search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • தான தர்மங்களைச் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில், திருமாலுக்கும் ஆலயம் இருக்கிறது.

    வருடந்தோறும் இங்கே விழாக்களும் விசேஷங்களும் நடத்தப்படுகிறது என்றாலும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.

    தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா, சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் என அமர்க்களப்படும். நிறைவில், தீர்த்தவாரியின் போது சுற்றுவட்டார ஊர்க்காரர்கள் அனைவரும் நீடாமங்கலம் சிவாலயத்தில் ஒன்று திரண்டிருப்பார்கள். காசிக்கு நிகரான இந்தத் தலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தால் பித்ரு தோஷங்கள் உள்பட 16 வகையான சாபங்களும் தோஷங்களும் விலகும், திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    வைகாசி மாதம் பவுர்ணமியும் விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் அறுக்கு இலையும் அரிசியும் தலையில் வைத்துக்கொண்டு உத்திரகோச மங்கை தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட்புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமயம் இவற்றைச் சிரசில் தெளித்துக்கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டு இருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேக அர்ச்சனை செய்து, பின் தான தர்மங்களைச் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    • இன்று முருகனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடக்கும்.
    • எந்த அபிஷேகத்தை பார்த்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

    விசாக நட்சத்திரம் அன்று முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் நடைபெறும்.

    பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி, வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

    பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்டகடன்கள் தீரும்.

    பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்துபார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகும்.

    சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்களெல்லாம் நண்பர்களாக மாறுவர்.

    இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறக்கும்.

    எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும்.

    மாம்பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வ நிலை உயரும்.

    திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

    அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும்.

    சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும்.

    பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும்.

    தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும்.

    சங்காலே அபிஷேகம் செய்து பார்த்தால் சகல வித பாக்கியமும் நமக்கு கிடைக்கும்.

    • வாசற்படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும்.
    • ஒரு வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது நல்லது.

    தெய்வீகத் தன்மை வாய்ந்த நேர்மறை சக்திகள் நம் வீட்டுக்குள் நுழைந்து நிரந்தரமாக தங்கி நமக்கும் நமது பிற்கால சந்ததியினருக்கும் எல்லாவிதமான நன்மைகளையும் ஏற்படுத்தி நிறைவான வாழ்க்கையை வாழ உதவும் சில எளிய குறிப்புகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்

    ஒருவரது வீட்டில் எப்போதும் நேர்மறையான ஆற்றல்கள் தங்கியிருக்க வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினத்தன்றும் வீட்டு வாசற்படியை சுத்தம் செய்து, அந்த வாசற்படியில் மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வருவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் இப்படி செய்வதால் செல்வ மகளான லட்சுமி தேவி, அந்த வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கி, அந்த வீட்டில் நிறைவான செல்வம் இருக்கும்படி வழிவகை செய்வாள்

    வீட்டின் முன்பாக நிலை வாசற்படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இப்படிச் செய்வதால் அந்த வீட்டிற்குள் நுழைய முயல்கின்ற எதிர்மறை ஆற்றல்களை அந்தப்படிகாரக்கல் ஈர்த்துக் கொண்டு நாம் வாழும் வீட்டை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும்.

    ஒரு வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது அந்த வீட்டிற்கு இருக்கின்ற வாஸ்து குறைகளை போக்குவதோடு வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழையாமல் காக்கிறது. அதிலும் அந்த விநாயகர் சிலை வெள்ளருக்கு மரக்கட்டையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையாக இருந்து அந்த வெள்ளெருக்கு விநாயகர் சிலைக்கு தினம் மலர் சாற்றி தீப தூபம் காட்டி வருவதால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கும் சுவர் அல்லது கதவில் செம்புக் கம்பியால் செய்யப்பட்ட "ஓம்" என்கிற பிரணவ மந்திர வடிவத்தை மாட்டி வைப்பதால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்

    சிவன் கோவில்களில் இருக்கின்ற பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்ற விபூதியை வாங்கி கொண்டு வந்து உங்கள் வீட்டின் வெளிப்புற வாயில் பகுதியின் இரண்டு புறமும் சிறிதளவு போட்டு வைப்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தீய ஆற்றல்களிடமிருந்து பாதுகாப்பை கொடுக்கும்

    உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கின்ற நிலை வாயில் கதவில் "சுவஸ்திக்" சின்னம் அல்லது "திரிசூலம்" சின்னத்தை வரைந்து வைப்பது நல்லது. முருகப்பெருமானின் ஆயுதமான "வேல்" சின்னத்தையும் வீட்டின் கதவுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு மேலாக இருக்கின்ற இடத்திலோ வரைந்து வைப்பது நல்லது. உங்கள் வீட்டின் நிலை வாசலில் இரண்டு புறமும் மஞ்சள் கிழங்கு மாலையை மாட்டி வைப்பது நேர்மறையான ஆற்றல்களை உங்கள் வீட்டுக்குள் நுழைய வழிவகை செய்யும்.

    உங்கள் வீட்டின் வாயிற்படியின் இரண்டு பக்கத்திலும் மரம் அல்லது மண் கொண்டு செய்யப்பட்ட யானை பொம்மைகளை வைப்பதால் மங்களகரமான பலன்கள் அந்த வீட்டில் இருப்பவர்களின் வாழ்வில் உண்டாகும். மேலும் வீட்டு நிலை வாசல் படியின் மேலாக ஒன்று அல்லது ஏழு குதிரைகள் இருக்கின்ற வகையான படத்தினை மாட்டி வைப்பது உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்து விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற செய்யும் குதிரை படம் இல்லாதவர்கள் வண்டி இழுக்கும் குதிரையின் காலில் இருந்து கழண்ட பழைய குதிரை லாடத்தை மாட்டி வைப்பதும் மேற்சொன்ன பலன்களை உங்களுக்கு தரும்.

    தாங்கள் வசிக்கின்ற வீடுகளில் ஏதாவது ஒரு குறையினால் பொருளாதார ரீதியான கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் மஞ்சளில் தோய்த்த ஒரு பருத்தித் துணியில் பூஜையறையில் பூஜை செய்யப்பட்ட ஒரு தேங்காயை எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் சிறிது நாணயங்களை வைத்து முடிச்சி போன்று கட்டி உங்கள் வீட்டு வாயிற்படியில் மேலாக கட்டி வைப்பதால் பணம் சம்பந்தமான பிரச்சினைகளில் உங்களுக்கு நன்மையான பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

    • பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறலாம்.
    • 75 சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும்.

    ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களுக்கும், சாரப்பரிவர்த்தனை பெற்றாலோ, சமசப்தம பார்வை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்று கூறலாம். 75 சதவீதம் ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒரு விதத்தில் சம்பந்தம் பெற்று இருக்கும். இந்த கிரக இணைவு ஜாதகருக்கு யோகமா, சாபமா என்பதை சுய ஜாதகத்தில் 1,5,9 பாவகங்கள் பெற்ற வலிமை, குரு, சனிக்கு அஷ்டம, பாதக ஸ்தானங்களுடன் உள்ள சம்பந்தம், ராகு, கேதுவுடன் உள்ள சம்பந்தத்தை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

    மேலும் இந்த தோஷம் தசா புத்தி அந்தர நாதர்களுடனும், கோட்சாரத்துடனும் சம்பந்தம் பெறும் போதே வினைப்பயனை முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது. ஜோதிட உலகமே தோஷம் என்று கூறும் இந்த குரு, சனி சம்பந்தம் ஒரு சிலருக்கு பெரிய திருப்பு முனையை தந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரை கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

    பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார தலங்களுக்கு சென்றும் பிரச்சனை தீரவில்லை என்று கூறுபவர்கள் தோஷத்தின் வலிமையை முடிவு செய்த பிறகு எந்த முறையில் தோஷத்தை சரி செய்வது என்பதை தீர்மானிக்க வேண்டும். முதலில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்படுபவர்கள் கோட்சாரத்தில் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் வழிபாடு, பரிகாரம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

    குரு, சனிக்கு செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் நீண்ட நாள் வழிபாடும் பெரிய அளவில் செலவில்லாத முறையான அமாவாசை, சிவ வழிபாடு, வயதான ஏழை தம்பதிகளுக்கு உணவு , உடை கொடுத்து ஆசி பெறுதல் போன்ற எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

    குரு, சனிக்கு ராகு, கேது சம்பந்தம் அல்லது அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் இருப்பவர்கள் ராமர் வணங்கிய தேவிபட்டிணம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கொடுமுடி, ஸ்ரீ வாஞ்சியம், திருபுல்லாணி போன்ற பரிகார வழிபாட்டு தலங்களுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன் பெறலாம்.

