search icon
என் மலர்tooltip icon

    ஜெர்மனி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
    • பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து அனுமதி.

    ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

    ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் செனட்டின் புகார் அலுவலகத்தில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க கூடாது. விருப்பப்பட்டால் ஆண்கள் போன்று பெண்களும் மேலாடையின்றி குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக அனுமதி கிடைத்துள்ளது. அவருக்கு மட்டுமல்ல பெர்லின் நகரில் பெண்கள் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து, பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இனி மேலாடையின்றி குளிக்க உரிமை பெற்றுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த அனுமதி எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் இல்லை.

    இருப்பினும், இந்த அனுமதி வியப்பை தந்தாலும், இந்த முடிவிற்கு பலர் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

    • தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியா துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
    • ஜெஹோவாவின் சாட்சி மையம் என்பது அகிம்சையைப் பிரசங்கிக்கும் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ இயக்கம்.

    ஜெர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஜெஹோவாவின் சாட்சி மையத்தின் வாராந்திர பைபிள் படிப்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதனால், ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் மிக ஆபத்துக்கான எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தேவாலயத்தில் ஒரு மதக் கூட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், குடியிருப்பு வாசிகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    ஜெஹோவாவின் சாட்சி மையம் என்பது அகிம்சையைப் பிரசங்கிக்கும் ஒரு அமெரிக்க கிறிஸ்தவ இயக்கம் ஆகும். உயிரிழந்தவர்களில் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது.
    • ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    பெர்லின்:

    ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து வருகிறது.

    ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த மாத இறுதியில் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

    ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார். இந்தப் பயணத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன். இந்த முக்கிய விஷயத்தில் தனிப்பட்ட முறையில் நானே செயல்படுவேன் என அதிபர் ஸ்கால்ஸ் கூறினார். இதன்பின், நாடு திரும்பிய அவர் இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். இதில், வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அதிபர் பைடனை நேரில் சந்தித்துப் பேசினார்.

    சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகள், ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்க கூடும். ஆனால், அதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடும் வகையில் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்ட ஜெர்மனி அதிபர் ஸ்கால்ஸ் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், சீனா அப்படி செய்யாமல் அதில் இருந்து விலகி இருக்கும் என்றே நான் நேர்மறையாக எண்ணுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

    ஒருவேளை ரஷியாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கினால் அந்நாடு மீது தடை விதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதுபோன்று நடக்கக்கூடாது என நாங்கள் தெளிவுப்பட கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை வெற்றி பெறும் என்று நல்ல முறையிலேயே எண்ணுகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி, மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் சீனா அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.
    • குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது என தூதர் தகவல்

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷியா, தன் நாட்டு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது.

    ரஷியாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது.

    உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், எந்த நாட்டிடம் இருந்து நல்ல ஒப்பந்தம் கிடைக்கிறதோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் கூறியதாவது:-

    ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது, எங்கள் வர்த்தகம் அல்ல என்பதை நான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளேன். அது இந்திய அரசு முடிவு செய்யும் விஷயம். மிகக் குறைந்த விலையில் கிடைத்தால், அதை வாங்கியதற்காக இந்தியாவை நான் குறை சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெய் ஜனவரி மாதம் ஒரு நாளுக்கு 1.4 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. இது டிசம்பர் மாத இறக்குமதியைவிட 9.2 சதவீதம் அதிகமாகும். ரஷியாவின் மாதாந்திர எண்ணெய் விற்பனையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஈராக் மற்றும் சவுதி அரேபியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

    ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். ஜெர்மனி வழியாக செல்லும் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர். விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிலநடுக்கத்தால் இதுவரை 33 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.
    • முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

    பெர்லின்:

    துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டது.

    முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 100-க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவிட ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி நிலநடுக்கம் பாதித்த துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்து உள்ளது.

    இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை மந்திரி நான்சி பீசர் கூறுகையில், பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மனிக்கு அழைத்து வரும் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களை ஜெர்மனிக்குள் வர அனுமதிக்க விரும்புகிறோம். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வரலாம். இதற்காக விசா கெடுபிடிகள், அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசரகால உதவி என தெரிவித்துள்ளார்.

