என் மலர்
இந்தியா
- நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
- 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.
அப்போது அவர், 19 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
விவாதங்கள் மீது பதிலுரை வழங்கி அமைச்சர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-
கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
- மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள அங்கித் விரும்பியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் மனைவியின் தங்கையை திருமணம் செய்வதற்காக நண்பனின் உதவியுடன் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித் குமார் என்பவர் கிரண் (30) என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
மார்ச் 8 ஆம் தேதி அங்கித் தனது மனைவியை தனது மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் பெட்ரோல் போடும் நேரத்தில் சாலையோரம் இருந்த கிரண் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக கணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், காரின் உரிமையாளர் அங்கித்தின் நண்பர் சச்சின் என கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, விபத்தில் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், அங்கித் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. ஆகவே தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், இதற்கு மனைவியின் தங்கை மறுப்பு தெரிவித்ததால் மனைவியை கார் ஏற்றி கொன்றேன் என்று அங்கித் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
- திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா ஈரோடு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர் சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 காவல் அதிகாரிகள் பணியிட் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜாகீர் உசேன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமனம், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா ஈரோடு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர் சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரிகிரணம் பிரசாத் மயிலாப்பூர் நலப்பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது.
- நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 30 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 77,984.38 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 78,385.79 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக சென்செக்ஸ் இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 77,745.63 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 78,741.69 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்ந்து 78,017.19 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 20 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 10 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சற்று உயர்வை சந்தித்தது.
நேற்று நிஃப்டி 23,658.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,762.75 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக நிஃப்டி இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 23,601.40 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,869.60 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக நிஃப்டி 10.30 புள்ளிகள் உயர்ந்து 23,668.65 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 30 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 20 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.
தொடர்ந்து 7 ஆவது நாளாக ஏற்றம் கண்டு வரும் சென்செக்ஸ் 0.04 சதவீதமும் நிஃப்டி 0.04 சதவீதமும் உயர்ந்து இன்று வர்த்தகம் ஆனது.
- இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
- இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நிதிக்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளின் ஆட்சியல்ல இது; தடைக்கற்களை உடைத்தெறியும் தடந்தோள்கள் கொண்ட திராவிட மாடல் ஆட்சி இது!
இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!
தமிழ் காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட - தமிழினம் உயர - மாநில சுயாட்சியை உறுதிசெய்ய விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்று திகார் சிறைச்சாலை.
- இந்த சிறைச்சாலை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
புதுடெல்லி:
திகார் சிறைச்சாலை 1958-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான இந்த சிறைச்சாலை, 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், முதல் மந்திரி ரேகா குப்தா டெல்லி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
திகார் சிறைச்சாலை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம் கொண்டு வரப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆலோசனை சேவைகளுக்காக ரூ.10 கோடியை ஒதுக்கப்படும்.
குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இந்தச் சிறைச்சாலை இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- 2017-க்கு முன்பு மாநிலத்தில் கலவரங்கள் அடிக்கடி நடந்தது.
- இன்று, உத்தரபிரதேசம் தன்னிறைவு பெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் முந்தைய அரசாங்கம் கடைபிடித்த ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாஃபியா என்ற கொள்கையை மாற்றியமைத்து ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்று கொள்கையை பாஜக கொண்டு வந்ததாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
கோரக்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் பேசியயோகி ஆதித்யநாத், " 2017 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் உத்தரபிரதேசத்தை மாற்றியமைத்துள்ளது.
முன்பு, உத்தரபிரதேசம் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. வேலையின்மை தலைவிரித்தாடியது. இன்று, உத்தரபிரதேசம் தன்னிறைவு பெற்றுள்ளது. நாட்டின் முன்னணி மாநிலமாக உத்தரபிரதேசம் மாறியுள்ளது.
2017-க்கு முன்பு மாநிலத்தில் கலவரங்கள் அடிக்கடி நடந்தது. முந்தைய அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாஃபியாவைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கியது. அவர்கள் நில அபகரிப்பு, சட்டவிரோத சுரங்கம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களின் அடியாட்கள் வியாபாரிகள் மற்றும் பெண்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்தனர்.
"நாங்கள் இந்த மாஃபியாக்களை ஒழித்து கட்டினோம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாஃபியா என்ற கொள்கையை மாற்றியமைத்து ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்று கொள்கையை அறிமுகப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினோம்.
ஒரு காலத்தில் முதலீட்டாளர்களால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம், இப்போது நாட்டின் சிறந்த முதலீடு செய்யும் மாநிலமாக மாறியுள்ளது.
முன்பு சாலைகள் மோசமான நிலையில் இருந்தன. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான விரைவுச் சாலைகளைக் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான்.
