என் மலர்
மத்தியப்பிரதேசம்
- ராம் லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி என்ற இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
- 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பிரதேசத்தில் அதானி குழுமத்தின் சுரங்கத் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலக்கரி எடுத்துச் செல்லும் கனரக லாரி ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் சிங்ரௌலி மாவட்டத்தில் நேற்று [வெள்ளிக்கிழமை] பிற்பகல் 3 மணியளவில் மாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமிலியா காட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.
ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி என்ற இருவர் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அந்த கனரக லாரி மோதி கவிழ்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இருவர் உயிரிழந்த செய்தியறிந்த உள்ளூர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 7 பேருந்துகள், 4 லாரிகள் ஆகியவற்றுக்கு தீவைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டக்காரர்கள் தொழிற்சாலை பகுதிக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அதற்குள் அங்கு வந்து அவர்களை கலைத்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
- அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர்.
மனைவி ஒருத்தர் தன் கணவனை தாண்டி வேறொரு நபருடன் உடல் ரீதியிலான உறவில் இல்லாமல் காதலிப்பது கள்ளக்காதல் ஆகாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி ஜி.எஸ். அலுவாலியா, "கள்ளக்காதல் என்பது பாலியல் உடலுறவை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார். தனது மனைவி வேறொருவரை காதலிப்பதால், அவளுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்ற கணவரின் வாதத்தை நிராகரித்தார்.
இவ்வழக்கில் குடும்ப நீதிமன்றம் மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சத் தொகையாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் தொடர்ந்த சீராய்வு மனுவை நீதிமன்றம் விசாரித்த போது நீதிபதி அலுவாலியா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
"ஒரு மனைவி உடல் ரீதியான உறவுகள் இல்லாமல் வேறொருவர் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும், மனைவி கள்ளக்காதல் கொண்டிருக்கிறாள் என்று கூறுவதற்கு அதுவே போதுமானதாக இருக்க முடியாது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், "கணவரின் சொற்ப வருமானம் இடைக்கால ஜீவனாம்சத் தொகையை மறுக்க ஒரு அளவுகோலாக இருக்க முடியாது" என்றும் நீதிமன்றம் கூறியது. விண்ணப்பதாரர் தனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய தகுதியற்றவர் என்பதை முழுமையாக அறிந்தே ஒரு பெண்ணை மணந்திருந்தால், அதற்கு அவரே பொறுப்பு.
ஆனால் அவர் ஒரு திறமையான நபராக இருந்தால், அவர் தனது மனைவியை பராமரிக்க அல்லது இடைக்கால ஜீவனாம்சத் தொகையை செலுத்த சம்பாதிக்க வேண்டும்.
- மணமகனும், மணமகளும் பயந்து ஓடிச்சென்று ஒரு காரில் புகுந்து உள்பக்கமாக பூட்டி கொண்டனர்.
- சிறுத்தை தாக்கியதில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், புத்தேஷ்வர் சாலையில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண விருந்து நிகழ்ச்சிகள் தடபுடலாக நடந்து வந்தது. இரவு 11 மணி அளவில் திருமண மண்டபத்தின் பின்புறம் இருந்து அழையா விருந்தாளியாக ஒரு சிறுத்தை புகுந்தது.
இது திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியது. சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கும், இங்கும் ஓட தொடங்கினர். இதனால் திருமண மண்டபமே பரபரப்பானது.
அங்கு இருந்த மணமகனும், மணமகளும் பயந்து ஓடிச்சென்று ஒரு காரில் புகுந்து உள்பக்கமாக பூட்டி கொண்டனர். மணமக்களின் குடும்பத்தினரும் பாதுகாப்புக்காக அங்கிருந்த வாகனங்களில் பதுங்கி கொண்டனர். இதனால் அனைவரும் உயிர்தப்பினர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் வனத்துறை குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பல மணிநேர போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவு 2 மணிக்கு சிறுத்தை பிடிபட்டது. அப்போது சிறுத்தை தாக்கியதில் வனத்துறை அதிகாரி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுத்தை புகுந்ததன் காரணமாக மணமக்களும், அவரது உறவினர்களும் 5 மணி நேரத்துக்கும் மேலாக காரில் பதுங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறுத்தை பிடிபட்ட பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் ''லக்னோவில் ஒரு திருமண மண்டபத்தில் சிறுத்தை நுழைந்த செய்தி கவலை அளிக்கிறது. பா.ஜ.க. அரசாங்கத்தில் காடுகளில் மனித அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இதனால் காட்டு விலங்குகள் உணவு தேடி நகரங்களுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக சாதாரண மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மாநில அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? அல்லது இது ஒரு சிறுத்தை அல்ல, பெரிய பூனை என மூடி மறைக்குமா என்று தெரியவில்லை'' என கூறியுள்ளார்.
