என் மலர்tooltip icon

    இந்தியா

    • குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்து அசத்தினார்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்தது.

    இதற்கிடையே, ஆட்டத்தின் 11வது ஓவரில் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

    இந்நிலையில், பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் 19வது முறையாக டக் அவுட்டாகி ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

    • 27ம் தேதி முதல் ஈரப்பதம் இல்லாத சூழல் உள்ளதால் வெயில் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
    • வேலூரில் வரும் 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    தமிழகத்தில் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    27ம் தேதி முதல் ஈரப்பதம் இல்லாத சூழல் உள்ளதால் வெயில் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

    குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும்படி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    • ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
    • பாரத ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன்.

    ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம் வரலாறாகிவிட்டு என மத்திய உள்துறை அமைச்சர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஹரியத்தின் இரண்டு அமைப்புகளான ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.

    பாரத ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இதைபோன்று அனைத்து அமைப்புகள் (குழுக்கள்) முன்வந்து பிரிவினைவாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    வளர்ந்த, அமைதியான மற்றும் ஒன்றுபட்ட பாரதத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் 2025 சீசனின் 5வது போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
    • இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது.

    குஜராத் டைட்டன்ஸ்:

    சுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா, சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷித் கான், காகிசோ ரபாடா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    ஷெர்பேன் ரூதர்போர்டு, கிளேன் பிலிப்ஸ், இஷாந்த் சர்மா, அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர்.

    பஞ்சாப் கிங்ஸ்:

    பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யான்ஷ் ஷெட்ஜ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், சாஹல்.

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    நேஹல் வதேரா, பிரவீன் துபே, வைஷாக், ஹர்பிரித் பரார், விஷ்ணு வினோத்.

    • யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
    • பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம்.

    ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) சட்டம் 2017, திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் என குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    மக்கள் மாநாட்டு கட்சி உறுப்பினர் சஜாத் கானி லோன், இந்த மசோதாவை நிறைவேற்றியது, சட்டமன்றத்தால் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசம் என அங்கீகரிப்பதாகிவிடும் விமர்சித்தார்.

    இதற்கு பதில் அளித்து முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

    யூனியன் பிரதேசம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். இதனால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. துரதிருஷ்டவசமாக, பாராளுமன்றத்தில் நம்முடைய மாநில அந்தஸ்தை திரும்பப்பெறும் வரை, நாம் தொடர்ந்து யூனியன் பிரதேசமாகத்தான் இருப்போம். எனவே, இதை அரசியலாக்க வேண்டாம்.

    ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும். Inshallah, அதை மீட்டெடுப்போம். யூனியன் பிரதேசம் என்ற வார்த்தையை நீக்குவது நம்முடைய யதார்த்தத்தை மாற்றாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் யூனியன் பிரதேசம்தான். இந்த அரசாங்கம் யூனியன் பிரதேசமாக ஆட்சி செய்கிறது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை- கேரளமாநில எம்.பி.
    • 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால் வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்- கனிமொழி எம்.பி.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் கிராமப்புற எழை மக்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. மக்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்குகிறது. ஆனால், ஊதியத்தை விடுவிக்காமல் பல மாதங்கள் நிலுவையில் வைத்துள்ளதாக மத்திய அரசு மீது தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க அரசுகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

    இன்று கேரள மாநில எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

    இது தொடர்பாக இன்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அவர் பேசும்போது "இத்திட்டம் தேவையை அடிப்படையாக கொண்டது. 15 நாட்களுக்கு மேல் நிதி விடுவிக்கவில்லை என்றால், தொழிலாளர்களுக்கு வட்டியுடன் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

    இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் என மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

    காங்கிரஸ் எம்.பி. ஆதூர் பிரகாஷ் பேசுகையில் "ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் பெறவில்லை. இந்த திட்டத்தின் கீழ் 811 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. பாராளுமன்ற நிலைக்குழு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க பரிந்துரை செய்துள்ளது. நிலுவையில் உள்ள தொகையை அரசாங்கம் தாமதமின்றி விடுவிக்குமா?" என்றார்.

    இதற்கு மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அஅச்சர் சந்திர சேகர் பெம்மாசானி பதில் அளித்து கூறியதாவது:-

    கடந்த வருடம் கேரளா இத்திட்டத்தில் 3500 கோடி ரூபாய் பெற்றுள்ளது. பணத்தை விடுவிப்பதற்கான செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலுவையில் இருக்கும் நிதி இன்னும் சில வாரங்களில் விடுவிக்கப்படும்.