    • சிலருக்கு பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது.
    • தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

    திருமண விஷயத்தில் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.சில வகையான தோஷங்கள், சில கிரக சேர்க்கைகள், சில தசா, புத்திகள், கோட்ச்சார நிலை போன்ற பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்பது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. திருமணத் தடை செய்யும் தோஷங்களையும் அதற்கான பரிகாரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

    செவ்வாய் தோஷம்

    ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த தோஷம் "செவ்வாய் தோஷம்'' ஜாதக கட்டத்தில் லக்னம், ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். இதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரிவர வில்லை . சுக்கிரனும் செவ்வாயும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் கிரகம் என்பதால் தோஷம் ஏற்பட வாய்ப்பில்லை. பாவக ரீதியாக செவ்வாய் நின்ற இடத்திற்கு ஏற்ப தோஷத்தினால் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பல்வேறு விதி விலக்குகளால் சிலருக்கு தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும் கூட 2,7,8-ம்மிடத்தில் உள்ள செவ்வாய்க்கு 2,7,8-ல் செவ்வாய் உள்ள ஜாதகத்தையும் 4,12-ம் இடத்தில் உள்ள செவ்வாய்க்கு 4,12ல் செவ்வாய் உள்ள தோஷத்தையும் சேர்க்க வேண்டும். பொதுவாக செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் செவ்வாய் கிழமை ராகு வேளையில் சுப்ரமணியரை சிவப்பு அரளி சாற்றி வழிபட்டால் திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

    ராகு - கேது தோஷம்

    செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்தது சர்ப்ப தோஷம். நிழல் கிரகம், சர்ப்பங்கள் எனப்படும் ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    கால சர்ப்ப தோஷம்

    லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் ராகு-கேதுவின் பிடியில் அடைபட்ட நிலையில் இருப்பது காலசர்ப்ப தோஷம்.இத்தகைய அமைப்பை பெற்ற ஜாதகருக்கு 33 வயது வரை வாழ்க்கை போராட்ட களமாக இருக்கும். திருமணம், குழந்தை, தொழில் என எல்லா பாக்கியமும் காலம் தாழ்த்தியே ஏற்படும். காலதாமதமாக திருமணம் செய்வதே நல்ல தீர்வு. தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது. பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். திருமணம் தடைபடுபவர்கள் நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில் சென்று வருவது சிறப்பு.

    கிரகண தோஷம்

    பூமியில் கிரகணம் சம்பவிக்கும் நாளுக்கு முன், பின் 7 நாட்கள் பிறக்கும் குழந்தைகளின் வினைப் பதிவு மிகவும் கடுமையாக உள்ளது. ராகு-கேது, சூரியன்-சந்திரனுடன் செவ்வாய், சனி சம்பந்தம் பெறுபவர்கள் அசுப பலனையும், குரு மற்றும் லக்ன சுபரின் சாரம் பெற்றவர்கள் எதையும் வென்று வெற்றி வாகை சூடுபவர்களாக இருக்கிறார்கள். லக்னம் 7-ம் இடம் சுப வலிமை பெற்று தசா புத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது. 1,7-2,8-ம் இடத்திற்கு கிரகண தோஷ பாதிப்பு இருந்து திருமணம் தடைபட்டால் ராம நாமம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது எழுத வேண்டும்.

    சனி தோஷம்

    கர்மகாரகன் மற்றும் ஆயுட்காரகனாகிய சனி பகவான் மண வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தரக்கூடிய 1, 2, 5, 7, 8 மற்றும் 12-ல் அமர்ந்தால் திருமணம் காலதா மதமாக நடைபெறும். இத்துடன் அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், ராகு-கேது இணைந்தால் தோஷம் இரட்டிப்பாகும். சனிக்கு திரிகோணாபதிகள் மற்றும் குரு தொடர்பு இருப்பின் தோஷம் குறையும்.1, 2, 7, 8, 12-ல் உள்ள சனிக்கு இதே அமைப்புள்ள ஜாத கத்தையும், 5-ல் உள்ள சனிக்கு 5-ல் சனியில்லாத ஜாதகத்தையும் இணைத்தல் சிறப்பு. மேலும் தொடர்ந்து சிவ வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை அகன்று மங்கலம் உண்டாகும்.

