search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்தி தாக்குதல்"

    • அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கும் இன்று காலை திடீரென மோதல் ஏற்பட்டது.
    • பலத்த காயம் அடைந்த சகோதரர்கள் 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாதவரம்:

    மாதவரம் பொன்னியம்மன் மேடு திருமலை நகர் முதல் தெருவில் வசிப்பவர் வெங்கடேஷ். இவரது மகன்கள் சுரேஷ் (வயது 26), சீனிவாசன் (24), ஸ்ரீகாந்த் (20).இவர்களில் சுரேஷ் சாப்ட்பேர் நிறுவனத்திலும், சீனிவாசன் தனியார் வங்கியிலும் வேலைபார்த்தனர்.

    ஸ்ரீகாந்த் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அவர்களது பெற்றோர் ஆந்திரா சென்றனர். வீட்டில் இருந்த அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கும் இன்று காலை திடீரென மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் கத்தியால் அண்ணன்கள் சுரேஷ், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த சகோதரர்கள் 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாதவரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி தாக்குதல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சில தாக்குதல் தீவிரவாதிகளாலும் மற்றவை தீவிர மனநோயால் பாதிக்கப்பட்ட நபர்களாலும் நடத்தப்பட்டன.

    இந்நிலையில ஜெர்மனியின் வடக்கு பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளை குறிவைத்து இன்று கத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் ப்ரோக்ஸ்டெட் ரெயில் நிலையத்தை ரெயில் நெருங்கியபோது மர்ம நபர் தாக்குதல் நடத்தினான். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்துவதற்காக, ஹம்பர்க்-கீல் இடையிலான வழித்தடத்தில் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 

    ×