என் மலர்
மகாராஷ்டிரா
- அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று கருதுவது சரியல்ல.
- சாக்கடைகளை சுத்தம் செய்வது பொதுமக்களின் பொறுப்பா, மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை அடையாளம் காண்பதும் பொதுமக்களின் வேலையா?
இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற பட்டியலில் கடந்த எட்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் நகரம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம். ஆனால் கடந்த மாதம் இந்தூரின் பாகிரத்புரா பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்புகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிலர் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காண்டுவா தொகுதியில் ஏதேனும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதா என பாஜக எம்.பி. ஞானேஸ்வர் பாட்டீலிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
"காண்ட்வாவாக இருந்தாலும் சரி, நகராட்சி மன்றமாக இருந்தாலும் சரி, கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும் சரி, அனைவரும் இந்தூர் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று கருதுவது சரியல்ல. பொதுமக்களுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. தண்ணீர் தொட்டிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.
சுத்தமான தண்ணீர் என்பது நமது பிரதமர் மோடியின் உறுதி, ஒவ்வொரு வீட்டிலும் குழாய்கள் வழங்கப்படுகின்றன. குறைபாடுகள் இருந்தால், நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றைத் தீர்க்க வேண்டும்" என தெரிவித்தார்.
அதற்கு தொடர்ந்து தண்ணீரின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு பலமுறை தகவல் அறிவித்தும், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என பதிலளித்ததற்கு, முதலமைச்சர் "துரதிர்ஷ்டவசமான" சூழ்நிலையை கண்காணித்து வருவதாகவும், பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பாட்டீல் கூறினார்.
ஞானேஸ்வர பாட்டீலின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பூபேந்திர குப்தா,
சாக்கடைகளை சுத்தம் செய்வது பொதுமக்களின் பொறுப்பா, மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை அடையாளம் காண்பதும் பொதுமக்களின் வேலையா என்பதை ஞானேஷ்வர் பாட்டீல் தெளிவுபடுத்த வேண்டும். குடிநீரை சுத்தம் செய்வது கூட பொதுமக்களின் பொறுப்பு என்றால், அரசாங்கம் நமது வரிப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும். அரசு ஏன் வரி வசூலிக்கிறது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பாட்டீல் தனது கருத்தை தெளிவுப்படுத்தாவிட்டால், காங்கிரஸ் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
- நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.
- பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளரும், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காக முக்கிய பங்காற்றியவருமான மாதவ் காட்கில் காலமானார். அவருக்கு வயது 83.
வயது மூப்பு காரணமாக அவரது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் புனேவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு இயற்கை எய்தினார்.
2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழுவின் தலைவராக காட்கில் இருந்தார். இது 'காட்கில் கமிஷன்' எனப்படுகிறது.
இவர் தாக்கல் செய்த 'காட்கில் அறிக்கை' மேற்குத் தொடர்ச்சி மலையின் 75% பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியது. அங்குச் சுரங்கப் பணிகள் மற்றும் பெரிய கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கக் கோரியது.
காட்கில் அறிக்கை, இன்றுவரை சூழலியல் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
1986-ம் ஆண்டு இந்தியாவின் முதலாவது பயோஷ்பியர் ரிசர்வ் ஆன நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.
வனப்பகுதிகளைப் பாதுகாப்பதில் அங்கு வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்தியாவின் 'உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்' உருவாக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐநா-வின் உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்' உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) நீண்ட காலம் பேராசிரியராக காட்கில் பணியாற்றினார் .
சுமார் 215 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 6 முக்கியப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நீதா அம்பானி மும்பையில் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
- இந்த விழாவிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மஹீகா சர்மா இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மஹீகா சர்மாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அறிமுகம் செய்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணிகளின் உலகக்கோப்பை வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நீதா அம்பானி மும்பையில் நேற்று முன்தினம் இரவு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மஹீகா சர்மா இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்.

விழாவின் போது, அங்கு வந்திருந்த பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனிடம், ஹர்திக் பாண்டியா தனது காதலியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர்கள் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மாரத்தான் போட்டியில் 3-ம் இடம் பிடித்த நிலையில் மயங்கி விழுந்தார்.
- மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் வெல்ஜி என்ற இடத்தில் உள்ள பாரதி அகாடமி ஆங்கில பள்ளியில் விளையாட்டு தினம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
10-ம் வகுப்பு படித்த மாணவி ரோஷினி கோஸ்வாமி, மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். மாரத்தான் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 3-வது இடம் பிடித்தார். 3-வது இடம் பிடித்த ரோஷினியை பாராட்ட கூடியிருந்த அனைவரும் தயாராக இருந்தனர். அப்போது எல்லையை அடைந்ததும், அப்படியே மைதானத்தில் அமர்ந்து, மயங்கிய நிலைக்கு சென்றார். அருகில் இருந்த ஆசிரியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற 15 வயது மாணவி மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகள் உயிரிழந்தது குறித்து ரோஷினியின் தாயார் சுனிதா பென் கோஸ்வாமி கூறுகையில் "ரோஷினி இந்த நாள் நல்ல முறையில் தொடங்கினால். வழக்கமான நேரத்தில் எழுந்தார். சரியான உணவை உட்கொண்டார். டிபன் பாக்சில் மதிய உணவு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றார். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற என்னுடைய காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிச் சென்றாள். மதியம் அவர் இறந்து விட்டாள் என்ற இதயம் நொறுங்கும் செய்தியை பெற்றோம்" என கதறியபடி தெரிவித்தார்.
- கிராஜுவிட்டி தொகையாக ரூ. 10 லட்சம், மனைவி ரூபாலிக்கு கிடைத்துள்ளது.
- புத்தாண்டு அன்று இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசிவிட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் இறந்த மகனின் அரசு வேலை மற்றும் பணத்திற்காக மருமகளைக் மாமியார் கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
தானே மாவட்டம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த 60 வயதான லதாபாய் கங்குர்டே என்பவர், தனது மருமகள் ரூபாலியை (35) இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
லதாபாயின் மகன் விலாஸ் ரெயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2025 செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, கிராஜுவிட்டி தொகையாக ரூ. 10 லட்சம், மனைவி ரூபாலிக்கு கிடைத்துள்ளது.
மேலும் கருணை அடிப்படையில் வழங்கப்படும் ரெயிலவே வேலைக்காகவும் ரூபாலி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், லதாபாய் தனது 15 வயது பேரனுக்கு அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
மேலும், மருமகளுக்குக் கிடைத்த பணத்தை மாமியார் லதாபாய் கேட்டுள்ளார்.
இதற்கு மருமகள் மறுக்கவே, இதனால் ஆத்திரமடைந்த லதாபாய், தனது நண்பர் ஜெகதீஷ் (67) என்பவருடன் சேர்ந்து மருமகளைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
இருவரும் சேர்ந்து புத்தாண்டு அன்று இரவு ரூபாலியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு, உடலை அருகில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் வீசிவிட்டனர்.
அதன் பிறகு, எதுவும் தெரியாதது போல மருமகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் லதாபாய் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் லதாபாய் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மாமியார் லதாபாய் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் முதல் இடத்தில் உள்ளார்.
- வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
மும்பை:
ஐ.சி.சி. சார்பில் கடந்த ஆண்டில் அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தவர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் 32 இன்னிங்ஸில் 65 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.
இந்திய வீரரான அபிஷேக் சர்மா 21 இன்னிங்சில் 54 சிக்சர்களை அடித்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் 50 இன்னிங்ஸில் 54 சிக்சர்களும், இங்கிலாந்தின் ஹாரி புரூக் 45 இன்னிங்ஸில் 50 சிக்சர்களும், பாகிஸ்தானின் சாஹிப்சாதா பர்ஹான் 26 இன்னிங்ஸில் 45 சிக்சர்களும் அடித்து 3,4 மற்றும் 5வது இடத்தில் உள்ளனர்.
- மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- எதிர்க்கட்சி வேட்பாளர்களை ED, CBI மூலம் மிரட்டி பயமுறுத்துகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் வாபஸ் பெற்றதால், அக்கூட்டணி 68 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி வேட்பாளர்களை ED, CBI மூலம் மிரட்டி பயமுறுத்தி, அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றிகளை விலைக்கு வாங்க பாஜக முயற்சிக்கிறது என்றும் இதனை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று உத்தவ் சிவசேனா கட்சி காட்டமாக தெரிவித்துள்ளது.
- மும்பை- அகமதாபாத்தை இணைக்கும் வகையில் 508 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரெயில் திட்டம்.
