என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
- ஐபிஎல் 2025 சீசனின் 5வது போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
- இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத்:
ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது.
குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா, சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷித் கான், காகிசோ ரபாடா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
ஷெர்பேன் ரூதர்போர்டு, கிளேன் பிலிப்ஸ், இஷாந்த் சர்மா, அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர்.
பஞ்சாப் கிங்ஸ்:
பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யான்ஷ் ஷெட்ஜ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், சாஹல்.
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
நேஹல் வதேரா, பிரவீன் துபே, வைஷாக், ஹர்பிரித் பரார், விஷ்ணு வினோத்.