    சூரிய தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். 2-ல் அமர்ந்த சூரியன், குடும்பம் அமைவதை காலதாமதப் படுத்துகிறது 7-ல் அமர்ந்த சூரியன் களத்தரத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. 8-ல் அமர்ந்த சூரியன் திருமணத் தடையை ஏற்படுத்தும். மகர, கும்ப லக்னத்தாருக்கு 7, 8-ல் அமர்ந்த சூரியன் விதிவிலக்கு பெறும். ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சூரிய ஓரையில் 1 கிலோ கோதுமை தானம் தருவதுடன் 6 வாரம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    சுக்கிர தோஷம்

    களத்திரகாரகரான சுக்ரன் 7-ல் அமர்வது காரகோ பாவக நாஸ்த்தி. சிலருக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறது. இந்த தோஷம் பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது. வெள்ளிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

    களத்திர தோஷம்

    ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். இந்த தோஷம் அமையப் பெற்ற ஜாதகருக்கு திருப்தியற்ற மணவாழ்க்கை , காலதாமத திருமணம் , களத்தரத்தின் மூலம் பெருமளவு ஆதாயமின்மை, தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும். இவர்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மண வரை சுக்ர ஓரையில் அர்த்தநாதீஸ்வரரை வழிபட வேண்டும்.

    புத்திர தோஷம்

    ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஆண் ஜாதகமாயின் லக்னத்திற்கு 5ம் இடத்தை கொண்டும் பெண் ஜாதகமாயின் லக்னத்திற்கு 5, 9-ம் இடத்தை கொண்டும் குருவின் வலிமையை கொண்டும் புத்திர பாக்கியத்தை தீர்மானிக்கலாம். 5-ம் அதிபதி அல்லது 5-ம்மிடஅதிபதி நீசம், வக்ரம், அஸ்தங்கம், பகை வீட்டில் தஞ்சம் 6, 8.12 ல் மறைவு, 5-ல் நின்ற குரு ஆகியவை புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். புத்திர தோஷம் உள்ள ஜாதகத்திற்கு புத்திர தோஷமற்ற ஜாதகத்தை இணைப்பதே. 5-ம்மிட வலிமை குறைவால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் பஞ்சமி திதியில் மீனாட்சி அம்மனை வழிபட வேண்டும்.

    புனர் பூ தோஷம்

    சனி, சந்திரன் சம்பந்தத்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோஷம். தாலி கட்டும் நேரத்தில் கூட திருமணத்தை நிறுத்தும் வல்லமை படைத்த தோஷம். திங்கள் தோறும் அம்பிகை வழிபாடு மற்றும் பச்சரிசி தானம் செய்ய வேண்டும்.

    மாங்கல்ய தோஷம்

    இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். 8-ம் பாவகம் மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுஸ் ஸ்தானம் அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இது திருமணத் தடையை மிகைப்படுத்தும் தோஷ அமைப்பாகும். 8-ம் இடத்தில் நீச, அஸ்தங்கம் பெற்ற கிரகம் அமர்வது மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தாலும் 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி. வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரையில் வயதான சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்கள் தந்து ஆசி பெற வேண்டும்.

    கிரக இணைவுகள் தரும் தோஷம்

    சிறப்பான மணவாழ்வை தடை செய்வதில் கிரக இணைவுகள் பெரும் பங்கு வகிக்கிறது. சில குறிப்பிட்ட கிரக இணைவுகள் மண வாழ்வையே முறிக்கும் வல்லமை படைத்தவைகள். 6,7,8 ஆகிய பாவக அதி பதிகள் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் பெறுவது. சூரியனுடன் சுக்கிரன், செவ்வாய் இணைவு சந்திரன்-கேது, சுக்கிரன்-கேது, செவ்வாய்-கேது இணைவு பெறுதல். இதே போன்ற கிரக இணைவு பெற்று திருமணம் தடைபடுபவர்கள் அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

    திதி சூன்ய பாதிப்பு

    அமாவாசை, பவுர்ணமி தவிர்த்து ஏனைய திதிகளில் பிறந்தவர்களுக்கு சூரிய ஒளிக்கதிர் ஜனன ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களுக்கு கிடைக்காமல் இருந்தால் திதி சூன்ய பாதிப்பு ஏற்படுகிறது. திதி சூன்ய பாதிப்பு இருப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் தோஷம் விலகும்.

