வி அமைச்சர் பேசுகிறார்.
* பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இத்தனை அமைச்சர்கள் பேசுவதற்கு என்ன காரணம்.
* யாரை காப்பாற்றுவதற்கு அரசு முயற்சி செய்கிறது? இவ்வளவு பயம் ஏன்?
* பாதிக்கப்பட்ட பெண் அளித்த முதல் தகவல் அறிக்கையில் பதிவிடப்பட்ட அந்த நபரை காப்பாற்றவே தொடர்ந்து அமைச்சர்கள் பேசுகின்றனர்.
* பொள்ளாச்சி விவகாரத்தில் உடனடியாக சிபிஐ வசம் வழக்கு விசாரணையை ஒப்படைத்தோம்.
* புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலில் செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது.
* பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.
* தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது.
* ஆட்சி மீதான பழியை மறைப்பதற்காகவே அமைச்சர்கள் மாறிமாறி அறிக்கை வெளியிடுகின்றனர்.
* போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதற்கு கண்டனம்.
* மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரவே அதிமுக போராட்டம் நடத்தியது.
* போராட்டம் நடத்துவோரை கைது செய்ய 1000 போலீசார் வருகின்றனர், பாலியல் விவகாரத்தில் இந்த வேகத்தை காட்டாதது ஏன்?
* குமரி கண்ணாடி பாலம் திட்டம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, மன்சுக் மாண்டவியாவுடன் இந்த கோரிக்கையை வைத்தோம்.
* கொரோனா காரணமாக பணிகள் தடைப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
- நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன.
- படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர். இதற்காக 3 படகுகள் காலை 8 மணி முதல் இடைவிடாது இயக்கப்பட்டு வருகின்றன.
சுனாமிக்கு பிறகு அமாவாசை மற்றும் பவுர்ணமியின்போது கடலில் அடிக்கடி சீற்றம் ஏற்பட்டு வருவதால் படகு போக்குவரத்து தொடங்குவதில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன. இன்று காலையும் கடல் சீற்றமாக இருந்தது. அவ்வப்போது காற்றுடன் கூடிய மழையும் நீடித்தது. இதனால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
தற்போது பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற காரணங்களால் ஏராளமான வடமாநில சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து உள்ளனர். மேலும் விவேகானந்தர் நினைவிடம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் நேற்று திறக்கப்பட்டு உள்ளது. அதனை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்திருந்தனர்.
அவர்கள் இன்று காலை 6 மணியில் இருந்தே படகு குழாமில் காத்திருந்தனர். ஆனால் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
இதன் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து கூட்டத்தை சீர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.
- 22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை, டிச.31-
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சக்தி குரூப் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பைக் கான 15-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
சென்னை ஓபன் செஸ் போட்டி ஏ, பி மற்றும் சி என 3 வகை பிரிவுகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் 2 ஆயிரத்துக்கு மேல் ரேட்டிங் புள்ளிகளை பெற்ற முன்னணி வீரர்கள் ஏ பிரிவில் இடம் பெறு வார்கள். 2 ஆயிரம் ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் பி பிரிவிலும், 1800 ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் சி பிரிவி லும் ஆடுவார்கள்.
ஏ பிரிவினருக்கான போட்டி எழும்பூரில் உள்ள ராம்தா ஓட்டலில் நடை பெறும். 'பி' பிரிவினருக்கும், (2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை) 'சி' பிரிவினருக்கும் (6-8), நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். 17 கிராண்ட் மாஸ்டர்கள், 27 சர்வதேச மாஸ்டர்கள், 5 பெண் சர்வதேச மாஸ்டர் கள் இந்த போட்டியில் பங்கேற்பதை உறுதி செய் துள்ளனர்.
ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் ஆரோன்யக் கோஷ் இந்தப் போட்டியின் முதல் நிலை வீரராக உள்ளார். ஈரோட்டை சேர்ந்த இனி யன், சித்தார்த் ஜெகதீஷ் (சிங்கப்பூர்), ஷியாம் சுந்தர் (சென்னை) ஆகியோர் அதற்கு அடுத்த வரிசையில் உள்ளனர்.
'ஏ' பிரிவில் 167 வீரர், வீராங்கனைகள் பங்கேற் கிறார்கள். இதில் 44 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர் கள். கொலம்பியா, பெலா ரஸ், கிர்கிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந் தவர்கள் விளையாடுகிறார் கள்.
10 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெறும். மொத்த பரிசு தொகை ரூ.40 லட்சமாகும். 'ஏ' பிரிவில் ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. சாம்பி யன் பட்டம் பெறுபவருக்கு ரூ.4 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.3 லட்சமும் கிடைக்கும்.
சென்னை ஓபன் சர்வ தேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை சக்தி குரூப் நிறுவனத்தின் சேர்ம னும், தமிழ்நாடு செஸ் சங்க தலைவருமான எம்.மாணிக் கம் தொடங்கி வைக்கிறார். பீடே முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர், இந்தியாவின் முதல் சர்வ தேச மாஸ்டர் மானுசெல் ஆரோன் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொள் கிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி தெரி வித்துள்ளார்.
