என் மலர்
ஆசிரியர் தேர்வு
- இது இரண்டு கதாநாயகர்களை கொண்ட கதை என்று கூறப்படுகிறது.
- படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேன் நடிப்பில் வெளியான படம் 'தலைவன் தலைவி. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலையும் குவித்தது.
இதையடுத்து, இயக்குநர் பாண்டிராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் இது இரண்டு கதாநாயகர்களை கொண்ட கதை என்றும் கூறப்படுகிறது. மேலும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.
- டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பின்னர் அவற்றை ரத்து செய்யும்போது அவற்றுக்கான 'ரீபண்டு' பணம் மிகவும் குறைவான அளவிலேயே வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இந்த விதிமுறையில் இந்திய விமான போக்குவரத்தை நிர்வகிக்கும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த 2 நாட்களுக்குள் பயணிகள், எந்த கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ செய்யலாம் என புதிய வரைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
நடப்பு ஐ.பி.எல் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்பனை செய்ய அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தின் டியாஜியோ நிறுவனத்தின் இந்திய பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஆர்.பி.சி. அணியை நிர்வகித்து வருகிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் அணியை விற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவால் உருவாக்கப்பட்ட ஆர்.சி.பி. அணியை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டியாஜியோ நிறுவனம் வாங்கியது. ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை நடப்பு தொடரில் கைப்பற்றி அசத்தியது.
இதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில் ஆர்.சி.பி. அணியை விற்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
- கைதான 3 பேர் மீதும் 6 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோவை:
மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலனுடன் காரில் விமான நிலையத்தின் பின்புறம் பிருத்தாவன் நகர் காட்டுப்பகுதியில் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், மதுரையை சேர்ந்த குணா என்ற தவசி ஆகிய 3 பேர் காதலனை அரிவாளால் வெட்டி விட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலத்காரம் செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் 3 பேருக்கும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் 6 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரிடமும் கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான், நேற்று இரவு நேரில் சென்று, ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் 3 பேரையும் வருகிற 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
- பீகாரில் இன்று ஜனநாயகக் கொண்டாட்டத்தின் முதல் கட்டம்.
- முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பீகாரில் இன்று ஜனநாயகக் கொண்டாட்டத்தின் முதல் கட்டம். சட்டமன்றத் தேர்தலின் இந்தக் கட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில், முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் பிரதமர் ராஜினாமா செய்தார்.
- அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஒலி பதவி விலகினார். இதனால் கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவர் மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள 10 கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. இதில் CPN (மாவோயிஸ்ட் மையம்), CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சிகளும் அடங்கும்.
CPN (மாவோயிஸ்ட் மையம்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்பகமல் தஹால் பிரசந்தா ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சி தலைவர் மாதவ் குமார் நேபாள் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
10 கட்சிகள் இணைந்துள்ள புதுக்கட்சிக்கு நேபாளி கம்யூனிஸ்ட் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரும்பாலான கம்யூஸ்ட் கட்சிகளில் உள்ள மாவோயிஸ்ட் பெயர் கைவிடப்படுகிறது. முக்கியமாக மாவோயிஸ்ட் மையம் கட்சி கைவிடுகிறது.
- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் இன்று பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர். அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டனர்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்து, பின்னர் கம்பேக் கொடுத்ததை பாராட்டியுள்ளார்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 2017-ல் பிரதமரை சாம்பியன் கோப்பை இல்லாமல் சந்தித்தோம். தற்போது சாம்பியன் கோப்பையுடன் சந்தித்தோம். பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்க விரும்புகிறோம் என்றார்.
- அரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.
- பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்.
வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் ஹைட்ரஜன் குண்டு உள்ளது. அதை பயன்படுத்தினால், மோடி ஆட்டம் கண்டுவிடுவார் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த வாக்கு திருட்டு மோசடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. காங்கிரசின் வெற்றியை பா.ஜனதாவின் வெற்றியாக மாற்றம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டது.
அரியானாவில் ஒரே நபர் 10 வாக்குச்சாவடியில் 22 முறை வாக்களித்து உள்ளார். 22 முறை வாக்களித்த நபரின் புகைப்படம் பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவருடையது.