    பிரம்மஹத்தி தோஷம்

    ஜனன ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்று பிரம்மஹத்தி தோஷத்தை உருவாக்கும். இதனால் வறுமை, நிம்மதியற்ற வாழ்க்கை , திருமணத் தடை , குழந்தை பேரின்மை போன்ற பல்வேறு பிரச்சினை உருவாகும்.

    விஷ கன்னிகா தோஷம்

    ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7,8 ஆகிய பாவகங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும் , சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த ஜாதகம் விஷ கன்னிகா தோஷமுடையதாகும். இந்த தோஷமுடைய ஜாதகருக்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது. இத்தகைய தோஷம் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு. 2-வது திருமணமோ வாழ்க்கை இழந்த நபரை திருமணம் செய்யும் போதோ தோஷத்தின் வீரியம் குறையும். எப்படிப்பட்ட திருமண தோஷமாக இருந்தாலும் எந்த விளைவாக இருந்தாலும் தசாபுத்தி கோட்ச்சார கிரகங்கள் தொடர் பெறும் காலங்களில் மட்டுமே சுப-அசுப விளைவுகள் ஏற்படும். ராகு-கேது, செவ்வாய் மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற பொதுவான மூட நம்பிக்கையை கை கழுவி தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய பரிகாரம் செய்து பயன்பெற வாழ்த்துக்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்திராணி தாயார் சிறப்புமிக்கவள்.
    • காயத்ரி மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்ய வேண்டும்.

    கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றது. அந்த பிரச்சனைகளில் நாம் முதல் காரணமாக எடுத்துக் கொண்டாள் இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடாக தான் இருக்கும். ஆனால் இரண்டாவது காரணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக விளங்கும் தாம்பத்திய வாழ்க்கையில் சரி இல்லாத போது தான். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஒருவர் மீது ஒருவர் கோபம் எரிச்சல் போன்ற மனநிலை உண்டாகும். இது திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையில் இருக்கும் தாம்பத்திய வாழ்க்கை மேலும் பாதிக்கும். அதனால் இந்த

    ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

    தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்

    காயத்ரி மந்திரத்தை உச்சரித்து இந்திராணி தாயாரை மனதார வேண்டி பூஜை செய்து வந்தால் திருமணம் தடைப்பட்டு வந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு கூட விரைவில் திருமணம் நடக்கும். ஏன் கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையின்மையால் தினசரி வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் ஒற்றுமை உண்டாகும்.

    இந்திராணி தாயாரை பூஜை செய்து வந்தால் தன்னை வேண்டி பூஜை வழிபாடுகள் செய்பவர்களின் உயிரை காப்பதிலும் மற்றும் முக்கியமாக அவர்களுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கை துணையே அமைத்துத் தந்து அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை முதல் குடும்ப வாழ்க்கை வரை அனைத்தும் சீரும் சிறப்புமாக தரக்கூடியதில் இந்த இந்திராணி தாயார் சிறப்புமிக்கவள். இப்படி இந்திராணி தாயாரை பூஜை செய்து வந்தாள் திருமணம் ஆகாத பெண்களுக்கு குணத்தில் நல்ல ஆண்மகனும், திருமண ஆகாத ஆண்களுக்கும் குணத்தில் நல்ல பெண்களும் இடையில் திருமணம் வெகு சீக்கிரமாக நடக்கும்.

    • கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது.
    • பெரிய கூண்டு கடிகார வாஸ்து பிரகாரம் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    * காலம் பொன்னானது என்பதற்கு ஏற்ப அனைத்து வீடுகளிலும் கடிகாரம் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. மரத்தால் ஆன சாவி கொண்டு இயங்கும் மணியடிக்கும் பெரிய சுவர் கடிகாரங்கள் பண்டைய காலத்தில் வீடுகளில் உபயோகப்படுத்தப்பட்டது. நேரத்தை குறிக்கும் வண்ணம் மணி சத்தம் கேட்கும்.

    * அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சத்தமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எண்ணிக்கையின் நேரத்துக்கு ஏற்ப எண்ணிக்கையில் சத்தமும் கேட்கும் மரத்தினாலான பெரிய கூண்டு கடிகார வாஸ்து பிரகாரம் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    * வாஸ்து என்பது இன்று அனைவரது வாழ்க்கையிலும் அனைத்து இடங்களிலும் பொருள்களிலும் மிக முக்கியமானதாக உள்ளது. கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது. எந்த கடிகாரம் எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை வாஸ்து பரிகாரம் கடைபிடித்தால் நேர்மறை ஆற்றலை உருவாக்குவதுடன் வீட்டில் நல்ல மாற்றங்களையும் தருகிறது.

    * வீட்டு கதவு முன்னால் கடிகாரத்தை தொங்கவிடுதல் கூடாது. வீட்டுக்குள்ளே வீட்டின் அறைகளுக்கு ஏற்றவாறு மரத்தாலான கடிகாரங்களை உபயோகிப்பது மிகவும் நல்லது. அலங்கார கண்ணாடியாலான அலங்கார கடிகாரங்களையும் உபயோகிக்கலாம்.

    • வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்க வேண்டும் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது.
    • வீடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்க வேண்டும் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது. அப்படி அமையாத வீடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * பசு நெய் அல்லது நல்லெண்ணெயால் தினமும், மாலை வேளையில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

    * வீட்டை தினமும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    * வீட்டில் தினமும் வாசனை திரவியங்கள், சாம்பிராணி, தூபம் போட்டு வர வேண்டும்.

    * சங்கு, மயில் இறகு போன்ற பொருட்களை வீட்டில் வைக்கலாம்.

    * வீட்டு முன் வாசலில் எலுமிச்சைப் பழம், பச்சை மிளகாய் போன்றவற்றை கட்டி தொங்க விடலாம்.

    * ஒரு குவளையில் நீர் வைத்து, அதில் எலுமிச்சைப் பழத்தை போட்டு வைக்கலாம்.

    * வீட்டின் நான்கு பக்கங்களிலும் கண்ணாடி அல்லது பீங்கான் குவளையில் கல் உப்பு போட்டு வைக்கவும். வாரம் ஒரு முறை உப்பை மாற்றவும். பழைய உப்பை வாஷ்பேஷனில் கொட்டிவிடவும்.

    * தோஷம் உள்ள இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கவும்.

    * வீட்டில் கணபதி ஹோமம், வாஸ்து தோஷம் செய்யலாம்.

    * வீட்டில் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.

    * வாசல் படிகளில் மஞ்சள், குங்குமம் இட வேண்டும். தலைவாசலில் மாவிலை கட்டி தொங்க விடலாம்.

    * வீட்டில் துளசி மாடம் அமைப்பது நல்லது. அதனை தினமும் நல்ல முறையில் பராமரித்து வழிபட வேண்டும்.

    * ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வேளையில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.

    * வீட்டில் தெய்வீக சுலோகங்கள், இறைவனின் நாமங்கள், மந்திரங்களை ஒலிக்க விடலாம்.

    • சுருட்டப்பள்ளியில் உள்ளது பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம்.
    • தட்சிணாமூர்த்தி, அம்பிகையை அணைத்தவாறு, வேறு எங்கும் காண முடியாத கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    தட்சிணாமூர்த்திக்கான சிறப்புமிக்க ஆலயங்களில், ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலும் ஒன்று. இந்த ஆலயத்தை 'பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைப்பார்கள்.

    இங்கு ஆலகால விஷத்தை உண்ட ஈசன், விஷத்தின் வீரியத்தால் ஏற்பட்ட மயக்கம் காரணமாக அம்பாளின் மடியில் தலை வைத்தவாறு காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தில் குருவின் அம்சமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, அம்பிகையை அணைத்தவாறு, வேறு எங்கும் காண முடியாத கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    இவரை, 'போக தட்சிணாமூர்த்தி' என்றும், 'தாம்பத்ய தட்சிணாமூர்த்தி' என்றும் சொல்கிறார்கள். வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை குத்திட்ட நிலையில் வைத்து, கரங்களில் மான், மழு தாங்கிய நிலையில் உள்ள இவரது கோலம் எழில் மிக்கது. போக நிலையில் 'சக்தி தட்சிணாமூர்த்தி'யாக விளங்கும் இவரிடம் திருமண வரம் கேட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    குருவருளைப்பெற்று திருமண வேண்டுதல்கள் நிறைவேற சுருட்டப்பள்ளி போக தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

    • ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று சொல்வார்கள்.
    • சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

    எந்தவொரு மனிதனுக்கும் கண்திருஷ்டி ஏற்படுவது இயற்கை. சிலரது பார்வையால் ஏற்படும் கதிர்வீச்சுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன.