இந்தியாவின் மிக விரிவான ரெயில்வே நெட்வொர்க், அதிக எண்ணிக்கையிலான மெட்ரோ ரெயில் நகரங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன. உத்தரபிரதேசம் நாட்டில் உணவு தானிய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
- டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து துறைக்கு 12952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
26 வருடத்திற்குப் பிறகு டெல்லி சட்டமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் ரேகா குப்தா பெண்களுக்கு அதிகாரமளித்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பெண் எம்.எல்.ஏ. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றார்.
நிதித்துறையை வைத்திருக்கும் ரேகா குப்தா இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள்:-
* டெல்லியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மூலதன செலவு 28 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* யமுனை நதியை சுத்தம் செய்ய 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 40 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பரவலாக்குவதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே ஆற்றில் நுழைவதை உறுதி செய்யப்படும்.
* பழைய கழிவு நீர் குழாய்களை மாற்றுவதற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* சுத்தமான குடிநீர் மற்றும் துப்புரவு தொடர்பான திட்டங்களுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* சுகாதாரத்துறைக்கு 6874 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* போக்குவரத்து துறைக்கு 12952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் ஊழலை தடுப்பதற்கு பிங்க் கலர் டிக்கெட் வழங்குவதற்குப் பதிலாக கார்டு வழங்கப்படும்.
* மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்குவதற்காக 5100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* பெண்கள் பாதுகாப்பிற்காக டெல்லியில் கூடுதலாக 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
* 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் 1,200 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். இதற்கான 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* நரேலா பகுதியில் புதிய கல்வி முனையம் அமைக்கப்படும்.
* 40 கோடி ரூபாயில் பும்மன்ஹெரா பகுதியில் நவீன கோசாலைகள் அமைக்கப்படும்.
பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:-
இந்த பட்ஜெட் நாட்டின் தலைநகரான டெல்லியின் வளர்ச்சிக்கான முதல்படி. கடந்த பத்தாண்டுகளில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் டெல்லி பின்தங்கியுள்ளது. முந்தைய அரசாங்கம் தேசிய தலைநகரின் பொருளாதார ஆரோக்கியத்தை கரையான்களைப் போல அழித்துவிட்டது.
இது வெறும் பட்ஜெட் மட்டுமல்ல. டெல்லியின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வை. இந்த பட்ஜெட்டில் சில இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். இப்போது டெல்லி வெற்றி வாக்குறுதிகள் கொண்டதாக இல்லாமல் நம்பிக்கையின் நகரமாக இருக்கும் ரேகா குப்தா தெரிவித்தார்.
இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.
கடந்த முறை ஆம் ஆத்மி தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பை விட இந்த முறை மொத்த பட்ஜெட் மதிப்பு 31.5 சதவீதம் அதிகமாகும்.
- 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தக் கோரி போராட்டம் நடந்தது.
- இதில் கேரள காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க அவர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரியும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், சசி தரூர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பிற கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிரியங்கா காந்தி, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மில்லியன் கணக்கான குடும்பங்களை வாழ்வாதாரமின்றி விட்டுச் சென்றுள்ளது. வறுமை மற்றும் துன்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியில் உடனடியாக கவனம் செலுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊதியம் இல்லாததால் வாழ்க்கையை நடத்த போராடும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக விடுவித்தல், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க ஊதியத்தை அதிகரித்தல், வேலை நாட்களை 150 நாளாக அதிகரித்தல் ஆகியவற்றை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
- 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலி பதவியிடங்கள் உள்பட 133 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.
- இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேரளாவில் மத்திய உளவுத்துறை துறை (IB) இளம் பெண் அதிகாரி ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (திங்கள்கிழமை) காலை, திருவனந்தபுரத்தில் உள்ள பெட்டா ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.
பெட்டா காவல்துறையினரின் கூற்றுப்படி, மேகா, பத்தனம்திட்டாவில் உள்ள கூடல் பகுதியை சேர்ந்தவர். பெட்டா அருகே பேயிங் கெஸ்ட்டாக வசித்து வந்தார். அவரது மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
ஒரு பெண் ரெயில் தண்டவாளத்தில் குதிப்பதைக் கண்டதாக ரெயில் லோகோ பைலட் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேகாவின் பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சவுக்கு சங்கரின் வீடுசூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடி கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது வீடு சூறையாடப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், போலீஸ் கமிஷ்னர் அருணும் தான் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சனகர் குற்றசாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "சவுக்கு சனகர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தி அவர் பேசியதை ஏற்கமுடியாது. சவுக்கு சங்கர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். சவுக்கு சங்கருக்கு வேண்டியவரை காங்கிரஸ் தலைவராக்க இதனை அவர் செய்கிறார். அவரது வீட்டில் கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கட்டும்" என்று தெரிவித்தார்.