    • கதீஜாவும் தன்னை போலவே தோற்றம் அளிப்பதை உறுதி செய்த ஷராபன், அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு பேசினார்.
    • தன்னிடம் அழகு கிரீம்கள் இருப்பதாகவும், அதனை உங்களுக்கு தருகிறேன் எனவும் ஆசைகாட்டி கதீஜாவை நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.

    தெற்கு ஜெர்மனியில் உள்ள முனிச் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஷராபன். இவரது காதலன் ஷேகிர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஷராபன் தலைமறைவாக இருக்க விரும்பி உள்ளார்.

    இதற்காக அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் உதித்துள்ளது. அதாவது தன்னை போல தோற்றம் அளிக்கும் ஒரு பெண்ணை சமூக வலைதளங்களில் தேடி உள்ளார். அப்போது முனிச் பகுதியில் வசிக்கும் அல்ஜீரியாவை சேர்ந்த கதீஜா (23) என்ற இளம்பெண்ணை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

    கதீஜாவும் தன்னை போலவே தோற்றம் அளிப்பதை உறுதி செய்த ஷராபன், அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னிடம் அழகு கிரீம்கள் இருப்பதாகவும், அதனை உங்களுக்கு தருகிறேன் எனவும் ஆசைகாட்டி கதீஜாவை நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.

    அதை நம்பி கதீஜா சென்ற போது ஷராபனும் அவரது காதலரான ஷேகிரும் சேர்ந்து கதீஜாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் கதீஜாவை கத்தியால் சரமாரியாக 50 முறைக்கு மேல் குத்தி கொலை செய்துள்ளனர்.

    பின்னர் கதீஜா உடலை சாக்கு பையில் கட்டி காரில் மறைத்து வைத்துவிட்டு ஷராபன் காதலனுடன் தலைமறைவாகி விட்டார்.

    இதற்கிடையே ஷராபனை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தேடிய போது அங்குள்ள காட்டு பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காருக்குள் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பினர். முதலில், காரில் கொலை செய்யப்பட்டு கிடந்தது ஷராபன் என அவரது பெற்றோர் கருதினர். ஆனால் டி.என்.ஏ. பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது அல்ஜீரியாவை சேர்ந்த கதீஜா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஷராபன் தலைமறைவாக இருப்பதற்காக காதலனுடன் சேர்ந்து கதீஜாவை கொலை செய்ததும், பின்னர் காதலனுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    • தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தாக்குதல் தீவிரவாதிகளாலும் மற்றவை தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களாலும் நடத்தப்பட்டன.

    இந்நிலையில ஜெர்மனியின் வடக்கு பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளை குறிவைத்து இன்று கத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் ப்ரோக்ஸ்டெட் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியபோது மர்ம நபர் தாக்குதல் நடத்தினான். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்துவதற்காக, ஹம்பர்க்-கீல் இடையிலான வழித்தடத்தில் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

    • உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி ஆகியவை ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.
    • உக்ரைன் வீரர்களுக்கு ஹெல்மெட் வழங்கப்படும் என ஜெர்மனி ராணுவ மந்திரி அறிவித்தார்.

    பெர்லின்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போரில் அமெரிக்காவும், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அந்த நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, ஜெர்மனி ராணுவ பெண் மந்திரியான கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் ஹெல்மெட்டுகளை வழங்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிநவீன ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில், உக்ரைன் வீரர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் ஜெர்மனி ராணுவ மந்திரியின் இந்த அறிவிப்பு கேலிக்குள்ளானது. சமூக வலைத்தளங்களில் பலரும் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட்டை கேலி செய்து பதிவுகளை வெளியிட்டனர்.

    இந்த சர்ச்சை அடங்குவதற்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் தனது மகனை ராணுவ ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றது விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, ஜெர்மனியின் ஆயுத படைகளை மேம்படுத்த தவறிவிட்டதாக கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

    இந்நிலையில், கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட் ராணுவ மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஒலாப் ஸ்கோல்சிடம் வழங்கியதாகவும், அவர் அதை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    • நாஜி வதைக்கூடங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
    • தண்டனை பெற்ற பர்ச்னர் கடந்த 1943 முதல் 1945 வரை ஸ்டட்ஹாப் வதை முகாமில் வேலை செய்துள்ளார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் ராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூட்ங்களாக செயல்பட்டன. நாஜி கான்சன்ட்ரேசன் கேம்ப் என அழைக்கப்பட்ட இந்த சித்ரவதை கூடங்களில் ஆயிரக்கணக்கான கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