* * *இலங்கை அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்திலும் வென்று இருந்ததால் அந்த அணி தொடரை கைப்பற்றியது. இலங்கை வீரர் குஷால் மெண்டீஸ் அடித்த பந்தை நியூசிலாந்து வீரர் மிச்சேல் கேட்ச் பிடிப்பதை படத்தில் காணலாம்.
- மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது.
- மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது.
சென்னை:
பருவமழை காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கம். எனவே, இந்த காலகட்டங்களில் பொதுமக்களும் உஷாராக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் பருவமழை தொடங்கி முடியும் தருவாயை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் வழக்கமான நோய் தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் வடகிழக்கு பருவமழையால் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை போன்றவற்றால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடல் நல பிரச்சினைகளால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 40 சதவீதம் பேர் இத்தகைய பாதிப்புகளால் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜீரண மண்டலத்தை பாதிக்கும் இ-கோலி எனப்படும் பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பாக்டீரியாக்கள் அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீர், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் புகுந்து விடுவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி என்று மருத்துவமனைக்கு வரும் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மைக்ரோ பிளாஸ்மா நிமோனியா, கிளாடிமியா நிமோனியா, லெஜியோனல்லா வகை பாக்டீரியாக்கள்தான் காய்ச்சலை உருவாக்குகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் வழியே இந்த வகை பாக்டீரியாக்கள் பரவுவதாக கூறப்படுகிறது.
இந்த நோய் பெரியவர்களை தாக்கினால் ஆபத்தையும் பெரிய அளவில் ஏற்படுத்தும். சிறியவர்களை தாக்கினால் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் ஆபத்து குறைவு என்கிறார்கள்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, மழைக்காலங்களில் நோய் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம்தான். பொது சுகாதாரத் துறையினரின் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
- சுருண்டு போய் கிடந்த அண்ணாமலை அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு வருவதற்காக விஜய் கவர்னர் சந்தித்ததை வலிய சென்று வரவேற்று இருக்கின்றார்.
- கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வரக்கூடியவர்.
சென்னை:
விடுதைல சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்ததை வைத்து அவருக்கு வலிய வாழ்த்துச் சொல்லி அரசியல் செய்கிறார் அண்ணாமலை
ஏற்கனவே, தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட சாட்டையடியால், ஏற்பட்ட விமர்சனங்களால் சற்று சுருண்டு போய் கிடந்த அண்ணாமலை அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு வருவதற்காக விஜய் கவர்னர் சந்தித்ததை வலிய சென்று வரவேற்று இருக்கின்றார்.

நடிகர் விஜய் திராவிட மாடல் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்ததால், அவரால் திமுகவிற்கு கோரிக்கை வைக்க முடியவில்லை.
ஆகவே ,அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த துயரத்தை முன்னிட்டு கவர்னரை சந்தித்து முறையிட்டிருக்கிறார் . இது அவரது அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வரக்கூடியவர். அந்த சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்கிக் கொள்ளக் கூடாது.
பா.ஜ.க. சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் பேராசை*. அதனால் தான் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றார்.
மாணவிக்கு நீதிகேட்டு போன விஜய்
மகுடிக்கு மயங்க மாட்டார் என நம்புவோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- திமுக அரசின் பொய்முகங்கள் தோலுரிவதும், பொய் விளம்பர மாடல் ஸ்டாலினின் அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அதிமுக இளைஞர்களை வழக்குப் போட்டு, கைது செய்து அடக்கிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனிப்பது, கண்டிக்கத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் #யார்_அந்த_SIR என்ற கேள்வியுடன், #SaveOurDaughters என்ற விழிப்புணர்வு வாசகத்துடன், சென்னையில் பிரபல வணிக வளாகம் ஒன்றில் மக்களிடையே மிகவும் அமைதியாக, ஒழுக்கத்துடன் கவன ஈர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்களை கண்டு பதற்றம் அடைந்த விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிந்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தேசிய ஊடகம் வரை கவனத்தை ஈர்த்து, பொதுமக்களின் பேராதரவை அதிமுக-வின் போராட்டங்கள் பெறுவதும்,
இந்த விடியா திமுக அரசின் பொய்முகங்கள் தோலுரிவதும், பொய் விளம்பர மாடல் ஸ்டாலினின் அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கு குறித்த ஒரு முக்கியமான கேள்வியையும், பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், பொதுமக்கள் கூடும் இடத்தில், எவ்வித இடையூறும் இன்றி சமூக அக்கறை கொண்டு அறவழியில் மேற்கொண்ட அதிமுக இளைஞர்களை வழக்குப் போட்டு, கைது செய்து அடக்கிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனிப்பது, கண்டிக்கத்தக்கது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்ட இவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.