அரியானாவில் மொத்த வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டு உள்ளன. மொத்த வாக்குகளில் 12.5 சதவீத வாக்குகள் திருடப்பட்டுள்ளது. 8-ல் ஒரு வாக்கு அரியானா தேர்தலில் திருடப்பட்டது. முகவரியே இல்லாமல் 93 ஆயிரம் வாக்குகள் இருந்தது.
ஒரே நபர் வெவ்வேறு அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்கு அளித்துள்ளனர். பாதாஸ்பூர் என்ற இடத்தில் 14 முறை ஒருவர் வாக்கு அளித்துள்ளார். வாக்கு திருட்டால்தான் அரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஜனநாயகத்தை அழிப்பதில் பா.ஜனதாவின் புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) ஆகும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் இதே மோசடி நடந்தது. அனைத்து கருத்து கணிப்பும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்தால் அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கும்.
வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது. முக்கிய கண்காணிப்பு கேமரா ஆவணங்களை தேர்தல் ஆணையம் அழித்து உள்ளது. முறைகேடுகளால்தான் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. போலி புகைப்படங்களை நீக்கும் மென்பொருள் வசதி தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஒரே நபர் ஒரே நாளில் பல வாக்குகளை அளிக்க தேர்தல் ஆணையம் எப்படி அனுமதித்தது? வாக்கு திருட்டின் மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
வாக்கு திருட்டில் ஈடுபடும் மோடியும், அமித் ஷாவும் பதவியில் இருக்க தகுதியற்றவர்கள். பிரதமர் மோடி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டார். வாக்கு திருட்டு ஒரு தொகுதியிலோ ஒரு மாவட்டத்திலோ மட்டும் அல்ல நாடு முழுவதும் நடக்கிறது.
இவ்வாறு ராகுல்காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார். கிரண் ரிஜிஜு "தேர்தல் பீகாரில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி அரியானா பற்றி கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். பீகாரை பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை. ஆகவே, கதையை அரியானாவுக்கு மாற்றுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்பட்டது.
இதற்கிடையே, ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
இத்தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ரஜினி- கமல்- சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அறிவிப்பு ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.
1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக 'அருணாச்சலம்' படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

- பாஜகவின் தேர்தல் வெற்றிகள் பெரும் சந்தேகங்களைத் தருகிறது.
- வலுவான ஆதாரங்களுடன் என் சகோதரர் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார்.
அரியானாவில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இந்தநிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை வலுவான ஆதாரங்களுடன் என் சகோதரர் ராகுல் காந்தி நிரூபித்துள்ளார்.
பாஜகவின் தேர்தல் வெற்றிகள் பெரும் சந்தேகங்களைத் தருகிறது. வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து மக்கள் தீர்ப்பையே திருடுவது அம்பலமாகியுள்ளது, ஆதாரங்கள் வெளியிட்ட பின்பும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றிக்கழக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதையடுத்து கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தங்கள் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
- இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
- ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் போட்டியிட்டார்.
அமெரிக்காவில் முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறை இருக்கிறது. இதையடுத்து கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வந்தது.
ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதே போல் மம்தானியை டிரம்ப்பும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் அந்த நகரத்துக்ககு குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் நிறுத்துவேன் என்ற டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியிலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
நியூயார்க் நகரின் முதல் இஸ்லாமிய, இந்திய வம்சாவளி மேயராக தேர்வாகியுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மம்தானி, தனது வெற்றி உரையில் இந்திய முன்னாள் பிரதமர் நேருவின் வரலாற்று சிறப்புமிக்க உரையை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு நேரு பேசிய, "வரலாற்றில் அரிதாகவே வரும் ஒரு தருணம் வருகிறது. நாம் பழையதிலிருந்து புதியதற்கு அடியெடுத்து வைக்கும் போது, ஒரு யுகம் முடிவடையும் போது, நீண்ட காலமாக அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா வெளிப்படும் போது..." என்ற உரையை மேற்கோள் காட்டி மம்தானி பேசினார்.