- 8 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட இருக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரெயில் திட்டம் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் மலையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பல்கார் மாவட்டத்தில் 1.5 கி.மீ. தொலைவிலான சுரங்கப்பணி நிறைவடைந்துள்ளது. விஹார் மற்றும் பொய்சர் நிலையத்திற்கு இடையில் மலையை குடைந்து இந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவடைந்த 2-வது மிகப்பெரிய சுரங்கப்பணி நிறைவடைந்துள்ளது. முன்னதாக 5 கி.மீ. தூரம் கொண்ட தானே- பிகேசி இடையிலான சுரங்கப்பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. மொத்தமாக 5 சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மும்பை- அகமதாபத்தை இணைக்கும் 508 கி.மீ. தொலைவில் உள்ள புல்லட் ரெயில் குஜராத், மகாராஷ்டிரா, தாத்ரா அண்டு நகர் ஹவேலி வழியே செல்லும். இந்த திட்டம் நிறைவடைந்த பிறகு, மும்பை- குஜராத் இடையிலான பயணம் ஒரு மணி நேரம் 58 நிமிடங்களாக குறைக்கப்படும். இந்த திட்டம் ஜப்பானின் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
மலையை குடைந்து 8 சுரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 சுரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இது 6.05 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட இருக்கிறது. குஜராத்தில் 350 மீ. தூரததில் அமைய இருக்கிறது.
508 கி.மீ. தூரத்தில் 27.4 கி.மீ. சுரங்கம் வழியாக செல்லும். இதில் 21 கி.மீ. பூமிக்கு அடியில் தோண்டப்படும் சுரங்கப்பாதை ஆகும்.
இந்த மெகா திட்ம் சபர்மதி, அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பரூச், சூரத், பிலிமோரா, வாபி, பொய்சர், விரார், தானே, மும்பை பகுதிகளை இணைக்கும்.
- புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.
மும்பை சாந்தாகுரூஸ் கிழக்கு, கலினா பகுதியில் உள்ள ஜம்லிபாடா எனும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 42 வயது நபரும், 25 வயது பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப்பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப்பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்று காதலனும் சென்றுள்ளார். இருவரும் வீட்டில் இருந்தபோது, மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது. அப்போதும் அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அந்தப்பெண் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார்.
படுகாயமடைந்த அந்த நபர், வலியால் துடித்த நிலையிலும் அந்த பெண்ணிடமிருந்து தப்பித்து, உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது சகோதரர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக வி.என்.தேசாய் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும், அவர் மீது பாரதிய நியாய சன்கிதா சட்டப்பிரிவுகளின் கீழ், ஆபத்தான ஆயுதங்களை கொண்டு காயம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புனே மாநகராட்சியின் 34-வது வார்டுக்கு சிவசேனா சார்பில் உத்தவ் காம்ப்ளே, மச்சிந்திரா தவலே ஆகியோர் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவிக்க ஏ, பி விண்ணப்பங்களை வழங்கும். இந்த இருவருக்கும் அந்த வார்டில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப கடிதத்தை சிவசேனா கட்சி வழங்கி இருந்தது. இதனால் வேட்பு மனு தாக்கலின்போது வார்டு அலுவலகத்தில் இருவருக்கும் இடைேய கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் உத்தவ் காம்ப்ளே ஆத்திரமடைந்து மச்சிந்திரா தவலேயின் கையில் இருந்த கட்சி வழங்கிய அங்கீகார விண்ணப்ப கடிதத்தை பிடுங்கி கிழித்து வாயில் போட்டு விழுங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனா வேட்பாளர் உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, தேர்தல் பணியின் போது அரசு ஊழியரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக உத்தவ் காம்ப்ளே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
- முதலில் ஆடிய மும்பை அணி 50 ஓவரில் 444 ரன்களைக் குவித்தது.
- கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மும்பை:
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் எலைட் குரூப் சி போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கோவா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் சர்பராஸ் கான் ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டினார்.
கோவா பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நான்கு புறமும் சிதறடித்தார். அவர் 75 பந்துகளில் 14 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 157 ரன்களை குவித்தார்.
இறுதியில், மும்பை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 444 ரன்களைக் குவித்தது. சையது முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த சர்பராஸ் கான், இப்போது விஜய் ஹசாரேவிலும் தனது அதிரடியை தொடர்கிறார்.
445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கோவா அணி களமிறங்கியது. அந்த அணியின் அபினவ் தேஜ்ரானா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். தீப்ராஜ் கவோன்கர் 70 ரன்னும், லலித் யாதவ் 64 ரன்னும் சேர்த்தனர்.
இறுதியில், கோவா அணி 50 ஓவரில் 9 விக்கெட்க்கு 357 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
- தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.
- குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.
சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் அஜித் பவார் துணை முதல்வர் ஆனார்.
அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே மகாயுதியில் உள்ள பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.
2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், எதிரணியில் உள்ள அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம் குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.
பிம்ப்ரி-சின்ச்வாட் எப்போதும் பவார் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது. இந்நிலையில் குடும்பப் பிளவால் வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.