    கண்திருஷ்டியால் ஓகோ என்றுதொழில் செய்து பொருள் ஈட்டியவர்கள், நிலைதடுமாறும் சூழ்நிலையைச் சந்திப்பதும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை, குடும்பங்களுக்குள் ஒற்றுமைக் குறைவு, எந்தச் செயலைச் செய்தாலும் தாமதம், தடை இதுபோன்ற நிலைமை ஏற்பட கண்ணேறு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம்.

    அதனால்தான் 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்று சொல்வார்கள். சிலருடைய பார்வைக்கு அவ்வளவு வலிமை உண்டு. எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும். எனவே நாம் நல்ல எண்ணத்தோடு மற்றவர்களைப் பார்த்தால் நம் பார்வையால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பெருந்தன்மை இல்லாதவர்களின் பார்வையே, 'திருஷ்டி'யாக மாறுகிறது. இதுபோன்ற வலிமையான பார்வைகளில் இருந்து தப்பிப்பது நம் கையில் இல்லை. அதற்குரிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள இயலும்.

    இதனை முற்காலத்தில் உணர்ந்த நம் பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு பொட்டு வைக்கும் பொழுது திருஷ்டி பொட்டு என்று ஒன்றைக் கன்னத்தில் வைப்பார்கள். அதே போல் நன்கு ஓடி ஆடி விளையாடும் குழந்தைக்கு இரவு திருஷ்டி சுற்றித்தீபம் ஏற்றி வைப்பார்கள்.

    ஒவ்வொருவருடைய இல்லங்களிலும் வாயிற்படியின் நிலையில் மாவிலை தோரணம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கண்டிப்பாக கட்ட வேண்டும். மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும். இதனால் எதிர்மறைச் சக்திகள் மாறி, நேர்மறை சக்திகள் வீட்டில் வியாபிக்கத் தொடங்குகின்றது. வழிகாட்டும் காலடி மண், மிளகாய், உப்பு போன்றவற்றை சுற்றி நெருப்பிலிட்டு அதிலிருந்து வரும் நெடியைப் பொறுத்து நமது கண் திருஷ்டியை அறிந்து கொள்ளலாம். எலுமிச்சை, படிகாரம், குங்குமம், கற்றாழை, பூசணிக்காய் போன்றவை எல்லாம் திருஷ்டியைப் போக்கும் பொருட்களாகும்.

    வீட்டில் எப்பொழுதும் உயரமான விளக்கு மாடம் அமைப்பது கண்திருஷ்டியைப் போக்கும். அதே போல இல்லத்தில் நுழைந்தவுடன் பெரிய நிலைக்கண்ணாடி இருப்பது போல் வைப்பதும் நல்லது. வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டாலும் எதிரிகளின் தொல்லை குறையும். சிலர் வீட்டில் படிகாரத்தைக் கட்டித் தொங்கவிடுவர். அந்த படிகார உப்பு கரைவது போல, நமது துன்பங்களும் கரையும் என்பது நம்பிக்கை.

    கிராமங்களில் உள்ள பெரியவர்கள் கல் உப்பை திருஷ்டி சுற்றி தண்ணீரில் கரைய வைப்பர். இல்லத்தில் கண்திருஷ்டி விநாயகர் படத்தை வாசல்படியில் நுழையும் இடத்தில், வடக்கு திசை பார்த்து வைக்க வேண்டும். திருஷ்டி பொம்மை படத்தையும் வைக்கலாம். வீட்டின் நுழைவு வாசலில் நந்தி வீதியைப் பார்க்கும் படி வைக்கலாம். அதனால் நமது தடைகள் அகலும். தனவரவு கூடும். வீடுகட்டும் பொழுது திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது வழக்கம். அதில் மற்றவர்களின் கண்பார்வை பதியும் போது திருஷ்டி மாறும் என்பது நம்பிக்கை.

    பெரிய இல்லங்கள் கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் எல்லாம், பாதிவேலை முடிந்த உடனேயே பால் காய்ச்சி விடுகின்றனர். பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடுவர். கிரகப் பிரவேசத்திற்கு வருபவர்களின் எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். எனவே நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். ஹோமங்கள் வைப்பதெல்லாம் நேர்மறை சக்தி, நம் வீட்டில் நிலைத்திருப்பதற்காகத்தான் செய்கின்றோம்.