    இந்த நாஜி வதைக்கூடங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வதைக்கூடங்களில் பணியாற்றி கைதிகளின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், நாஜி வதைக்கூடத்தில் 10500 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 97 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். நாஜி வதை முகாமில் செயலாளராக பணியாற்றிய இம்கார்டு பர்ச்னர் என்ற அந்த மூதாட்டி, 11,412 பேரின் கொலைகளுக்கு உதவியதாக முதலில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இறுதி விசாரணையில் 10500 பேரின் கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 2 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறை தண்டனை வழங்கி இட்ஸேஹோவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றங்கள் நடந்தபோது அவரது வயது 18 வயது என்பதால், சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    பர்ச்னர் கடந்த 1943 முதல் 1945 வரை ஸ்டட்ஹாப் வதை முகாமில் வேலை செய்துள்ளார். இந்த வதை முகாமில் சுமார் 65,000 பேர் பட்டினி மற்றும் நோயினால் இறந்தனர். அவர்களில் போர்க் கைதிகள் மற்றும் நாஜிகளின் அழிப்பு பிரச்சாரத்தில் சிக்கிய யூதர்களும் அடங்குவர்.

    • ‘அக்வாடோம்' என பெயரிடப்பட்ட இந்த மீன் தொட்டியில் சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு 100 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 1,500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன.
    • பாதுகாப்பு நடவடிக்கையாக ஓட்டலில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் 'ராடிசன் புளூ' என்கிற பிரபல நட்சத்திர ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் மையப்பகுதியில் 52 அடி உயரம் கொண்ட கண்ணாடியால் ஆன ராட்சத மீன் தொட்டி இருந்தது. இது உலகின் மிகப்பெரிய நிற்கும் உருளைவடிவிலான மீன் தொட்டியாக அறியப்பட்டது.

    'அக்வாடோம்' என பெயரிடப்பட்ட இந்த மீன் தொட்டியில் சுமார் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு 100 வெவ்வேறு இனங்களை சேர்ந்த 1,500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை இந்த ராட்சத மீன் தொட்டி உடைந்து, சிதறியது. அதை தொடர்ந்து தொட்டியில் இருந்து வெளியேற தண்ணீர் ஓட்டலுக்கு வெளியே வந்து சாலையில் ஆறாக ஓடியது.

    தொட்டியில் இருந்த நூற்றுக்கணக்கான அரியவகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து செத்தன. மின்தொட்டி உடைந்து கண்ணாடிகள் சிதறியதில் 2 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக ஓட்டலில் இருந்த விருந்தினர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    இதற்கிடையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டலுக்குள்ளும், வெளியிலும் தரையில் கிடந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த டஜன் கணக்கான மீன்களை மீட்டனர். அவை பல்வேறு மீன் தொட்டிகளில் விடப்பட்டன.

    1,500 மீன்களில் எத்தனை மீன்கள் செத்தன, எத்தனை மீன்கள் காப்பாற்றப்பட்டன என தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் பெரும்பாலான மீன்கள் இறந்துவிட்டதாக ஓட்டல் ஊழியர் ஒருவர் கூறினார்.

    ஓட்டலுக்குள் வெப்பநிலை, மைனஸ் 6 டிகிரிக்கும் குறைவாக சென்றதால் மீன் தொட்டியின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

    • ஜெர்மனி வெளியுறவுத் துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
    • பல சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பின், இந்தியாவிற்கு வருகை தருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரி அன்னாலெனா பேர்பாக் தெரிவித்தார். இதுதொடர்பாக அன்னாலெனா பேர்பாக் கூறியதாவது:

    ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் கடைசி மாதங்களில் நான் இந்தியாவிற்கு வருகை தருகிறேன்.

    ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்ற சில நாட்களில் இந்த பயணம் அமையவுள்ளது.

    இந்திய பயணத்தின்போது தற்போதைய சூழலில் அவசர கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களான காலநிலை நெருக்கடி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும்.

    வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயகமாகவும் உள்ள இந்தியா அனைத்து உள் சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் பாலமாகவும் உள்ளது.

    உக்ரைனில் ரஷிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஜி20 உள்ளது, இறுதியில் இந்தியாவிற்கும் நன்றி. இந்தியா ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது என தெரிவித்தார்.

    ×