- கல்லூரி நிர்வாகிகள், பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டுமே பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.
- இந்த சம்பவம் சுகாதாரம் தொடர்பானது என்பதால் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில் தேசிய அளவிலான மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர்களுக்கு பாத்ரூம் தண்ணீரை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், கழிப்பறை குழாயில் இருந்து வரும் தண்ணீரை சமையல் செய்யும் ஊழியர்கள் பயன்படுத்துகின்றனர்.
நாடு முழுவதும் இருந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்ட தேசிய அளவிலான மருத்துவ மாநாடு பிப்ரவரி 6-ந்தேதி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, பங்கேற்பாளர்களுக்கு இந்த உணவு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், "பாத்திரங்களை கழுவுவதற்கு மட்டுமே பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது" என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சுகாதாரம் தொடர்பானது என்பதால் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சஞ்சய் மிஸ்ரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உணவு தயாரிப்புக்கு பாத்ரூம் தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை என்று கூறினாலும், இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ ஆய்வு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது.
- ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் மினி பஸ் வந்துகொண்டிருந்தது.
- படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ந்தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.
இந்நிலையில் மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பிய ஐதராபாத்தை சேர்த்த பக்தர்கள் வந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நாச்சரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மகா கும்பமேளாவில் வழிபாடு செய்தபின்னர் மினி பஸ்ஸில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சிஹோரா பகுதிக்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8:30 மணியளவில் அவர்களது மினி பஸ் வேகமாக வந்துகொண்டிருந்தது.
அப்போது தவறான பாதையில் எதிரே வந்த சிமென்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது மினி பஸ் மோதியுள்ளது. இதில் மினி பஸ்ஸில் வந்த பத்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மேலும் 5 பேரை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரினிதா உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
- நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலங்களில் மாரடைப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ம.பி. மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பரினிதா ஜெயின் என்ற 23 வயது இளம்பெண் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற தன் உறவினர் சகோதரியின் திருமண விழாவுக்கு சென்றார். அங்கு இசைக்கப்பட்ட பாலிவுட் பாலட்களுக்கு பரினிதா உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட 'ஹல்தி' விழாவின் போது பரினிதா மேடையில் நடனமாடியதை காட்டும் வீடியோ சமூக வலைதளகங்களில் அதிகம் பகிரப்படுகிறது. உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.
இதையடுத்து மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே விழாவில் கலந்து கொண்ட மருத்துவர்களான குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு CPR செய்ய முயன்றனர். எனினும், அவர் சுயநினைவுக்கு வரவில்லை.
இதன்பிறகு உடனடியாக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். எம்.பி.ஏ. பட்டதாரியான பரினிதா, இந்தூரின் தெற்கு துகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். முன்னதாக பரினிதாவின் தம்பிகளில் ஒருவரும் 12 வயதில் மாரடைப்பால் இறந்தார்.
- அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் உள்ள குடிசையில் சிறுமி வசித்து வந்தாள்.
- சிறுமியுடன் தொடர்பு கொள்ள சைகை மொழி நிபுணர்களை அழைத்து வந்தோம்.
மத்தியப் பிரதேசத்தில் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காது கேளாத மற்றும் பேச்சு குறைபாடுள்ள 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
நர்சிங்கர் நகரில் உள்ள அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் உள்ள ஒரு குடிசையில் வசித்து வந்த சிறுமி, பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போனாள். மறுநாள் ஒரு காட்டில் பலத்த காயமடைந்த நிலையில் அவள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நரசிங்கர் துணைப்பிரிவு காவல் அதிகாரி உபேந்திர பாட்டி கூறுகையில், சிறுமிக்கு அதிக இரத்தபோக்கு ஏற்பட்டிருந்தது. முதலில் நரசிங்கரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கும் சிறுமி கொண்டுசெல்லப்பட்டாள். அங்கு அவளுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன
வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட சிறுமி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்தவரை அடையாளம் காணும் வகையில், சிறுமியுடன் தொடர்பு கொள்ள சைகை மொழி நிபுணர்களை போலீசார் அழைத்ததாகவும், ஆனால் உடலின் உள்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சிறுமி மயக்கமடைந்தாள். குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கான தடயங்களை போலீசார் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை பிற்பகல் நரசிங்கரில் மேற்கொள்ளப்பட்டன.
- லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
- இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில், இந்து பெண்ணை திருமணம் செய்யவிருந்த முஸ்லிம் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் பிபாரியாவைச் சேர்ந்த இந்து பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக போபாலில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்துள்ளார்.
அப்போது லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காரின் பேனட் மீது நாயை அமர வைத்து அதன் முன்பு கேக் வைத்து வெட்டுகின்றனர்.
- வீடியோ முடிவில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் தங்கள் பிறந்தநாளை வித்தியாசமாகவும், விமர்சையாகவும் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அன்ஷூ சவுகான் என்ற பயனர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், இளைஞர்கள் தெருநாய்க்கு பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய காட்சிகள் உள்ளது. அதில், இளைஞர்கள் ஒரு காரில் தெருநாய் ஒன்றுக்கு மலர் மாலைகள் அணிவித்து கொண்டு வருகின்றனர். பின்னர் காரின் பேனட் மீது நாயை அமர வைத்து அதன் முன்பு கேக் வைத்து வெட்டுகின்றனர். அந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் ஆரவாரம் செய்து வந்த வாலிபர்களும் அவர்களுடன் சேர்ந்து தெருநாயின் பிறந்தநாளை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடுகின்றனர்.
மேலும் தெருநாய் மீது மலர்களையும் தூவுகின்றனர். வீடியோ முடிவில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மற்றும் கருத்துக்களை பெற்றது. ஒரு பயனர், இது பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால் கேக்குகள் மற்றும் இனிப்புகள் நாய்களுக்கு நல்லதல்ல. தயவு செய்து கவனமாக இருங்கள் என பதிவிட்டிருந்தார்.
- மிராஜ் 2000 விமானம் பயிற்சியின் போது, சிஸ்டம் கோளாறால் விபத்துக்குள்ளானது.
- விபத்துக்கான காரணத்தை அறிய இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
மத்தியபிரதேச மாநிலம் ஷிவ்புரியில் ராணுவ பயிற்சி விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் கீழே விழுவதற்குள் விமானிகள் வெளியேறியதால் உயிர் தப்பினார். ஆனாலும் விமானிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப்படை பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானம், சிவ்புரி (குவாலியர்) அருகே இன்று வழக்கமான பயிற்சியின் போது, சிஸ்டம் கோளாறால் விபத்துக்குள்ளானது. விமானிகள் இருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணத்தை அறிய இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
- நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- பணம்- நகை யாருக்கு சொந்தமானது என தெரியவில்லை.
மத்திய பிரதேச மாநிலம் போபால், இந்தூர், குவாலியர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
3 மாவட்டங்களில் மொத்தம் 52 இடங்களில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது ஏராளமான நகைகள், முக்கிய ஆவணங்கள், மொபைல்போன்கள் கைப்பற்றப்பட்டது. சோதனை நடந்த நிறுவனங்களின் வங்கி லாக்கரை திறந்து சோதனை செய்த போது அதில் இருந்த ரூ. 5 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தலைநகர் போபால் அருகே மண்டோரா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு வாகனம் அனாதையாக நின்று கொண்டிருந்தது.
அந்த வாகனம் மீது சந்தேகம் அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக 10 கோடி ரூபாய் ரொக்கப்பணம், மற்றும் 52 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நகை மற்றும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணம்- நகை யாருக்கு சொந்தமானது என தெரியவில்லை. வருமான வரி சோதனைக்கு பயந்து அந்த ரூ. 10 கோடி பணம் மற்றும் 52 கிலோ நகைகளை வாகனத்தில் மறைத்து வைத்து அதிக நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் நிறுத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், மத்தியப் பிரதேச போக்குவரத்துத் துறையின் முன்னாள் கான்ஸ்டபிளான சவுரப் சர்மா, அமலாக்க இயக்குநரகம் (ED), வருமான வரித் துறை (IT), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மற்றும் லோக்ஆயுக்தா காவல்துறையை உள்ளடக்கிய விசாரணையின் மையத்தில் உள்ளார்.