    சட்டத்தின் அடிப்படையில், நிதி விடுவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், மாநில அரசு முதலில் ஊதியம் வழங்கும். பின்னர் மத்திய அரசு நிதியை விடுவிக்கும். தமிழ்நாடு ஏற்கனவே 7300 கோடி ரூபாய் பெற்றுள்ளது. 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடும்போது 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு 10 கோடி ரூபாய்க்கு மேல் பெறுகிறது. பாரபட்சம் என்பதற்கு இடமில்லை" என்றார்.

    • புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
    • சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை மேம்படுத்த 60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.

    தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலுரைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன.

    கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ரூ.1564 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

    நாய்க்கடி பிரச்சினைக்கு தீர்வு காண, அனைத்து நகரங்களிலும் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மானியக் கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னும் மற்ற பெருநகரங்களை விட சென்னையில் சொத்து வரி குறைவாகவே உள்ளது. 1000 சதுர அடிக்கு மும்பை - ரூ.10271, கொல்கத்தா - ரூ.5850, பெங்களூர் - ரூ.5783, டெல்லி - ரூ.1302, சென்னை - ரூ.570, மதுரை - ரூ.484, கோவை - ரூ.340ஆக சொத்து வரி உள்ளது.

    2018-60 50%, 100%, 200% என சொத்து வரிகளை உயர்த்தியது அதிமுக, ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு 25%, 50%, 100% என்ற அளவில் போடுங்கள் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்

    நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உடன் ஊரகப்பகுதிகள் இணைக்கப்படும் போதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எந்த விதத்திலும் தடைபடாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    காவிரியை ஆதாரமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் .

    ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 31 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

    குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, நகர அமைப்பு என எண்ணற்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை மேம்படுத்த 60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.

    புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

    வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து செல்லும் சாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

    ரூ.95 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களின் தடுப்புச் சுவரை உயர்த்தவும், குப்பைகள் கொட்ட முடியாத அளவுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை.

    நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

    ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    ரூ.60 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.

    ரூ.45 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.

    ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.

    ரூ.60 கோடி மதிப்பீட்டில் கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை இறைச்சிக் கூடங்கள் மேம்படுத்தப்படும்.

    பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகள் உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை.
    • மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு.

    நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.

    அப்போது, அம்மா உணவகங்கள் குறித்து பேசிய அவர், " எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் நிறுத்தப்படவில்லை. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மழைக்காலத்தில் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.

    • தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை
    • மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததை சுட்டிக்காட்டினார்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார். சிவசேனாவின் இருந்த ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவிக்கு தாவிய ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா விமர்சித்திருந்தார்.

    ஆனால் அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர்.

    போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மேலும் குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜாராக 1 வார காலம் குணால் கம்ரா அவகாசம் கேட்டுள்ளார்.

    காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது ஷிண்டேவுடன் கூட்டணியில் உள்ள மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததையும் குணால் கம்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.

    அதோடு நிற்காமல் தனது ஸ்டூடியோவை சேனா தொண்டர்கள் அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள குணால் கம்ரா அவர்களை கிண்டல் செய்து பாடல் ஒன்றையும் பாடி மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளார். தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  

    • கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    • பிஜு ஜனதா தள கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா சட்டசபை இன்று கூடியதும் சமீபத்தில் இறந்த எம்.எல்.ஏ தேபேந்திர சர்மாவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    அதன்பின், சபையின் மையப்பகுதிக்குள் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.

    கடந்த 9 மாதத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

    பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் எஸ்.டி, எஸ்.சி மற்றும் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பி.ஜே.டி. எம்.எல்.ஏக்கள் மாநில அரசிடம் உத்தரவாதம் கோரினர்.

    தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோஷங்கள் எழுப்பியும், பிஜேடி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் பல முறை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி ராமச்சந்திர கடாம், சாகர் சரண் தாஸ், சத்யஜித் கோமாங்கோ, அசோக் குமார் தாஸ் உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    • நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
    • 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.

    நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார்.

    அப்போது அவர், 19 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    விவாதங்கள் மீது பதிலுரை வழங்கி அமைச்சர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

    கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும், பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.
    • மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள அங்கித் விரும்பியுள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் மனைவியின் தங்கையை திருமணம் செய்வதற்காக நண்பனின் உதவியுடன் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அங்கித் குமார் என்பவர் கிரண் (30) என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது வரை குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

    மார்ச் 8 ஆம் தேதி அங்கித் தனது மனைவியை தனது மாமியார் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் பெட்ரோல் போடும் நேரத்தில் சாலையோரம் இருந்த கிரண் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக கணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், காரின் உரிமையாளர் அங்கித்தின் நண்பர் சச்சின் என கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, விபத்தில் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில், அங்கித் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை. ஆகவே தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், இதற்கு மனைவியின் தங்கை மறுப்பு தெரிவித்ததால் மனைவியை கார் ஏற்றி கொன்றேன் என்று அங்கித் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×