    • பெரிய அளவில் அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட காலையில் இதை மட்டும் செய்யலாம்.
    • இந்த பரிகாரம் செய்தால் குடும்பம் சுபிட்சம் பெறும்.

    காகத்திற்கு எப்போது வேண்டுமென்றாலும் உணவு வைக்கலாம். தவறே கிடையாது. இருந்தாலும் காலையில் எழுந்து குளித்துவிட்டு, சாமி கும்பிட்டு விட்டு, இரண்டே இரண்டு பிஸ்கட்டுகளை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து காகத்திற்கு வைத்துவிட்டு, சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் வைத்து விடுங்கள். இதை தினமும் உங்கள் பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் கொடுத்த பிஸ்கட்டை காகம் வந்து எடுத்துச் செல்லும்.

    காலை பசியோடு இருக்கும் அந்த காகத்திற்கு நீங்கள் உணவு வைப்பது எவ்வளவு சிறப்பு தெரியுமா. அந்த காகம் தன்னுடைய குஞ்சுகளை ஏதாவது ஒரு மரத்தின், கூட்டில் வைத்துவிட்டு இறை தேட வந்திருக்கும். அப்போது நீங்கள் வைக்கும் பிஸ்கட்டை கொண்டு போய் அந்த குஞ்சுகளுக்கு கொடுக்கும். பசியோடு இருக்கும் தன் பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்த உங்களை அப்போது அந்த காகம் எவ்வளவு தூரம் வாழ்த்தும் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள்.

    உதாரணத்திற்கு நம்முடைய பிள்ளை பசியாக இருக்கிறது. அந்த நேரம் நம்முடைய வீட்டில் சாப்பிடுவதற்கு உணவு இல்லை. அப்போது யாராவது சாப்பாடு கொண்டு வந்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால் உங்களுடைய மனது எவ்வளவு குளிரும். அதேபோல் தான் காகத்திற்கும் உணர்வு இருக்கிறது. பெரிய பெரிய அளவில் செலவு செய்து அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட, காலையில் இந்த ஒரு நல்லதை செய்தால் போதும். குடும்பம் சுபிட்சம் பெறும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும் இவர் திருமேனியில் அடக்கம்.
    • மேஷ ராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

    இந்தியாவில் 2 கால பைரவர் கோவில்கள் உள்ளன. முதல் கோவில் காசியில் உள்ள தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) என்றழைக்கப்படும் கோவில். அதற்கு அடுத்தது தருமபுரி கால பைரவர் கோவில். தருமபுரியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அதியமான்கோட்டையில் இக்கோவில் அமைந்துள்ளது. தருமபுரியில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய உடன் அருகிலேயே கோவில் உள்ளது.

    இந்த கோவிலை கட்டிய பிறகு அதியமான் மன்னர் போர்களில் வென்றார் என்கிறது வரலாறு. இக்கோவில் கட்டப்பட்டு 1200 வருடங்களாகின்றன.

    இவர் கோவிலில் 9 நவகிரக சக்கரத்தை புதுபித்து மேல் கூரையில் ஸ்தாபித்துள்ளார். அதன் வழியாக வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும். ஜாதக தோஷங்கள் விலகும். அன்று முதல் அதியமான் மன்னருக்கும், நாட்டு மக்களுக்கும் தட்சணகாசி காலபைரவர் குலதெய்வமாக விளங்கினார். அன்று முதல் கோட்டையின் சாவி காலபைரவரின் கையில்தான் இருக்கும். இக்கோவிலில் உன்மந்திர பைரவர் உள்ளார் (முதன்மை பைரவர்). இவரின் விஷேசம் 27 நட்சத்திரமும், 12 இராசியும், இவர் திருமேனியில் அடக்கம்.

    மேஷராசிகாரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும், ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். இக்கோவிலில் அதியமான் மன்னர் இருவேளையும் வழிபடுவார்.

    இவர் போருக்கு செல்லும் முன் வாள் வைத்து பூஜை செய்து வழிபட்ட பின்புதான் போருக்கு செல்வார். இதன் அடையாளமாக இக்கோவிலில் மட்டும் வாள் இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமாயின், இக்கோவிலின் வழிமுறையானது. சாம்பபூசனை விளக்கினை காலபைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    ×