ஒரே ஒரு அதிகாரி மீது நடத்தப்பட்ட ஊழல் விசாரணையில், மத்தியப் பிரதேசம் முழுவதும் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் உள்ளட்டேரை அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விவாரத்தில் குழப்பத்தை அதிகரிக்கும் வகையில், நீதிமன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து லோக்ஆயுக்தாவின் அறிக்கையில் பெரும் முரண்பாடுகளை வெளிப்படுத்தின.
ஆரம்பத்தில் ரூ.7.98 கோடி ரொக்கம் மீட்கப்பட்டதாகக் கூறிய நிலையில், டிஎஸ்பி-நிலை அதிகாரி ஒருவர் பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.55 லட்சம் மட்டுமே என்றும், அதனுடன் நகைகள் மற்றும் வெள்ளி என்றும் கூறினார்.
இருப்பினும், இந்த வழக்கை பல அமைப்புகள் விசாரித்த போதிலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகையை உரிமை கோர யாரும் முன்வரவில்லை. இந்த கார் சர்மாவின் நெருங்கிய கூட்டாளியான சேதன் சிங் கவுருக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது, ஆனால் கவுர் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து, இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு ஓட்டுநருக்கு வாகனத்தை கடனாகக் கொடுத்ததாகக் கூறினார்.
சோதனைகள் நடந்த இரவில் சர்மாவின் வீட்டிற்கு அருகில் காரை சிசிடிவியில் பதிவாகியுள்ளன. சர்மாவின் நிதி பரிவர்த்தனைகள் துபாய், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடனான தொடர்புகளைக் குறிக்கின்றன.
ரூ.100 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் வெளிவந்துள்ளன, இதில் 52 மாவட்டங்களில் போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், "மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.
இப்போதைக்கு, சௌரப் சர்மா மற்றும் அவரது கூட்டாளிகளான சேதன் கவுர் மற்றும் ஷரத் ஜெய்ஸ்வால் ஆகியோர் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், தங்க நகைகள் யாருடையது என்கிற முக்கிய கேள்விகளுக்கு பதில் கிடைத்தபாடில்லை.
- இறுதிச் சடங்குக்கு வெளியூரில் வசித்து வந்த அண்ணன் கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார்.
- இதனால் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் தந்தையின் உடலை இரண்டாக வெட்டி தனித்தனியே இறுதிச்சடங்கை நடந்த மகன்கள் சண்டையிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் திகம்கர் மாவட்டம், லிதோரடால் கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் கோஷ் (84). இவர் தனது இளைய மகன் தேஷ்ராஜுடன் வசித்து வந்தார். மூத்த மகன் கிஷன் வெளியூரில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தயானி சிங் நேற்று முன் தினம் ( ஞாயிற்றுக்கிழமை ) உயிரிழந்தார்.
இறுதிச் சடங்குக்கு வெளியூரில் வசித்து வந்த அண்ணன் கிஷன் தம்பியின் வீட்டுக்கு வந்துள்ளார். மூத்த மகன் என்ற அடிப்படையில் தந்தையின் இறுதிச் சடங்களை தான்தான் செய்வேன் என தம்பியிடம் கிஷன் கூறினார். ஆனால் தம்பியோ தானே இறுதிச் சடங்கு செய்வேன் என அடம்பிடித்தார். இதனால் அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டது.
ஏற்கனவே மதுபோதையில் வந்திருந்த அண்ணன் கிஷன், தந்தையின் உடலை வெட்டி அதில் பாதியை தான் இறுதிச் சடங்கு செய்ய தர வேண்டும் என்றும் மீதி பாதி உடலை வைத்து தம்பியை இறுதிச் சடங்கு செய்துகொள்ளுமாறும் தகராறு செய்யத்தொடங்கினார்.
சகோதரர்களின் சண்டையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மூத்த மகன் கிஷனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இளைய மகன் தேஷ்ராஜ் தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தார்.






